Posts

Showing posts from September, 2017

பெரியார் கருத்துக்களுக்கு பார்ப்பனப் பேரறிஞர்களின் ஒப்பம் தொடர்ச்சி

கண்ணன்   திருவிளையாடலும்   பொய் பாகவதத்திலுள்ள   தெய்வங்களையும்   இந்து   முன்ஷியார்   ஆராய்ச்சி   நூல்   பொய்யாக்குகிறது . அதாவது ,  சிறு   குழந்தையான   கிருஷ்ணன் ,  கங்கை   ஆற்றிலிருந்த   பல   தலைகளைக்   கொண்ட   பாம்புடன்   சண்டை   போட்டு   அடக்கி   அதை   அதன்   குடும்பத்துடன்   விரட்டினான்   என்கிறது   பாகவதக்கதை .  வைதீகக்   குழுவினரான   இக்கழகத்தார்   தொகுத்துள்ள   இந்த   வேதகால   ஆராய்ச்சி   நூலில் ,  கிருஷ்ணன்   பிறந்த   சில   ஆண்டுகளில்   நரிகளின்   தொல்லைக்குப்   பயந்து   யாதவர்கள்   கோகுலத்தை   விட்டுப்   பிருந்தாவனத்திற்குக்   குடியேறினர் .  அங்கிருந்த   நாக   சாதித்   தலைவனான   காளிங்கன்   என்பவனைக்   கிருஷ்ணன்   அடக்கி ,  அக்காளிங்கனையும்   அவனுடைய   இனத்தாரையும்   வேறிடத்துக்குச்   செல்லச்   செய்து   யாதவர்களை   அங்குக்   குடியேறச்   செய்தான் . ( பக்கம்  280)  மற்றும்   அங்குள்ள   மக்கள்   இந்திர   யாக   முறையைக்   கைவிடச்   செய்து   இயற்கை   வணக்க   முறையைக்   கைக்கொள்ளச்   செய்தான்   என்றுள்ளது . கிருஷ்ணனை   அவதாரமாக்கியது   மகாபாரதத்திற்கு   முன்னே   நி