பள்ளிக்கூடத்தின் அவசியம்
இன்று நம் நாட்டில் நம் பிள்ளைகள் படிக்கப் பள்ளிக்கூடங்களுக்குத் தேவை அதிகமாகி விட்டது . இந்த 4,5 வருஷங்களாகச் சண்டை ஏற்பட்ட பிறகும் மேன்மை தங்கிய கவர்னர் சர் . ஆர்தர் ஹோப் துரை வந்தபிறகும் , பள்ளிக் கூடங்களில் படிக்கும் பிள்ளைகள் அதிகமாக ஆகிவிட்டதுடன் , அதிகமான எண்ணிக்கையுள்ள பிள்ளைகள் பாஸ் செய்து காலேஜ் வகுப்புகளுக்கு யோக்கியதை உடையவர்களாகவும் ஆகிறார்கள் . இந்தப் பிள்ளைகள் பெரிதும் தங்களுக்குப் போதுமான பள்ளிக்கூடங்கள் இல்லாமல் தவிக்கின்றார்கள் . அதிலும் இவ்வருஷம் அதிகமான தவிப்பு . சென்றவாரம் வந்த மெயில் பத்திரிகையில் சென்னை காலேஜ்களில் படிக்க வரும் பிள்ளைகளின் எண்ணிக்கை அமோகமாய்ப் பெருகிவிட்டது என்றும் , அனேக காலேஜ்களில் இடமில்லை என்று வெளியில் பலகை எழுதி தொங்கவிட்டிருக்கிறது என்றும் , பிள்ளைகள் இடமில்லாமல் தெருத்தெருவாய் அலைகிறார்கள் என்றும் , உதாரணமாகச் சென்னை பச்சையப்பன் காலேஜுக்கு 600 புதுப்பிள்ளைகள் சேர்க்க வேண்டியதற்கு 2000 விண்ணப்பங்கள் வந்து அப்போதே குவிந்து கிடக்கின்றன என்றும் எழுதி...