அய்யாவின் இறுதிப் பேருரை பகுதி - 1

நூல் - அய்யாவின் இறுதிப் பேருரை

பேரன்புமிக்க தலைவர் அவர்களேதாய்மார்களேபெரியோர்களே!

இன்றைய தினம் இந்த இடத்திலே சமுதாய இழிவு ஒழிப்பு சம்பந்தமாக சென்னையில் 10 நாள்களுக்கு முன்னால் நடந்த மகாநாட்டின் தீர்மானத்தை விளக்கவும்மற்றும் நம்முடைய கடமைகளை எடுத்து விளக்கவும் - அதன்படி பேரறிஞர்கள் பலர் அத்தீர்மானத்தை விளக்கியும்அது சம்மந்தமான மற்றும் பல அறிவு விஷயங்களை உங்களுக்கு நல்ல வண்ணம் எடுத்து விளக்கினார்கள்.

எல்லா விஷயங்களையும் நல்ல வண்ணம் விளக்கினார்கள்.   என்னையும் ஒரு முக்கியப் பேச்சாளனாக நீங்கள் குறிப்பிடப்பட்டிருப்பதினாலே நானும் சில வார்த்தை சொல்ல கடமைப்பட்டிருக்கிறேன்.

தோழர்களேஇந்தத் தியாகராயர் நகர் என்னும் மாபெரும் பிரபலமான இந்த நகருக்கு - இதற்கு முன்னால் நான் வந்து - நண்பர்கள் சொன்னார்கள் - பத்தாண்டுகளுக்கு மேல் ஆகிறது என்றுஇருக்கலாம்எனக்கு ஞாபகம் வரவில்லைபக்கத்தில் இப்போது நான் வந்ததாக.

சென்னையில் அடிக்கடி அடிக்கடி பேசுகிறேன்என்ன காரணமோஇங்கே வரும்படியான வாய்ப்பு ஏற்படவில்லைஇப்பொழுதுதான் வந்திருக்கிறேன்வரும்படியான வாய்ப்பு ஏற்படவில்லை என்றால்அதனால் சில காரியங்களும் குறைவாக இருக்கும் என்றுதான் நினைக்கிறேன்.

என்னுடைய கருத்துகள் இவ்வளவு தூரம் எட்டியிருக்காத காரணத்தினால்மக்கள் பலருக்குத் தெளிவுபட்டிருக்காதுஎன்ன விஷயம்நம் கழகம் என்னகாரியம் என்ன என்றுஆனாலும்பலருக்குத் தெரிந்து இருக்கலாம்.

என்றாலும்அண்மையில் நடக்கப்போகின்ற  கிளர்ச்சியை முன்னிட்டுசென்னையில் பல பாகங்களிலும் அது விஷயமாகத் தெளிவுபடுத்த பல கூட்டங்கள் போடவேண்டும் என்று தீர்மானித்ததன்படிபல கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டதுஎன்னமோ இது ஒன்று இரண்டுதான் நடந்ததுஇன்னமும் நடக்கலாம்ஜனவரி 26 ஆம் தேதிக்குள் மற்ற பாகங்களிலும் நடக்கலாம்நடக்கவேண்டிய அவசியம் இருக்கிறது.

தோழர்களே!

நாம் பேச்சை தொடங்குவதற்கு முன்பாகநமது நண்பர் உயர்திரு வீரமணி அவர்கள்நம்முடைய கழக லட்சியச் சொல்லை விளக்கினார்கள்நானும் விளக்கும்படி கேட்டுக்கொண்டேன்.

அதிலேநம் கழகத் தோழர்களுக்கு ஒன்றம் கஷ்டம் இருக்காதுபுதிதாக வருபவர்களுக்கும்பகுத்தறிவைப்பற்றி கவலைப்படாமல்மூடநம்பிக்கையில் மூழ்கிக் கிடப்பவர்களுக்கும் கொஞ்சம் சங்கடம் ஏற்பட்டிருந்தாலும் இருக்கலாம்என்னடாகடவுளை இப்படி எல்லாம் சொல்லுகிறான்இருக்காது என்ற நம்பிக்கை இல்லாதவனையும் அவனையும் நாம் முட்டாள் என்றுதான் சொல்லி ஆகவேண்டும்இல்லை என்றால்அவனையும் முட்டாள் என்றுதான் சொல்லி ஆகவேண்டும்.

ஆனாலும்நாங்கள் பகுத்தறிவை அடிப்படையாக வைத்துக் கடவுள் சங்கதி பேசினாலே கொஞ்சம் மரியாதையாகப் பேசுவோம்மானத்தோடு பேசுவோம்பகுத்தறிவு இல்லாதவர்கள்கொஞ்சம் கடுமையாகத்தான் பேசுவார்கள் - நம்மைவிட மோசமாக.

உதாரணமாக சொல்கிறேன்நாலாயிரப் பிரபந்தம் பாடின ஆழ்வார்கள் - தேவாரம்திருவாசகம் எல்லாம் பாடின நாயன்மார்கள் - இந்தப் பசங்க சொன்னதைவிட நாங்கள் அதிகமாகச் சொல்வதில்லைஅதை மனசிலே வைத்துக் கொள்ளுங்கள்நாம் இவனைத்தான் திட்டுகிறோமே தவிரஇவனுடைய புத்தியைத்தான் திட்டுகிறோமே தவிரஅந்தப் பசங்க சொன்னதுபோலஅவர்கள் பெண்டாட்டிபிள்ளைகளை நாம் ஒன்றும் குறை சொல்லவில்லைநீங்கள் நினைக்கனும்என்னடாஇப்படிச் சொல்கிறானே என்று சில பேருக்குக் கோபம் இருக்கும்.

ஆனால்அவங்கள்நாலாயிரப் பிரபந்தம் பாடியிருக்கிறவன்கடவுள் இல்லை என்கிறவனை கொல்லவேணும்அதுதான் கடவுள் பக்தனுக்கு அடையாளம் அப்படியென்று அவன் பாடியிருக்கிறேன்தேவாரம் பாடினவன்கடவுள் இல்லை என்கிறவன் பெண்டாட்டிக் கிட்டேயெல்லாம் நான் படுக்கணும்கடவுளேஎனக்கு அந்த வசதி பண்ணிக்கொடு என்று கேட்டு இருக்கிறான்யார் என்று கேட்பீர்கள்பேர்கூடச் சொல்வேன் - சம்பந்தர் என்கிற ஒரு பக்தன் - பக்தன் என்கிற அந்த அயோக்கியப் பயல்அவன் சொல்லி இருக்கிறான்கடவுள் இல்லை என்கிறவன் பெண்டாட்டிக்கிட்டேயெல்லாம் நான் படுக்கணும் என்றுகடவுளைக் கேட்கிறான்விலக்கி வை என்று.

நாலாயிரப் பிரபந்தத்திலே ஓர் ஆழ்வார் - தொண்டரடிப் பொடி என்கிறவன் - கடவுள் இல்லை என்கிறவனை எல்லாம் வெட்டுவெட்டுவெட்டு என்கிறான்இது பாட்டிலே நடந்ததுகாரியத்திலே எவ்வளவு நடந்தது தெரியுமா?

கடவுளைப்பற்றி அறிவைக் கொண்டு ஆராய்ந்து பாருங்கடா என்று சொல்லிசிந்தியுங்கடா என்று சொன்னான் - அவ்வளவு பச்சையாகக்கூட சொல்லவில்லைபுத்தன்நம்பி விடாதீர்கள்சிந்தியுங்கள் என்றான்கடவுள் நம்பிக்கைக்காரப் பசங்க அவர்களை என்ன பண்ணினார்கள்வெட்டினார்கள்வெட்டிவெட்டிதலை ஒரு பக்கம்முண்டம் ஒரு பக்கம் குவித்தார்கள்இந்த வெட்டினதும்குவித்ததும் கோவிலிலே எல்லாம் இன்னும் சித்திரமாக இருக்கிறதுகல்லிலே அடித்து வைத்திருக்கிறான் - ஒருவன் காலைப் பிடிக்கிறான்ஒருத்தன் தலையைப் பிடிக்கிறான்ஒருத்தன் வெட்டுறான்.

இன்னொரு கூட்டம்சைவக் கூட்டம் - அயோக்கியப் பசங்கக் கூட்டம்அவனுங்ககழுவேற்றினார்கள்கடவுள் இல்லை என்று சொன்னவனையெல்லாம்கழுவு நிறுத்தி - நிர்வாணமாக ஆக்கி - ஆசனத்திலே உட்டுமூன் தலைக்கு மேல வருகிறாற் போலக் கழுவேற்றினார்கள்எத்தனைப் பேரைஎண்ணாயிரம் பேரைஇன்றைக்கு அது உற்சவம் நடக்கிறது - தினமும்புராணம் இருக்கிறதுசரித்திரம் இருக்கிறதுஆனதினாலேகடவுள் இருக்கிறது என்று சொல்கிற அயோக்கியப் பசங்களைப் போலநாங்கள்அவ்வளவு அசிங்கமாகப் பேசவில்லைமுட்டாள்மடையன் என்று சொல்லுகிறோம்அதை நாங்கள் ருசுப் பண்ணுவோம்நம் ஜனங்களுக்குப் புரியாததினாலேஎன்ன இந்தப் பசங்க இப்படி பேசுகிறார்களே என்று நினைப்பீர்கள்அது புரியாதது என்று சொல்லமாட்டேன் - மானமில்லாத தன்மை.

மற்றும் நண்பர்கள் நமக்கு முன்னே பேசியவர்கள்வீரமணி அவர்கள் ஆதாரங்களையெல்லாம் எடுத்துக்காட்டினார்கள்நாம் வாயிலே சொல்லிட்டுப் போறோம்.

இன்றைய தினம்அரசியலில் இருக்கிற அயோக்கியர்கள்அரசியல் சட்டம் செய்த காலத்தில்நம்மையெல்லாம் தாசி மக்கள் எழுதினார்கள்இதற்குமேலே என்ன வேணும் - கடவுள் நம்பிக்கைக்காரர்கள் அயோக்கியப் பசங்கள் என்று சொல்லுவதற்குசட்டம் எழுதி இருக்கானுங்க - தமிழ்நாட்டில் உள்ள மக்கள்நண்பர் வீரமணி சொன்னாப்போலகிறித்தவன்முஸ்லிம்பார்சி தவிர மற்றவன் எல்லாம் இந்துஇந்துவிலே நூற்றுக்கு இரண்டே முக்கால் பசங்களாய் இருக்கிற பார்ப்பானுங்கதவிரபாக்கி 98 சொச்ச சில்லரை பேர் 97 பேர் தேவடியாள் மகனுங்க - பார்ப்பானுக்கு வைப்பாட்டி மகனுங்க - சட்டத்திலே எழுதி வைத்திருக்கானுங்கஇதற்கெல்லாம் காரணம் என்னதிருப்பிச் சொல்லாத காரணம்அவனுங்களைக் கண்டிக்காத காரணம்பார்ப்பானைக் கண்டால்வாப்பாதேவடியாள் மகனேஎப்போ வந்தே என்று கேட்கணும்ஏண்டா அப்படிக் கேட்கிறாய் என்றால்நீ எழுதி வைச்சடாஎன்னை தேவடியாள் மகன் என்றுநான் நிஜமாகவே சொல்கிறேன்நீ தேவடியாள் மகன் என்றுஅதில் என்ன தப்பு?

நம் பெண்டுகளிடத்திலே போய்ச் சொல்லணும் - அம்மாவிளக்குமாறு எடுக்கொள்இந்த அரசியல் சட்டத்தை எடுத்துக்கோதெருவிலே வை - போடு சீவுகட்டையிலே -  அதைக் குத்தி குத்தி என்றுஏம்மாஅரசியல் சட்டத்தை விளக்குமாற்றாலே போடுகிறாய்அதை எழுதின அயோக்கியப் பசங்கஎன்னைப் பார்ப்பானுக்குத் தேவடியாள் என்று எழுதி இருக்கிறான்பின்னே என்னஅவனைக் கொஞ்சிட்டுப் போகணுமா என்று கேட்கவேண்டும்.

ஏன் இதையெல்லாம் சொல்கிறேன் என்றால்இந்த மாதிரியான - பதிலுக்குப் பதிலான முறையை நாம் எடுக்காததினாலேநாதி இல்லை நம்மைப்பற்றிப் பேசுவதற்கு - கேள்வி இல்லை நம்மைப்பற்றிப் பேசுவதற்குநாளைக்குக்கூட நம் ஆள் சிரிச்சிட்டுப் போவான் - நேற்று வந்தான்நாலு அடி அடித்தான்நன்றாகப் பேசினான்அவ்வளவுதான் என்று நின்று கொள்வான்பார்ப்பான் சொல்வான்நேற்று வந்தான் பார்த்தியா நாயக்கன்அவன் என்னென்ன சொன்னான்அவன் வீட்டுல கம்ப்ளைன்ட் பண்ணனும்கவலைப்படுவான்பெண்டாட்டிக்கிட்டே சொல்லிட்டு அழுவான்நமக்கு மான ஈனம் ஒன்றும் இல்லைநாம் சிரித்துவிட்டுப் போய்விடுவோம்.

இதை ஏன் சொல்கிறேன் என்றால்பழக்கத்திலே நம்மை ஈன ஜாதி என்கிறான்ஏன்டா என்றால்நீ கோவிலுக்குள்ளே வரவேண்டாம்நீ வந்தால் சாமி தீட்டாகிப் போய்விடும் என்கிறான்என்ன அர்த்தம்கல்லைத் தொட்டால் தீட்டாகி விடும் என்றால்நம்மை எவ்வளவு கீழ்ஜாதி என்கிறான்சாஸ்திரத்திலே தேவடியாள் மகன் என்கிறான்பார்ப்பானுக்குப் பிறந்தவன் என்கிறான்சூத்திரனுக்குப் பெண்டாட்டியே கிடையாது என்கிறான்சூத்திரச்சி எல்லாம் பார்ப்பானுடைய வைப்பாட்டி மகன் என்று எழுதி இருக்கிறான்இதையெல்லாம் யார் கவனிக்கிறார்கள்இன்னும் அதே மாதிரிப் பல ஆதாரங்கள்.

எத்தனை வருஷமாக இருக்கிறதுஇரண்டாயிரம் வருஷமாக இருக்கிறது - மேலேயே சொல்லலாம்நாசமாய்ப் போகட்டும்சுயராஜ்யம் என்கிறார்களேபரராஜ்ஜியம் இதிலே நம்ம தேவடியாள் மகன் என்று சட்டத்தில் இருக்கிறது - அரசியல் சட்டத்தில் இருக்கிறதுஅப்புறம் நமக்கு என்னதான் கதிநாம் எப்போதுதான் மனுஷன் ஆகிறதுநாடுநம்ம நாடுபார்ப்பான் எல்லாம் பிழைக்க வந்தவன் இங்கே - இந்த நிலையில் இருக்கிற இவ்வளவு பெரிய சமுதாயம்இந்த 1973 லே சட்டப்படி தேவடியாள் மகன் என்று இருந்தால் - சாஸ்திரப்படி தேவடியாள் மகன் என்று இருந்தால் - அனுபவத்திலே ஈன ஜாதிநாலாஞ் ஜாதிதீண்டாத ஜாதி என்று இருந்தால்யார்தான் இதற்குப் பரிகாரம்வேற நாட்டான் நம்மைப்பற்றி என்ன சொல்லுவான்நம் சங்கதியைச் சொன்னால்.

உலகத்திலே தமிழர்களுக்கு இருக்கிறதைப்போல எத்தனையோ பங்கு முஸ்லிம் இருக்கிறான்அவர்களுக்குள் தேவடியாள் மகனே கிடையாதுஈன ஜாதியே கிடையாதுஎல்லோரும் சகோதரர்கள்ஒருத்தனுக்கு ஒருத்தன் தொட்டுக் கொள்ளுவார்கள்ஒருத்தன் சாப்பிட்டதில் சாப்பிடுவார்கள்ஒருத்தன் இலையில் இன்னொருத்தன் சாப்பிடுவான்எச்சில்கூடப் பார்க்க மாட்டான்அதாவதுஅவ்வளவு சகோதரத்துவம்அந்த மதத்தின் தன்மைஅதேமாதிரிபார்ப்பான்கிறித்தவன்கவலைப்படமாட்டான்ஜாதி என்று ஒருத்தனைக் குறை சொல்லமாட்டான்பார்ப்பானும் அதே மாதிரி தங்களுக்குள்ளே மேல் ஜாதிகீழ்ஜாதி கிடையாதுஎல்லாரும் ஒஸ்தி - நாம் எல்லாம் அவனுக்குத் தேவடியாள் மக்கள்இதற்குக் காரணம் என்ன?

நண்பர்கள் ஒன்று சொன்னார்களேஅய்ம்பது வருஷமாய் உழைத்ததிலே ஏதோ கொஞ்சம் மாறுதல்அதுவும்எதிரே நம்மைப் பார்த்துசூத்திரன் என்று சொல்லமாட்டான்வீட்டிலே பேசுவான் - இந்தச் சூத்திரப் பசங்க என்றுதான் பேசுவான்இந்த இழிவிலே இருந்து நீங்கணும்ஏதோ சட்டம்சமத்துவம்கடவுள் இருக்கும் என்று சொன்னால்ஏதோ அதை உதைக்கனோம்கடவுளை நாளைக்குச் செருப்பாலே அடிக்கச் சொல்கிறோம்பல தடவை அடித்தாயிற்றுநாளைக்கும் அடிக்கச் சொல்கிறோம்நம் தாய்மார்களையும் விளக்குமாற்றாலே போடச் சொல்கிறோம்சட்டத்திலே இருக்கிறதை என்ன பண்ணுகிறதுஏதோ நாங்கள் கொஞ்சம் உணர்ச்சியோடு இருக்கிறோம்இன்றைக்கு அவன் வாயை மூடிக்கிட்டு இருக்கிறான்நாளைக்குக் காங்கிரஸ்காரன் வந்துவிட்டான் என்றால்நாளைன்னைக்கு பார்ப்பான் வந்துவிட்டான் என்றால்இல்லைன்னா கம்யூனிஸ்டே வந்துவிட்டான் என்றால்அவன் காசுக்கு என்றால் என்னவேண்டுமானாலும் பண்ணுவானே - அவனல்ல சத்தம் போடணும் எனக்குப் பதிலாக - எங்களைத் தவிர நாதி இல்லையே இந்த நாட்டில்எத்தனை நாளைக்கு நாம் இப்படியே கட்டிக் காத்துக்கிட்டு இருப்போம்!

எல்லாக் கட்சிக்காரனும் ஒன்றாய்ச் சேர்ந்து இன்றைக்கு  இருக்கிற ஆட்சியை ஒழிக்கணும் என்கிறான்ஒழித்தால் ஒழித்துவிட்டுப் போகட்டுமேஎனக்கு ஒன்றும் கவலையில்லைஅப்புறம் என்னஇன்றைக்குத் திருட்டுத்தனமாக மறைவாகப் பேசுகிறவர்கள் - நாளைக்கு வெளிப்படையாகப் பேசுகிறான்பேசுகிறவனை மாலைப் போட்டு வரவேற்கிறான்அவனுக்கு விளம்பரம் கொடுக்கிறான்எனவேதோழர்களேநம்முடைய நிலைமை உலகத்திற்கே தெரியும் மானக்கேடான நிலைமைஇரண்டாயிரம் வருஷமாக இருக்கிற முட்டாள்தனத்தைவிடஇந்த  சட்டத்திலே இருக்கிற இந்துலாவிலும் மற்ற அரசியல் சட்டத்திலேயும் - அது பெரிய முட்டாள் தனம்அதைவிடஇதைச் சொல்லி மாற்றச் செய்யாமல்இந்த ஆட்சியிலே நாம் குடிமகனாக இருக்கிறோமேஅது மகாமகா மானக்கெட்டத்தனம்பொறுக்கித் தின்கிறவனுக்கும் இந்த ஆட்சி வேணும் - வேண்டாம் என்று சொல்லவில்லைமானத்தோடு பிழைக்கிறவனுக்கும் இந்த ஆட்சியை ஒழித்துத்தானே ஆகணும்என்னடாஉன்னாட்டம் நான்என்னாட்டம் நீஎன்னை தேவடியாள் மகன் என்று சொல்றேமாற்றுகிறாயாமூட்டை கட்டுகிறாயாஎன்று கேட்டுத்தானே ஆகணும்இல்லாவிட்டால்விதி - இன்னும் எத்தனை நாள்களுக்கு இப்படியே இருப்பதுஇப்படியே இருப்போம் என்பது என்ன நிச்சயம்நாம் ஒழிந்தால் நாளைக்கு மாற்றிவிடுகிறான் - மாற்றினானேநம்முடைய கலைஞர் கருணாநிதி அவர்கள்கல்தான்யார் வேண்டுமானாலும் பூஜை பண்ணலாம்

ஆனால்முறைப்படி செய்யணும் என்று யாருக்குமே அனுமதி கொடுத்தார்பார்ப்பான் கோர்ட் - சுப்ரீம் கோர்ட் என்றால்பார்ப்பான் கோர்ட் என்று பேர்சிரிக்காதீர்கள்அதிலே தமிழனுக்கு இடமே இல்லைஅப்படிப் போனாலும்அவனுடைய அடிமைதான் அங்கே போவான்அவன் சாஸ்திரத்தைப் பார்த்துத்தான் தீர்ப்புப் பண்ணுவான்கர்ப்பக்கிரகத்திற்குள் போவது தப்பு சாஸ்திர விரோதம்அட முட்டாள் பசங்களாசாஸ்திரம் என்றால் எதுஎப்போது எழுதினதுஎவன் எழுதினான்எவனாவது சொல்லட்டும்ஆகமத்தின்படி எழுதினது என்றான் ஒரு அய்க்கோர்ட் ஜட்ஜ்.  ஒருத்தனோ இரண்டு மூன்று பேரா - பார்ப்பான்கள் ஆதிக்கம் உள்ளது.  பார்ப்பனத்தியால் நியமிக்கப்பட்டவர்கள்என்றைக்கு எழுதினான் ஆகமம்ஒரு அக்கிரமம்ஒரு அயோக்கியத்தனம் இதற்குமேலே உண்டாஎன்றைக்கோஎவனோ பெயர் தெரியாத அனாமதேயம் - எவனாலேயும் சொல்ல முடியாதுஆகமத்தை எழுதிவன் எவனடா என்றால்அவன் சொல்லுவான்வசிஷ்டன் எழுதினான்நாரதன் எழுதினான்யக்ஞவல்கியர் எழுதினான்மனு எழுதினான்வெங்காயம் எழுதினான் என்றுஇந்தப் பயல்களுக்கு வயசு என்ன?

கவனிக்கணும் தோழர்களேநாரதன் 5 கோடி வருஷத்துக்கு முன்னே பிடித்து இருக்கிறான். 5 கோடி வருஷம் - ஒவ்வொரு கற்பத்திலேயும் - ஒரு கற்பம் என்றால், 3 கோடி, 4 கோடி 5 கோடி வயசாம்அப்படி 10 கற்பம் - அப்போதெல்லாம் இருக்கிறான் நாரதன்அப்படி என்று ஒருத்தன் இருந்தானாஇருக்க முடியுமாஅதை வைத்துத் தீர்ப்பு பண்றானே கோர்ட்டிலேஅதனுடைய அர்த்தம் என்ன?  ஆளுகிறவர்கள் எத்தனை அயோக்கியர்கள்ஆளப்படுகிறவர்கள் எத்தனை மானங்கெட்ட பதர்கள் இதைத் தவிர வேறு என்ன சொல்ல முடியும்இதையெல்லாம்விட அக்கிரம்அய்யா சொன்னாரே இப்போது வீரமணிஇந்து என்கிறானே யார் இந்துஇந்து என்கிற வார்த்தைக்கு என்ன அர்த்தம்என்றைக்கு முதற்கொண்டு இந்து வந்தான்நம் தமிழர்க்கு இலக்கியம் என்னென்னமோ இருக்கிறதேஎவ்வளவோ இலக்கியம் இருக்கிறதுபார்ப்பானுடைய இலக்கியங்கள் ஏராளமாக இருக்கிறதுஇராமாயணம்பாரதம்விஷ்ணு புராணம்கந்த புராணம்அந்தப் புராணம்இந்த புராணம் என்று அவனுக்கு.

நம்ம புலவர்களுக்கும் ஏராளமாக இருக்கிறது - பஞ்சகாவியம்அய்ந்து இலக்கணம்அதுஇது என்று.  எதிலேயாவது இந்து என்கிற வார்த்தை இருக்கிறதாநம் நாட்டிலேஎந்தப் புஸ்தகத்திலாவது உண்டாஇந்து என்கிறவன் எப்படி வந்தான் என்பதற்கு அவன் சொல்கிற கதையே அசிங்கமாய் இருக்கிறதேசிந்து நதியின் காரணமாக இந்து ஆகிஇந்து என்று அழைக்கப்பட்டான் என்று.

சிந்து நதிக்கும்நமக்கும் எப்போ சம்பந்தம்ஆரியன் வந்தபோதுதானே சிந்து நதி என்கிறதுஅதைஇந்த நாட்டுப் பழங்குடி மக்களுக்கு இந்து என்று பெயர் என்றான்சொல்லிட்டு மரியாதையாகவாவது போகலையேஇந்து என்றால் இரண்டு ஜாதிஅதிலே ஒருவன் பார்ப்பான்ஒருவன் சூத்திரன்பார்ப்பான் எல்லாம் மேல்ஜாதிசூத்திரன் என்றால் கீழ்ஜாதிசூத்திரன் பெண்டாட்டி என்றால்பார்ப்பானுக்கு வைப்பாட்டிஇது சட்டத்திலேசாஸ்திரத்திலேபழக்கத்திலே என்று சொன்னால்நமக்கு விடியதுதான் எப்போதுஒரு மனுஷனைஎன்னடாஅடே உன் பெண்டாட்டியை... அப்படி என்று சொன்னால்கத்தியை எடுத்துக்கொள்கிறான்தனிப்பட்ட மனுஷனேஉன் பெண்டாட்டியை என்று சொன்னால்கத்தியை எடுத்துக் கொள்கிறான்இத்தனை பேரையும் தேவடியாள் மகன் என்கிறான் - ஒரு பயலுக்கும் மானம் இல்லைமானம் இருந்தால்இந்த நாட்டில் பார்ப்பாரக் குஞ்சு இருக்குமாஇருக்க முடியுமாஒரு பயல் பூணூல் போட்டுக்கிட்டு நம் எதிரிலே வருவானாஎன்னடா அர்த்தம்இந்தப் பயலுக்குப் பூணூல் இருக்கிறதுஅயோக்கியப் பயலே என்ன அர்த்தம்நீ பிராமணன்நான் சூத்திரன் என்று அர்த்தம்அப்படி என்றால் என்னஉன்னுடைய வைப்பாட்டி மகன் என்று அர்த்தம்போடு செருப்பாலே - அப்படி என்று ஆத்திரமல்லவா வரும் உனக்கு மானம் இருந்தால்இன்னொருவன் பெண்டாட்டியை என்றால் என்ன ஆத்திரம் வருமோஅதற்கு மேலே அல்லவா ஆத்திரம் வரணும்உன்னைச் சூத்திரன் என்று ஒருத்தன் சொன்னால்?

நாதி இல்லையேசொல்றதற்கு ஆள் இல்லையேசிந்திக்க ஆள் இல்லையேஒரு ஓட்டுக்கு என்னென்ன கொடுக்கிறான்பெண்டாட்டியைத் தவிர மற்றதை எல்லாம் கொடுக்கிறானே - ஓட்டு வாங்குவதற்குஇதற்குக் கவலையே படமாட்டேன் என்கிறானேமுன்னேற்றக் கழகத்துக்காரன் மற்றவனை எல்லாம் என்னை எல்லாம் வைவான் - இவனுக்கு என்ன கேடுஇந்த வேலையை ஏன் பண்ணிக்கிட்டு இருக்கிறான் என்றுஅவனுக்கு ஓட்டுதான் பெரிதுஅவன் பெண்டாட்டிபிள்ளையைப்பற்றி அவனுக்குக் கவலை இல்லைஇன்னும் கொஞ்ச நாள் போனால்வழக்கத்தில் வந்துவிடும் - பெண்டாட்டியைக்கூட கொடுத்து ஓட்டு வாங்குகிறாற்போல்ஏனென்றால்அந்த உத்தியோகமும்அந்தப் பதவியும் அவ்வளவு உயர்வாய்ப் போச்சு.

எந்த சமுதாயம்எவ்வளவு நாம் முன்னுக்கு வரவேண்டியவர்கள்நாதியற்றுப்போய் காட்டுமிராண்டியாக அல்லவா இருக்கிறோம்சொல்லுங்கள்வெளிநாட்டுக்காரனைப் பார்வெள்ளைக்காரனைப் பாரய்யா!  நீ வேட்டி கட்டிக்கிட்டு இருந்தபோதுஅவர்கள் ஆம்பளையும்பொம்ளையும் அம்மணமாக இருந்தவர்கள்நீ உன் பெண்டாட்டிமகள்அக்காள் தங்கச்சி என்று முறை வைத்திருந்தபோதுஅவர்களுக்கு அக்காள் தங்கச்சி முறை கிடையாதுஅவ்வளவு காட்டுமிராண்டியாய் இருந்தவர்கள்இன்றைக்கு அவர்கள்ஆகாசத்துக்கு அல்லவா பறக்கிறார்கள் - ஆகாசத்துக்கு மேலேயல்லவா போய்விட்டு வருகிறார்கள்சந்திரன் இருக்கிற இடத்திற்கு அல்லவா போய் உட்கார்ந்து விட்டு வருகிறார்கள். 2 லட்சத்து 30 ஆயிரம் மைல் - ஒரு மணிக்கு 5000 மைல் வீதம் அல்லவா பறக்கிறார்கள்இன்னும் அவர்கள் செய்கிற அதிசய அற்புதங்களைப் பார்த்தீர்கள் என்றால்உங்களுக்குப் புரியாதே!

அமெரிக்காவிற்குப் போய் ஆம்பளையுடைய இந்திரியம் கொண்டுக்கிட்டு வருகிறான்இங்கு சைனாவிலேஜப்பானில் போய் பொம்பளையுடைய இந்திரியம் கொண்டு வருகிறான்இரண்டையும் இங்கே கலக்கிபிள்ளை ஆக்குகிறானேஇப்போது நேற்றுமுந்தாநாள் வந்த விஷயத்திலே அவசரப்பட வேண்டியதில்லைஇரண்டு பேருடைய இந்திரியத்தையும் டப்பியிலே வாங்கி வைத்துக்கொள்ளலாம்நமக்கு வேண்டியபோது பிள்ளை உண்டாக்கிக் கொள்ளலாம். 10 வருஷத்திற்கு அப்புறம்இன்றைக்கே பண்ணிக் கொள்ளவேண்டியதில்லைஇப்படியாக அவன் பண்ணுகிற அதிசயம்அமெரிக்காவிலே இருக்கிறான், 10 ஆயிரம் மைல்நாம் இங்கே இருக்கிறோம்போனை எடுத்து இப்படி காதிலே வைத்தான் என்றால்ஹலோ என்றால்அப்போதே நமக்கு இங்கே காதில் கேட்கிறதே - அந்த உதடு ஒட்டுறதற்குள்ளே காதில் கேட்குதய்யா, 10 ஆயிரம் மைலிலிருந்துஅதிலே அரைவாசிப் பேருக்குத்தான் கடவுள்அரைவாசிப் பேருக்கு ஒரு கடவுள்அதுவும் சந்தேகம்ஆனால் நம்பணும்இந்த முட்டாள் பசங்களுக்கு 1000, 2000, 5000 கடவுள் - ஒரு காரியமும் பண்ண முடியவில்லை இந்தக் கடவுள்களாலேகாரியம் பண்ண முடியவில்லை என்றால்சும்மாவா இருக்கிறோம்அவைகளுக்கு எவ்வளவு கோவில்எத்தனைப் பெண்டாட்டிவைப்பாட்டிகல்யாணம்கருமாதிச் செலவுஎத்தனைப் பேருக்குச் சோறுஎவ்வளவு பேருக்கு உற்சவம்?

அரசாங்கம் வரி வாங்குகிறது என்று சொல்கிறானே தவிரமடப் பயல்இது குட்டிச் சுவராகப் போகிறதே இந்தப் பணம் என்று ஒரு பயல்கூட நினைக்கிறதில்லையேகோவிலுக்குப் போகாமல் எவன் இருக்கிறான்கோவிலுக்குப் போகணும்என்கிறான்குளிக்கிறான்முழுகுகிறான்பட்டுக் கட்டிக்கிறான்எட்டிக் குதித்துக்கிட்டுப் போகிறான்ஏன்டா என்றால்தீட்டாகிறது என்கிறான்.

கோவில் கிட்டே போனதும்டக்கென்று வெளியே நின்றுகொள்கிறானேவாசற்படிக்கிட்டேஏன்டாஅங்கே நிற்கிறாய் என்றால்நான் சூத்திரன்உள்ளே போகலாமாஎன்கிறான்எப்போது, 1973 லேநம்ம நாடுநம்ம சமுதாயம்நமக்கு மானம்அவமானம் என்கிறது ஒன்று இருக்கிறது அப்படின்னு சொல்லமுடியுமாஅது பெரிதில்லையேஅதற்காக யார் பாடுபடுகிறார்கள்நாங்கள்தானே மூணே முக்கால் பேருமற்றவன் எல்லாம் வேற வேற கட்சிஒரு கட்சிக்காரன்கூட கடவுளைப்பற்றி பேசவேமாட்டான்ரஷ்யாவிலே கம்யூனிஸ்ட் இருக்கிறான் அவனுக்கு முதல் வேலை கடவுளை ஒழித்தான்கோவிலை இடித்தான்பாதிரியை எல்லாம் வெட்டினான்இங்கே இருக்கிற கம்யூனிஸ்ட் என்ன பண்ணுகிறான்பொறுக்கித் தின்கிறான்மற்ற நாட்டுக்காரன் எல்லாம் என்ன பண்ணுகிறான்?

மனுஷனைப்பற்றி எவனுமே பேசுறதில்லையேசொன்னால் வரும்படியா அதைத்தானே கேட்கிறான்அதைத்தானே பண்ணுகிறான்இவ்வளவு பண்ணினோம்இவ்வளவு பிரச்சாரம் பண்ணினோம்இவ்வளவு மகாநாடு எல்லாம் நடத்தினோம் - எவன் எங்களை ஆதரித்தான்பயப்படுகிறானே - ஆதரித்தால் ஓட்டுப் போய்விடுமேஆதரித்தால் அரசாங்கம் என்ன பண்ணுமோ என்று.

அருமைத் தோழர்களேஇப்போது நமக்கு வேண்டியதெல்லாம் மான உணர்ச்சி வேணும்நமக்கு இருக்கிற இழிவு நீங்கணும்அப்புறம் மேலே போகலாம்போகணும்மனுஷனுக்கு இருக்கிற உரிமை என்ன தெரியுமாமனுஷனுக்கு இருக்கிற சக்திஉரிமைஒவ்வொரு மனுஷனும் குறைந்தது 500 வருஷம் இருக்கலாம். 500 வருஷம் இருக்கலாம்இப்பொழுது இல்லையே, 52 வயசுதான் இருக்கிறோம்சராசரி எனக்கு இப்பொழுது 95; இன்னும் ஒரு பத்துப் பேர் இருப்பான் 100 வயசானவன்இருக்க முடியவில்லையேவெள்ளைக்காரன் வந்ததனாலே இந்த அளவாவது இருக்கிறோம்வெள்ளைக்காரன் வருவதற்கு முன்னேஅவன் வந்த அன்றைக்குக்கூட நமக்கு 10 வயது இல்லை - 7 வயது இந்த நாட்டுக்குச் சராசரிஅவன் வந்ததற்கப்புறம்அவன் வைத்தியம்ஆஸ்பத்திரிஅவனுடைய முயற்சிஅவனுடைய சுகாதாரம் இதெல்லாம் நமக்கு ஏற்றதற்கு அப்புறம் ................................................................ ... மேல்நாட்டிலே 90 வயசு, 75 வயசு இருக்கிறான்ரஷ்யாவிலே கிட்டத்தட்ட 100 வயசு இருக்கிறான்நாமும் இன்னும் 10, 20 வருஷத்திலே 75 வருஷத்துக்கு வந்துவிடுவோம்வெள்ளைக்காரன் 120 வருஷத்துக்கு வந்துவிடுவான்இப்படியே நாளாகநாளாக 500 வருஷம் வரைக்கும் இருப்போம்அதற்கு மேலே வேற என்ன வரணும்இருக்கிறது ஒன்றும் கஷ்டமல்ல - சாகிறதுதான் கஷ்டம்அவ்வளவு வசதிகளை எல்லாம் பண்ணியிருக்கிறோம் நாட்டில்அவ்வளவு அற்புத அதிசயங்களையெல்லாம் கண்டுபிடித்திருக்கிறோம்நமக்கு ஒன்றும் இல்லாததற்குக் காரணம்நாம் தேவடியாள் மக்களாய் இருந்ததினாலே.

நாங்கள் வராதிருந்தால் படிப்பு ஏதுசொல்லுங்கள்சுயமரியாதை இயக்கம் ஆரம்பிக்கிறபோதுநாம் 10 பேருகூட படிக்கவில்லையே, 100-க்குஅது வந்ததற்கு அப்புறம் ஆரம்பித்தோம்அறிவைப்பற்றிசுயமரியாதை இயக்கம் ஆரம்பித்தபோது அதற்கு என்ன கொள்கை தெரியுமோஅய்ந்து கொள்கைகள்.

என்ன கொள்கைகள்?
1. கடவுள் ஒழியணும்
2. மதம் ஒழியணும்
3. காந்தி ஒழியணும்
4. காங்கிரசு ஒழியணும்
5. பார்ப்பான் ஒழியணும்.

அன்றைய முதற்கொண்டு இன்றைய வரைக்கும் இந்த அய்ந்து கொள்கைகள்தான் நடக்கின்றன காந்தியை ஒழித்தான்ஒழித்துவிட்டான்நாம் ஒழிக்கிறதற்கு முன்னே பார்ப்பானே ஒழிந்து போய்விட்டான்காந்தி நம்ம பேச்சைக் கேட்டு நம்ம பக்கம் திரும்பினார்இன்னமும் கடவுளைச் சொல்லி முட்டாள் என்கிறான்உடனே காந்திகடவுளுக்கும்காங்கிரசுக்கும் சம்பந்தம் இல்லைடா என்றார்காங்கிரசுகாரன் கடவுளை இப்போது சேர்க்கவேண்டியதில்லை என்றார்சொன்ன 30 நாளில் கொன்று போட்டானுங்கய்யா அவரைஇவன் ராமசாமி ஆகிவிட்டான்அவனுக்காவது நாதி இல்லைஇவன் காந்தின்னா இந்தியாவிற்கே பெரியவன்எல்லாரும் நம்பி விடுவார்கள் என்று சட்டென்று கொன்று போட்டுட்டான் அவரை.

அடுத்தாற்போல ஒழியவேண்டியவன் காங்கிரசுகாங்கிரசு ஒழிந்ததுஅது ஒன்றும் உருப்படியாகாது - உருப்படியாகாதுஇப்பொழுதே இரண்டு பேர் தொங்குகிறார்களே - இரண்டாகப் பிரிந்தது - ஒன்றுக்கொன்று மானங்கெட்டு திரிகிறதுஇப்போது ஒன்றுக்கொன்று சேர்ந்து பார்க்கலாம் என்றுஇனி என்ன மரியாதை இருக்கப் போகிறதுஎன்ன ஆகப் போகிறது.  இனி எவன் காங்கிரசை ஆதரிப்பான்பொறுக்கித் தின்கிறவனைத் தவிரகாங்கிரசுக்கு என்ன கொள்கை இருக்கிறதென்றுஒருத்தன் கேட்பான்இன்றைக்கு இருக்கிற நம்முடைய காமராசர் வாயிலே ஜாதியை ஒழிக்கணும் என்று ஒரு வார்த்தை வருமாசொல்ல முடியுமாசொன்னால்அவர் காங்கிரசிலே இருக்கக்கூடாதே!

காங்கிரசு வேலையே ஜாதியைக் காப்பாற்றுவதுதானே முதலில் எடுத்ததும்பார்ப்பானாலே உண்டாயிற்று அவன் நன்மைக்கு அவன் பண்ணிக்கிட்டான்போகிறவன் அதை ஒத்துக்கிட்டுத்தானே ஆகணும்காமராசர் நம்மோடு சேர்ந்ததால்கொஞ்சம் காரியங்களைச் செய்தார்பக்தவத்சலம் வாயிலே வருமா ஜாதி ஒழியணும் என்றுஇல்லைசுப்பிரமணியம் வாயிலே வருமா ஜாதி ஒழியணும் என்றுசொன்னாலும்காங்கிரசில் இருக்க முடியாதேஅந்த மாதிரித் திட்டத்தோடு இருக்கிறானுங்கஅது இனிமேல் உருப்படியாகுமா?

முன்னேற்றக் கழகம் ஒழிந்தாலும்காங்கிரசு ஒழிகஜாதி ஒழிக என்கிற சீர்திருத்த உணர்ச்சி உள்ளவர்கள்தான் இனி வருவாங்கஅதனாலேஇனி வளம்பெற முடியாதுகாந்தியும் போய்ட்டான்காங்கிரசும் ஒழிந்து போய்ச்சுகடவுளும் தெருவிலே சிரிப்பாய் சிரிக்கிறதுஅதுதான் வீரமணி சொன்னாருசெருப்பாலே அடித்தார்களே கடவுளைஎன்ன ஆயிப்போயிற்றுசெருப்பாலே அடித்தான்அதனாலே ஓட்டுப் பண்ணவேண்டாம் என்று காமராசர் முதற்கொண்டு தப்பட்டை அடித்தார்கள்என்றைக்கும் வராத அளவுக்கு 200 பேருக்கு மேலே வந்துவிட்டார்களேமுன்னேற்றக் கழகத்துக்காரன் 185 பேர்அவர்களை ஆதரிக்கிறவர்கள் 20 பேர்காங்கிரசுகாந்திகடவுள்வெங்காயம் எல்லாம் சேர்ந்து 20 பேர்கூட வரவில்லையேசாமியைத் திட்டுகிறான் என்று சொல்லுகிறீர்களே - புத்தி இல்லாமல் சொல்லுகிறோமே தவிரசாமியைச் செருப்பாலே அடித்த பிரச்சினை மேலே 200 பேர் வந்துவிட்டார்களேஆனதினாலே மக்கள் அறிவு பெற்றுக்கிட்டு வருகிறார்கள்பயன்படுத்திக்கொள்ள வேணும்அவர்களுக்கு விஷயங்களை எடுத்துச் சொல்லணும் - தெரியாது வெகுப் பேருக்கு.

எனவேதான்இப்போது நாம் முன்னேற்றம் அடையணும்மேலே வருவதற்குள்ளே பள்ளத்திலே இருந்து நிலத்து மட்டத்துக்கு வரணும்அப்புறம் மேலே ஏறணும்.  இப்போது நாம் பள்ளத்திலே கிடக்கிறோம்என்னநாலாவது ஜாதிஅய்ந்தாவது ஜாதிதீண்டப்படாத ஜாதிபார்ப்பானுடைய வைப்பாட்டி மக்கள் இப்படியல்லவா இருக்கிறோம் நாம்இது மாறவேணும்அப்புறம் மேலே போகணும்மாறாது மேலே போக முடியுமோயாரும் கவனிக்கவில்லைகவனிக்காமல் போனால்நாங்கள் சும்மா இல்லாமல் ஏதாவது ஒன்று போனால் ஒன்றை செய்துகிட்டே இருக்கிறோம்நாளுக்கு நாள் கொஞ்சம் மாறிக்கிட்டேதான்  வந்ததுஇன்னும் மாறணும்எங்களால்தான் முடியும் என்று இருக்கிறது நிலைமைவேற எந்தக் கட்சிக்காரனுக்கும் இதிலே கவலை இல்லைஇவங்களோடு சேர்ந்தால் ஓட்டுப் போய்விடுமே என்று பார்க்கிறான்மானம் போறதைப்பத்தி அவனுக்கு வெட்கமில்லைஆகவேநாம் மகாநாடு போட்டோம்இந்த மகாநாடு போட்டதற்குக்கூட காரணம் சொன்னாரேதீண்டாமை இல்லை என்று சட்டத்திலே எழுதிப் போட்டான்எந்த விதத்திலேயும் தீண்டாமை இல்லை என்று சொல்லிவிட்டான்ஆனால்மதத்திற்கு மதம் உண்டு என்று ஒரு அடையாளம் வைத்துவிட்டான் நிபந்தனைஇல்லாதிருந்தால்நாம் அந்தத் தீர்மானத்தின்மேலேயே எல்லாக் காரியத்தையும் நடத்தி இருப்போம்அதுதான் சொன்னேனேகோவிலுக்குப் போகலாம் என்று சட்டமே பண்ணினால்அந்தச் சட்டம் செல்லாதுன்னு ஆயிப்போயிற்றேஅதேமாதிரிதானே சாஸ்திரத்திற்கு விரோதமாய் இருக்கிற எந்தக் காரியமும் இனி செலலாது

Comments

Popular posts from this blog

தமிழ் காட்டுமிராண்டி மொழி ஏன்? எப்படி? -தந்தை பெரியார்

ஜாதி ஒழிப்பு மாநாட்டில் பெரியார் உரை!

தந்தை பெரியார் விதைத்த விதை