அய்யாவின் இறுதிப் பேருரை பகுதி - 2
இனிமேல் நாம் இழிமகன் . எனவேதான் , மாற்றிக்கொள்ளவேண்டிய அவசியத்திற்கு வந்துவிட்டோம் ; அவைகளையெல்லாம் பார்த்தோம் , மாற்றி ஆகணும் . சட்டத்திலேயும் , சாஸ்திரத்திலேயும் இருக்கிறதினாலே , முதல்லே அதைக் கேட்டோம் . சட்டத்திலே இருக்கிறது ஒழியவேணும் என்றால் , சட்டம் ஒழிந்தால் உண்டு . சட்டத்திலே ஒழிக்கவில்லையானால் , ஆட்சியை ஒழித்தால்தான் உண்டு . அவ்வளவுக்கு நாம் இப்போது பக்குவமாகணும் . ஆட்சியை ஒழியும்படியாக இல்லாமல் பாதுகாத்துக் கொண்டான் . தனியாக இருந்தால் , எவனும் ஒன்னும் பண்ணமாட்டான் ; கூட்டாக இருந்தால் எல்லாம் ஒன்று சேர்ந்துகொள்வார்கள் என்று 15, 16 நாடுகளாகப் பிரித்தான் . அந்தந்த நாட்டை , மற்ற நாட்டோடு சம்மந்தமில்லை ...