நன்றி எதிர்பாராத பணி



தந்தை பெரியார் என்ற மாபெரும் தலைவரால் பயன்பெற்றவர்கள் - பல் துறைகளில் - கணக்கில் அடங்கவே அடங்காது! அய்யா அவர்கள் சொல்லுவார்கள், நம் மக்களில் பலர், வேலை ஆகவில்லை என்றால்தான் மீண்டும் நம்மை வந்து சந்திப்பார்கள்; வேலை முடிந்துவிட்டது என்றால், அவர்களில் பலர் நம்மைத் திரும்பியே பார்க்கமாட்டார்கள் என்று அனுபவ ரீதியாக, அமைதியாக சிரித்துக்கொண்டே - ஆத்திரமோ, வெறுப்போ கொள்ளாமல் கூறுவார்கள்!

நன்றி என்பது பயன் அடைந்தவர்கள் காட்டவேண்டிய பண்பே தவிர, உதவி செய்தவர்கள் எதிர்பார்க்கக் கூடாத ஒன்று ஆகும்; அப்படி எதிர்பார்த்தால் அது சிறுமைக் குணமேயாகும் என்று அவர்கள் நடத்திய குடிஅரசு வார ஏட்டில் 1938இல் எழுதினார்கள்!

தமது கழகப் பணியையே Thank less job - நன்றியை எதிர்பார்க்காத பணி என்று தான் மகுடமிட்டுச் சொல்வார்கள்!


- கி.வீரமணி நூல்: வாழ்வியல் சிந்தனைகள், தொகுதி – 1

Comments

Popular posts from this blog

தமிழ் காட்டுமிராண்டி மொழி ஏன்? எப்படி? -தந்தை பெரியார்

ஜாதி ஒழிப்பு மாநாட்டில் பெரியார் உரை!

தந்தை பெரியார் விதைத்த விதை