தஞ்சையில் பெரியார் அவர்களின் 89 ஆவது பிறந்தநாள் விழா - தொடர்ச்சி
நம்ம நாட்டை நாசமாக்கினது பாப்பான் மாத்திரம் அல்ல. நம்ம புலவன்களும் சேர்ந்து.
(கைதட்டல்) அவன் வடமொழியில் (சமஸ்கிருதத்தில்) எழுதி வைச்சிட்டுப் போயிட்டான். பாப்பான் ராமாயணத்தையும், பாரதத்யும், கந்த புராணத்தையும், வெங்காய புராணத்தையும் வடமொழியில் கொண்டாந்திட்டான். வடமொழியில் கொண்டு வந்தது மாத்திரம் அல்ல. அதை எல்லாம் நம்ம காதிலே கேட்கக் கூடாதுன்னு (பாப்பான்) சொல்லி வைச்சிகிட்டான். அப்படிப் பட்டஆதாரங்களை இந்த முட்டாள் புலவன்கள் தான் தமிழிலே பண்ணி நமக்குள்ளே புக வைச்சிட்டான். இவன் தமிழிலே பண்ணாமலிருந்தால், இவ்வளவு சங்கதி வராது. (சிரிப்பு) இதைத் தான் சொன்னால் ஜனங்கள் சட்டுன்னு கேட்பாங்க. தமிழிலே பண்ணி தமிழிலே பரிகாரம் பண்ணி காடுமேடு சந்து பொந்தெல்லாம் புக வைச்சி எந்த பாப்பானும், எவனைப் பார்த்தாலும் ராமன், கிருஷ்ணன், கந்தன், முருகன் அவன் இவன் கடவுளு.
(கைதட்டல்) அவன் வடமொழியில் (சமஸ்கிருதத்தில்) எழுதி வைச்சிட்டுப் போயிட்டான். பாப்பான் ராமாயணத்தையும், பாரதத்யும், கந்த புராணத்தையும், வெங்காய புராணத்தையும் வடமொழியில் கொண்டாந்திட்டான். வடமொழியில் கொண்டு வந்தது மாத்திரம் அல்ல. அதை எல்லாம் நம்ம காதிலே கேட்கக் கூடாதுன்னு (பாப்பான்) சொல்லி வைச்சிகிட்டான். அப்படிப் பட்டஆதாரங்களை இந்த முட்டாள் புலவன்கள் தான் தமிழிலே பண்ணி நமக்குள்ளே புக வைச்சிட்டான். இவன் தமிழிலே பண்ணாமலிருந்தால், இவ்வளவு சங்கதி வராது. (சிரிப்பு) இதைத் தான் சொன்னால் ஜனங்கள் சட்டுன்னு கேட்பாங்க. தமிழிலே பண்ணி தமிழிலே பரிகாரம் பண்ணி காடுமேடு சந்து பொந்தெல்லாம் புக வைச்சி எந்த பாப்பானும், எவனைப் பார்த்தாலும் ராமன், கிருஷ்ணன், கந்தன், முருகன் அவன் இவன் கடவுளு.
நாம வந்துதான் அதைக் குறை சொல்றதுக்கு ஒரு துணிச்சல் நமக்கு வந்ததே தவிர, நாம உயிருக்கு துணிஞ்சி பேசி, கல்லடிபட்டு, செருப்படிபட்டு, மேலெல்லாம் சாணியால் அடிபட்டு, மலத்திலே எல்லாம் நாம அடிப்பட்டு அவ்வளவு அடியும், உதையும் எல்லாம் வாங்கிகிட்டும் சொல்லிகிட்டும் இருக்கிறதினாலே இப்ப இருக்கிற ஜனங்களையாவது நாம உண்டாக்கினோம். உங்களுக்குப் பிடிக்குதோ, இல்லையோ என் பேச்சை கேட்டுக்கிட்டாவது இருக்கிறீங்க. (சிரிப்பு) முடியாதே பேச, அதுக்கு முன்னே (சிரிப்பு) செருப்பிலே அடிப்பான். அங்கு இருந்து குறிபார்த்து என் மீது கோழி முட்டையிலே மலம் போட்டுவிர்ருன்னு என் மீது அடிப்பான். வீசுவான் கல்லை விற்று விற்றுன்னு.
அத்தனைக்கும் தப்பிச்சிகிட்டு நண்பர் இங்கே சொன்னாப்பிலே இங்கே இருக்கிறவங்க எல்லாம் நமக்கு பாடிகார்டு ஆக, எந்த ஊருக்கு போனாலும், மாயவரத்திலே இருக்கிற நடராஜன்னு; பட்டுக்கோட்டை அழகிரிசாமின்னு இன்னும் ஊர் ஊரா ரொம்ப பேர் இருந்தாங்க. இவங்க எல்லாம் என் கூட வந்து இருப்பாங்க. 40, (43) வருஷமாக (இப்பிரச்சாரம்) கத்துகிறோம். பேசுகிறதை ஏற்றுக் கொள்ளத்தான் பக்குமடையச் செய்யத்தான் ஆச்சுதே தவிற நம்புகிற அளவுக்கோ நம்பி நடந்துகிற அளவுக்கோ மக்களைப் பக்குவப்படுத்த நம்மலாலே முடியலே. இந்தத் துறையிலே நாம ஒருவர்தான் பாடுபடுகிறோம். நம்ம ஒரு (திராவிடர்) கழகம்தான் பாடுபடுது. நமக்கு விரோதமா 100 க்கணக்கான கழகம் இருக்குது. நம்மளவனே எதிரியாக ஏராளமாய் இருக்கிறான். ஒவ்வொரு பாப்பானும் ஒரு கழகமா, ஒரு பத்திரிகை மாதிரியாய், ஒவ்வொருத்தனும் பிரச்சாரம் பண்றான். நாங்கள் எத்தனை பேர் பண்ணுவோம். தவிரவும் இதை வைச்சி பிழைக்கிறவங்க அல்ல. அவுங்க அவுங்களுக்கு ஒரு வேலை. அவுங்க அவுங்க பிழைக்கிறதுக்கு ஒரு வழி. அதைவிட்டுட்டு இதை ஒரு உற்சாகத்தின் மேலே, ஒரு இன உணர்ச்சி மேலே, ஏதோ கொஞ்சம் பாடுபடறாங்க.
நம்மை நம்பறதுக்கு ஆளில்லே, கேட்கிறதுக்கு ஆளில்லையே. வந்திருக்கிறாங்க. இதோ பேசப் போறாங்கன்னா என்னா அவன் சாமி இல்லேம்பான். பாப்பானை திட்டுவான். இதை போயி ஏண்டா கேட்கிறே, அப்படீன்னு தானே சொல்லிகிட்டு இருந்தான். சிகப்பு துண்டிலே, 1000 பேர் 2000 பேர் இருப்பாங்க. பேச ஆரம்பிச்ச உடனே, ஏதாவது சாமீன்னு பாப்பான்னு சொன்னா கொய்யின்னு எல்லாம் எழுந்திரிச்சிடுவான். போயிடுவான் கூட்டத்தைக் கலைக்கணும்கிறதுக்குப் பாடுபடுவான். இது முட்டாள் தனமான காரியங்களுக்கு, காட்டுமிராண்டித் தனமான காரியங்களுக்கு, நம்ம நாட்டிலே இதற்கு இவ்வளவு ஆதரவு இருக்குது. நாளைக்கு எழுதுகிறானே, பத்து லட்சம் வரப் போறாங்க. 5 லட்சம் பேர் வரப் போறாங்கன்னு (மாமாங்கம் பற்றி) பத்திரிகையிலே எழுதுகிறான்.
ஒவ்வொரு காரியத்திலேயே மக்களிடையிலே அப்படி இருக்குது.ஆகவே தான் எங்களுடைய பிரச்சாரத்தின் முக்கியத்துவம் மனித சமுதாயத்தை முன்னேற்றமடையச்செய்யணும். தமிழன் மற்ற நாட்டிலே எப்படி இருந்தாலும், தமிழன், தமிழ்நாட்டிலே தமிழன் ரொம்ப கேடு கெட்டவனாய்ப்போயிட்டான். கொஞ்சம் கூடப் பகுத்தறிவை பயன்படுத்துறது இல்லே. பாப்பானுக்குப் பயந்துகிட்டு இவனுக்கு நல்ல பிள்ளையாய் ஆகிறதுக்கு உத்தியோகஸ்தர்கள், மந்திரிகள் பதவிக்கு வருகிறவர்கள் எல்லாம் (பாப்பானுக்கு ஆதரவாய்) நடந்துக்கிறாங்க. ஆனதினாலே நாம ஒரு சத்தம் தான். எங்கள் ஒரு கழகம்தான். ஏதோ பலமாய் நாங்கள் சொல்லறோம். சொல்றதை அப்படியே கண்ணை மூடிகிட்டு நீங்கள் நம்புங்கோன்னு நாங்கள் கேட்கிறதில்லே. ஏதோ ஆராய்ந்து பாருங்கோ. உங்கள் அறிவைக் கொண்டு நல்லா சிந்தியுங்க. சரி என்று பட்டா நம்புங்க. இல்லாட்டா விட்டுடுங்கோன்னு தான் நாங்கள் சொல்றோமே தவிர, எங்கள் பேச்சை நம்பித்தான் ஆகணும்னு நாங்கள் சொல்லலே. அவுங்க அவுங்களுக்கு உணர்ச்சியாய் பலமாய் கடவுளை நம்புகிறதனாலே நாங்கள் கொஞ்சம் பலமான கடவுள் மறுப்புச் சொற்களினாலே நாங்கள் சொல்றோம். அவ்வளவு தான்.
ஆகவே தோழர்களே! கடவுள் இல்லேன்னு நாங்கள் சொல்றதுக்கு கடவுள் மறுப்பு சொல்றதுக்கு கவலைப்பட வேணாம். கடவுள் இருக்குதா? நாம சொல்றதெல்லாம் சரியாதப்பா? இல்லை, நாம இது வரையிலும் பண்ணிகிட்டு இருக்கிறதெல்லாம் நியாயமா? என்று நீங்கள் ஒவ்வொருத்தரும் சிந்தியுங்கள்.
அடுத்தாப்போலே, இன்றைய அரசியல் நிலைமையைப் பற்றி சில வார்த்தைகள்சொல்லணும். முக்கியமாகச் சொல்ல வேண்டியது, எல்லாரும் சமாதானம் சொன்னாங்க. நானும் சொல்லறேன். என்னா? இப்போன்னு சொன்னால், காங்கிரஸ்காரர் பதவியிலே இருக்கிற வரையிலும், காங்கிரசை ஆதரிச்சேன். ஜனங்கள் எங்களை கேட்கிறாங்க, சிலபேராவது இல்லே சில பேரு நமக்கு ஆகாதவங்க நம்மைப் பற்றி பிரசாரம் பண்றாங்க. என்னடா அவன் பேச்சைக் கேட்கிறீங்க. எவன் அதிகாரத்திலே இருக்கிறானோ அவன் பின்னாலே போறவன். காங்கிரஸ்காரன் இருக்கிறவரைக்கும் அவுங்களை ஆதரிச்சான். பதவி போச்சின்னா உடனே எவன் பதவிக்கு வந்தானோ அவன் காலடியிலே புகுந்துகிட்டான். அப்படீன்னு சொல்றாங்க. நேரிலே நம்மகிட்டே சொல்லாட்டாலும், சரியா விசாரிக்காத ஆளுக, ஆமாம் ஆமாம்ன்னு நினைச்சிடுகிறாங்க.
அதற்கு நமது நண்பர்கள் இங்கே நல்ல விளக்கம் சொன்னாங்க. நான் சொல்லறேன் (1967இல்) பிப்ரவரி மாதம் 22 ம் தேதி வரைக்கும், காங்கிரஸ் வெற்றி பெற வேணும்கிறதுக்கு நாங்கள் பாடுபட்டோம். உங்க எல்லாருக்கும் தெரியும். இங்கெல்லாம் வந்து பல தடவை பேசியிருக்கிறோம். பிப்ரவரி 22ம் தேதி தான் எலெக்ஷன் கடைசி. அன்னைய வரைக்கும் பேசி இருக்கிறோம். எல்லா ஃஊரிலேயும் காங்கிரஸ் பேராலே நிறுத்தின பார்ப்பனர்களைக் கூட ஆதரிச்சோம். பக்தவச்சலம் தொகுதிக்கு நாம போயி இரண்டு கூட்டம் பேசியிருக்கிறோம். மற்றும் இங்கே நம்முடைய திருவையாறு தொகுதி நண்பர் பழனி அவர்களுக்கு கூட பல தடவை போனோம். மற்றும் பல தொகுதிக்கும் போயி பேசினோம். கொஞ்சம் கூட நாங்கள் காங்கிரஸ்காரரை தாக்கவே இல்லை. பொதுக்காரியத்திலே அவர்கள் பண்ணின சில தவறுக்காக மற்ற நேரத்திலே நாங்கள்தாக்கி இருந்தாலும், எலெக்ஷன் போது மனசாரப் பாடுபட்டோம். (சிரிப்பு, கைதட்டல்)சில ஆளுக பேரிலே எங்களுக்கு வருத்தம் இருந்தது. இருந்தாலும் காங்கிரசு வந்தாதானே வாழலாம் இல்லாட்டா பாப்பான் தானே வந்திடுவான், என்கிற பயத்திலே கண்ணை மூடிகிட்டு ஆதரிச்சோம் ஆதரிக்கிறதோடு மாத்திரம் அல்லாமல், முன்னேற்றக் கழகக்காரரை எவ்வளவு வைய்ய வேணுமோ அவ்வளவு வைதோம். (சிரிப்பு) எவ்வளவு கண்டிக்க வேணுமோ அவ்வளவு தூரமெல்லாம் சொன்னோம்.
மக்கள் அதை வாங்கின முறையைப் பார்த்து ஓ நம்ம பேச்சை ஜனங்கள் ஏத்துகிட்டாங்க, அப்படீன்னு சந்தோஷப்பட்டுகிட்டு இருந்தோம் ஒரு சின்னதவறைக்கூட நான் சொல்றேன். ராஜபாளையத்திலே நான் பேசுகிற போது எனக்கு ஒரு தந்தி வந்தது. காமராஜரு 20,000 ஓட்டிலே ஜெயிச்சுட்டாருன்னு (சிரிப்பு) அதை நான் அந்த கூட்டத்திலே சொன்னேன், எல்லாரும் கை தட்டினாங்க (சிரிப்பு) திருவண்ணா மலைக்கு போனேன். அங்கே காமராசர் 15,000 ஓட்டிலே ஜெயிச்சாருன்னு தகவல் வந்தது. எண்ணிப் பார்க்கலே ஓட்டை. கொடுத்தான் நம்ம ஆளுக இச் செய்திகளை (பலத்த சிரிப்பு, கைதட்டல்) அவ்வளவு நம்பிக்கையாய் இருந்தது. பொய் சொல்லலே அவனும். அப்புறம் நான் சொன்னேன், 20 ஆயிரம் ஓட்டல்லய்யா 15 ஆயிரம் ஓட்டிலே அவரு ஜெயிச்சி வந்திருக்கிறாருன்னு. நம்ம புலவர் கோ. இமயவரம்பன் கூட இருந்தார். அவரு என்னிடம் இந்த மாதிரி எல்லாம் சொல்லாதே, அது எலெக்ஷன் முறைக்கு விரோதம் எடுத்ததும் அந்த முடிவு சரியா தெரியறவரைக்கும் ஏதும் சொல்ல மாட்டாங்க. நாமலும் முடிவு சொல்லக்கூடாது. அதுவும் நீங்கள் சொல்லக் கூடாதுன்னாரு. என்னடா இரண்டு தந்தி வந்திருக்குது அப்ப நீங்க நம்பாதீங்கன்னு சொன்னேன். கடைசியிலே சங்கதி (முடிவு) என்னா வந்திட்டுதுன்னா இத்தனாயிரம் ஓட்டிலே (காமராசர்) தோத்துப் போய்ட்டாருன்னு. (கைதட்டல்) நான் வருத்தம்தான்பட்டேன். அவர் தோற்றதுக்கு. ஏன் முன்னேற்றக்கழகக்காரர் வரக் கூடாது? இவுங்க தான் (காங்கிரஸ்) பதவியில் தொடரவேண்டும்னு ஏன் நான் பாடுபட்டேன்னா?
முன்னேற்றக் கழகக்காரரு பாப்பானுடைய கையாளாய் இருந்துகிட்டு வேலை செய்தாங்க. அவுக ஜெயிச்சால் பாப்பான்தான் வருவான். பாப்பான் தான் (ராஜாஜிதான்) ஆளுவான். என்கிறதாக அவுக (தி.மு.க) காட்டிகிட்டாங்க தேர்தலின் போது. பாப்பானுங்களும் நாங்கள் சொன்னபடிதான் அவுக (தி.மு.க) கேட்பாங்க ஆனதினாலே அவுங்களுக்கு ஓட்டு பண்ணுங்கன்னு அவுங்களும் பிரச்சாரம் பண்ணினாங்க. அண்ணாதுரையே பாப்பான்கிட்டே ஓட்டுக் கேட்கிற போது, நான் எனக்காகவா நிற்கிறேன். ராஜாஜிக்காக நிற்கிறேன். அவர் சொன்னபடி தான் கேட்கப்போறேன். அவருக்கு ஓட்டு பண்ணுவதே எனக்கு ஓட்டுப் பண்ணினாப்பிலே அப்படீன்ணிட்டாங்க. அப்படி சொல்லிதான் ஓட்டு கேட்டாரு? இராஜகோபாலாச்சாரி யாரும் பிராமணாளுக்கெல்லாம் அறிக்கை ஒண்ணுவிட்டார் பாப்பாருக்கு. என்னாஅது? அவுகளை (தி.மு.கவை) நம்புங்க. அவுக ராமசாமி நாய்க்கரிட்டே இருந்துவந்தாக அவுகமீது சந்தேகப்படாதிங்க. வர்ரபோதே (அந்த வாசனையை) எல்லாம் கழுவி வைச்சிகிட்டு (பலத்த வெடிச்சிரிப்பு) வந்திட்டாங்க. (பலத்தைகைதட்டல்) கிளீன்னா வந்திருக்கிறாங்க. (சிரிப்பு) ஆனதினாலே நம்புங்க.
உங்கள் பூணூலை பிடிச்சிகிட்டு, ஓட்டுப் போடுங்க. (சிரிப்பு) இவுக இப்படி எல்லாம் சொன்னபோது இவுக பதவிக்கு வந்தால் என்ன பண்ணுவாங்கன்னு நான் இவர்களைப் பற்றி என்னாமா நினைக்கிறது? (சிரிப்பு) (கைதட்டல்) காங்கிரசிலே பூராவும் ஒப்புக்கொள்ளக் கூடிய காரியமாய் இல்லாதது செய்தது. ஆனாலும் கொஞ்சம் செய்திருக்கிறாங்க. காமராஜ் காலத்திலே (13-04-1954 முதல் 2-10-1963 வரை) அதை நாம ரொம்ப பாராட்டியிருக்கிறோம். இவுக (பாப்பாரும் தி.மு.கவும் சேர்ந்து பதவிக்கு) வந்தால் நம்மை ஒழிச்சே போடுவாங்க. நமக்கு விரோதமாகவே நடந்துக்குவாங்க. அண்ணாதுரை தலைமையில் தான் இராசகோபாலாச்சாரி ஆட்சிக்கு பதவிக்கு வந்தாலும் வந்திடுவார். ஆனதினாலே இவுக வரக்கூடாதுன்னு நாம பாடு பட்டோம். எலக்ஷனில்லே நாம எதிர்ப்பார்த்ததுக்கு நேர் விரோதமாய் போச்சி. ஏன் இப்படி போச்சீன்னு எனக்கும் தெரியலே? (சிரிப்பு) காங்கிரஸ் காரனுக்கும் தெரியலே? ஜெயிச்சவங்களுக்கும் (தி.மு.கவுக்கும்) தெரியலியே எப்படி வந்தோம்னு (பலத்த சிரிப்பு கைதட்டல்) எப்படி ஜெயிச்சிங்கன்னு அவரை (அண்ணாவை)கேட்டால் சிரிக்கிறாரு (சிரிப்பு) நீங்க எப்படி நினைக்கிறீங்களோ அப்படிதான் நானும் நினைக்கிறேன்னாரு. (சிரிப்பு கைதட்டல்) என்னமோ ஒரு காரணத்தினாலே (காங்கிரஸ் ஆட்சி) போயிட்டுது. ஆனாலும் நானும் என்னமோ கொஞ்சம் என் புத்தியைச் சரி பண்ணிகிட்டுதான் நான் கேட்டேன். அப்போ எலக்ஷன் ஆயிப்போச்சி. நான் தோத்துப் போயிட்டேன் பாப்பான் ஜெயிச்சிட்டான் அப்படிதான் நான்சொன்னேன். காங்கிரஸ் தோத்துப் போச்சி. நான் தோத்துப்போயிட்டேன் பாப்பான் ஜெயிச்சிட்டான். அப்படித்தான் நான் சொன்னேன். காங்கிரஸ் தோத்துபோச்சி, முன்னேற்றக்கழகக்காரரு ஜெயிச்சிட்டாங்கனு நான் சொல்லவே இல்லை.
நான் (விடுதலை'யில்) எழுதிய முதல் தலையங்கத்திலே பார்த்தால் தெரியும். நான் தோத்துப் போயிட்டேன் பாப்பான் ஜெயிச்சுட்டான். நமக்கு எதிர்காலம் கஷ்டகாலம்தான். ஆனாலும் பயப்படாதீங்க. இதற்கு முன்னே இரண்டு தடவை (பாப்பான் ராஜாஜி) ஜெயிச்சான் ஒழிஞ்சான். ஒரு தடவையாவது கடைசிவரைக்கும் (பதவியில்) இருக்கலே. இப்பவும் அப்படித்தான் ஆகும். ஆனால் நம்மனாலே ஆச்சின்னு சொல்லாதே. அவனாலேயே ஆச்சின்னு சொல்லிக்கலாம்? தயவு செய்து அவுகளுக்கு ஒண்ணும் விரோதமா போகாதீங்க? அப்படீன்ன முதல் நாள் அந்த ரிசல்ட் (சுநளரடவ) வந்த உடனே எழுதின தலையங்கத்திலே நான் அப்படிதான் எழுதினேன்.
எப்படியோ ஒரு 4 நாள் பொறுத்து அண்ணாதுரையே திருச்சிக்கு வந்தாரு. கூட கலைஞர் கருணாநிதி வந்தார். நாவலர் நெடுஞ்செழியன் வந்தாரு. எல்லாருமே என் வீட்டுக்கு (பெரியார் மாளிகைக்கு) வந்தாங்க. எனக்கு வெட்கமாயிருந்தது அவுங்களை பார்த்தபோது (சிரிப்பு) (கைதட்டல்) நான் ரொம்ப அவுங்களை கண்டிச்சிப் பேசி இருக்கிறேன். அவுகளை எதிர்த்து குறை சொல்லி பேசியிருக்கிறேன். அவுக ஜெயிச்சிட்டாங்க. என்னான்னு நினைக்கும் எனக்கு. அவுக நம்மைக் கேலி பண்ணத்தான் வந்திருக்கிறாங்கன்னு (சிரிப்பு) மனசு எனக்குத்தானா தோணிச்சு. உங்களுக்கும் அப்படித்தான் தோணும். அப்புறம் அண்ணா வந்தாரு. பேச ஆரம்பிச்சாங்க. சௌக்கியமா இருக்கிறீயா அப்படி இப்படின்னு. வார்த்தை இல்லாமல் ஏதோ பேச வேணுமேன்னு. அதுக்கும் பதில் சொல்ல எனக்கு வாய் வரமாட்டேன்னுடுச்சி. நான் பாட்டுக்கு பேசாமலே இருந்திட்டேன். அப்ப ஏதோ ஒரு வார்த்தை நான்கேட்டேன் கவர்னர் நல்லவரான்னு, நல்லவர்தான், நாங்க அங்கே போயிட்டு தான் நாங்கள் இங்கே வர்றோம்னாங்க. அப்படிதான் சொன்னாங்க நாங்க அங்கே போயிட்டுதான் இங்கே வர்றோம்ன்னு நான் ரொம்ப சந்தோஷம் தான் என்றேன். அப்புறம் ஒண்ணும் பேசலே. எல்லாரும் கொஞ்ச நேரம் சும்மா இருந்துவிட்டு, நாங்கள் போயிட்டு வர்றோம். எங்களுக்கு வழி சொல்லுங்க. நாங்கள் எப்படி நடந்துக்க வேணும்கிறதுக்கு நீங்க சொல்லுங்க? அப்படீன்னு அண்ணா சொன்னாரு.
அதையும் நான் அதை உண்மைக்கு அல்ல ஏதோ மரியாதைக்கு சொல்றாங்கன்னு. தொந்தரவுஇல்லாது இருக்கட்டும்னு சொன்னதாக நினைச்சேன். நானும் என்னைத் தான் உங்களுக்கு தெரியுமே அதனாலே நான் மேற்கொண்டு ஏதும் சொல்லலே. அதையே தான் சொன்னேன். என்னைத்தான் உங்களுக்கு தெரியுமேன்னேன். சரின்னாங்க அவுங்க சந்தோஷமா புறப்பட்டு போனாங்க. அவுக என்னிடம் வந்ததும் என் மனசுஏதோமாறித்தான்அவுக இங்கு வந்திருக்கிறாங்க மனசிலே எண்ணம் மாறியிருக்குது. ஆனதினாலே, நம்ம ஆளுகளுக்குத் தெளிவு பண்ணிப் போடலாம். இவுக ஏதும் அவர்களோடு ரகளைக்கு போக வேண்டாம்ன்னு சொல்லிடலாம், அப்படீன்னுட்டு என்னை வந்து பார்த்தாங்க. எனக்கு என்னமோ அவர்கள் பேசினது கவர்ச்சியாய் போச்சு அவர்கள் சொன்னது. ஆனதினாலே, ஒருத்தரும் எதிர்ப்பு வேலை வைச்சிக்காதீங்க. நம்மாளான அளவுக்கு அவர்களுக்கு ஆதரவு கொடுக்கலாம். இல்லே நாம சும்மா இருக்கலாம். அப்படீன்னுட்டு நான் எழுதினேன் விடுதலையில்.
நம்ம ஆளுக எல்லாம் கோவிச்சுகிட்டு கடிதாசி எழுதினாங்க. என்னா நீ பிளேட்டைத் திருப்பிப் போட்டிட்டே. (சிரிப்பு கைதட்டல்) நீ அப்படி பேசினே, இப்படி பேசினே, இப்ப நீ திடீரென இப்படி சொல்றியே, என்னா இதிலே நியாயம்? சிலபேருஎன்னைக்கண்டிச்சும் பேசினாங்க. கடிதாசி வருகிற வேகத்தை பார்த்தேன். கண்டிக்கிறதை எல்லாம் பார்த்தேன். ஆமாம் நான் அப்படி தான் சொல்றேன். இஷ்டப்பட்டால் (கழகத்தில்) இரு இல்லாட்டா போயிடுன்னேன்? (கைதட்டல்) அப்படீன்னு எழுதினேன் நான், ஏன்னா? எனக்கு ஆதரிக்க வேணும்கிற எண்ணம் எனக்கு வந்திட்டுது காரணம் நம்ம நண்பர்கள் இங்கு சொன்னது மாதிரி நாங்கள் இன்னமும் அந்த பழைய சுயமரியாதைக் கொள்கைக் காரர்கள் தான் அதிலே பழகினவங்கதான். அதிலே நாங்கள் பக்குவமானவங்கள்தான். அப்படீங்கிறதை எல்லாம் அவுக காட்டி கிட்டாங்க. தெளிவாக காட்டிட்டாங்க.இரண்டாவது நமக்கு வந்த வாய்ப்பு என்னான்னா?
அந்த மந்திரி சபை அமைக்கிற போது ஒரு பாப்பானைக் கூட (மந்திரியாய்) போடலே. நண்பர் சொன்னாப்பிலே மந்திரியாகப் பதவி ஏற்றபோது கடவுளை வேண்டி பிரமாணம் பண்ணவுமில்லே. அவுங்க இவையெல்லாம் பாப்பாருடைய தயவை அலட்சியம் பண்ணி பண்ணினாங்கன்னு தான் அர்த்தமே தவிர வேறெ இல்லை. எனக்கு காதுக்கு வந்தது. ராஜகோபாலாச்சாரி மந்திரியாக ஆகப்பாடுபட்டாரு. ஒருபாப்பானுக்காவது (மந்திரி) கொடுன்னு கேட்டுகிட்டாரு. அண்ணா அதுக்கு மாட்டேன்னுட்டார். அப்படீன்னு வந்து உண்மையான ஆளுக வந்து சொன்னாங்க.அங்கே இருக்கிறவங்க. ஒரு மந்திரி சபையை அமைச்சதிலேயும் போதுமான மெஜாரிட்டி தங்களுக்கு இருக்குது என்பதையும் நல்லா காட்டிகிட்டாங்க.அண்ணா முதலமைச்சராக (06-03-1967இல் பதவி ஏற்றார்) அதுக்குள்ளே இரண்டு பேரும் (ராஜாஜியும், அண்ணாவும்) சண்டையும் போட்டுகிட்டாங்க.
சட்டசபைக்கு தலைவரை நியமிப்பதிலே அண்ணா சி.ப.ஆதித்தனாரை நிறுத்தினாரு. அதையாவது தங்களுக்கு கொடுன்னு கேட்டாரு ராஜாஜி. அதை எப்படி நான் வெளி ஆளுக்கு எப்படி பண்ணமுடியும்?எல்லாம் நமக்குள்ளே இருக்கிறபோது அப்படீன்னு சொல்லிப் போட்டு (அண்ணா) மறுத்திட்டாரு. மறுத்தப் பின் அவரு (ராஜாஜி)ஒரு ஆளை போட்டு போட்டி பண்ணினாங்க. அந்த போட்டியிலே அண்ணா ஜெயிச்சிட்டாரு. நிறையா ஓட்டு இவருக்கு வந்திட்டுது. இவ்வளவெல்லாம் ஆனதுக்கு அப்புறம் அவன் (பாப்பான்) ரகளை கொடுக்கப் போறான்னு தெரிஞ்சிப் போச்சி பாப்பான் தொல்லை கொடுப்பான்னு. நாமும் தொல்லை கொடுத்தா (தி.மு.க ஆட்சி) என்னாவாகிறது? காங்கிரசும் சக்தியற்றுப் போச்சி (சிரிப்பு) விளையாட்டா கூடஇல்லை. அடியோடு போயிடுச்சி. (கைதட்டல் சிரிப்பு) என்னாச்சு? 250 பேருக்கு 50 பேருதானே? சட்டசபைக்கு காங்கிரசு பேரிலே வந்தாங்க. (சிரிப்பு) 200 பேராக வரலே. பாக்கி எப்ப வரப்போவுதோ? எப்போ காங்கிரஸ் ஆள போவுதோ? (சிரிப்பு) ஆனதினாலே, ஒரு ஆட்சி நடக்க வேணும்? இதையும் வேண்டாம்னுட்டா அப்புறம் ஆட்சி எப்படி நடக்கும்? என்பதை எல்லாம் நான் யோசனை பண்ணி (அண்ணாவின் தி.மு.க) ஆட்சியை ஆதரிக்க வேண்டியதுதான் என்கிற முடிவுக்கே வந்திட்டோம். அவுகளும் ஆட்சியில் காரியத்தை எல்லாம் காட்டிகிட்டுவர்றாங்க. ஒண்ணும் விரோதமா நமக்குன்னா? எனக்கா எங்க கட்சிக்காரருக்கா? தமிழ் சமுதாயத்துக்குன்னு. அவரு சொன்ன மாதிரி பதவிக்கு வந்த உடனே அவருக்குத்தான் நாங்க ஒப்பிச்சிக் கிட்டோம்ன்னு சொல்லிட்டாங்க. எந்த அர்த்தத்திலே சொன்னாலும் அதிலே இருந்து மாறமுடியாத மாதிரியான வார்த்தைகள் தானே அதுவெல்லாம்.
அடுத்தாப்பிலே, சுயமரியாதைத் திருமணத்தைச் செல்லும் என சட்டமாக் கிட்டாங்க. எல்லாத்தையும் விட சொல்லவேண்டுமானா இந்தி எதிர்ப்பிலே தற்கொலை பண்ணுகிற மாதிரி தைரியமாய் அடிச்சாங்க. (பலத்த கைதட்டல்) இருமொழித் திட்டம் தமிழ், ஆங்கிலம் தான் ஆட்சி மொழிகள் என்று எவனாலேயும் இது முடியாதே.இது சட்டத்துக்கு விரோதம். வடநாட்டானுக்கு விரோதம். டெல்லி அரசு ஆட்சிக்காரங்களுக்கு விரோதம். துணிஞ்சி தானே இந்தி வேண்டிய தில்லைன்னு சொல்லிவிட்டாங்க.
இப்ப நாமும் சேர்ந்து இந்த ஆட்சிக்கு எதிராக ரகளை பண்றதுன்னு ஆரம்பிச்சோமானா டெல்லிக்கு பணிகிறாங்க. அப்புறம் யாரு(ஆட்சிக்கு) வருவாங்க. டெல்லிக்காரரா பார்த்து இவர்களை விரட்டினாங்கன்னா பரவாயில்லை. நமக்கு அதைப் பற்றிக் கவலை இல்லை.அடுத்தாப்பிலே ஆட்சிக்கு வர்நபோது இன்னும் பலமாக வருவாங்க.(சிரிப்பு) நாமலா அவுகளை விரட்டிடறோம்னா என்னா ஆகும்? நாமலே அவர்களுக்கு தொந்தரவு கொடுக்கிறதுன்னு ஆரம்பிச்சோமானா அவுகளுக்கு உற்சாகம் போயிடுது. ஆனதினாலே, இருக்கிற நிலைமையிலே, அது கெட்ட காரியம் அல்ல. ஆவுகளை ஆதரிக்கிறது.அவுகபேரிலேகெட்டநோக்குடன் சொல்றாப்பிலே ஒண்ணுமில்லே.
நம்மகிட்டே இருக்கிற அன்பிலே நாமலே வெட்கப்படுகிற மாதிரியிலே காட்டிகிறாங்க, நம்மிடம் நிலைமை மனுஷத்தன்மை என்ன ஆகும்? ஆதரிக்கிறதை விட்டு எப்படி தப்பா நினைக்க முடியும்? நான் சொன்னேன். இதற்கு முன்னே அண்ணா அவர்கள் ஜெயிச்ச போது அஞ்சு வருஷம் இவுக இருக்கவேணும்னு நான் ஆசைப்பட்டேன். இப்ப அவர்கள் நடந்துகிறதைப் பார்த்தால் இவுகளே கடைசி வரைக்கும் இருந்தால் தேவலேன்னு நினைக்கிறேன். (சிரிப்பு கைதட்டல்) அப்படீங்கிற அளவுக்கு நான் சொன்னேன். அதிலே இப்ப ஒரு உற்சாகம் வரணும். நமக்கு வேண்டிய காரியம் எல்லாம் செய்ய அவுக துணியனும். காங்கிரஸ்காரன் ஒரு நாளும் (நமக்கானதைச்) செய்யமாட்டான். ஏன்னா? பேருதான் காங்கிரசே தவிர, உள்ளே இருக்கிறது எல்லாம், காமராசர் ஒருத்தரைத் தவிரமற்றதிலே எல்லாத்திலேயும் பாப்பான் தான் இருக்கிறான். அவனே இருக்கிறான்னு சொல்லாட்டாலும் அவனை விரோதித்துகிறதுக்கான உணர்ச்சி காங்கிரசிலே ஒரு 100 க்கு 5 பேர் கூட கிடையாது. இவுக வந்தாலும் காங்கிரசைத்தானே ஆதரிக்க ஆசைப்படறாங்க, இவுக நம்ம காரியத்தைச் செய்ய ஆரம்பிச்ச உடனே, இவுக இந்த மாதிரி நினைச்ச உடனே. ஆனதினாலே நாம நமக்கு இந்த (தி.மு.க) ஆட்சி விரோதமான ஆட்சியல்ல. அது மாத்திரமல்ல. நம்ம உணர்ச்சிக்கு ஏற்ற மாதிரி, நம்முடைய மக்களினுடைய நலனுக்கு ஏற்ற மாதிரி, அவுகளாலே கூடுமானவரையில் செய்யறாங்க. காங்கிரஸ்காரரு செய்ததைவிட இவர்கள் கொஞ்சம் தாராளமாய்த்தான் செய்யறாங்க?
காங்கிரஸ்காரரு செய்த காரியம் என்னான்னா? காமராசர் செய்த அந்த சமதர்மம் என்கிற பேரை வைச்சி எல்லா மக்களையும் படிக்க வைச்சாரு. வேறு எவனாலேயும் முடியாது. 100க்கு 50 பேரைப் படிக்க வைச்சிட்டாரு. படிக்கிற பிள்ளைகளுக்கு காலேஜ் வகுப்பு தவிர மற்றதுக்கெல்லாம் (படிக்க) சம்பளமில்லேன்னு ஆக்கிட்டாரு. நாட்டினுடைய நலனைப் பற்றி ஒவ்வொரு துறையிலேயும் நல்ல அளவுக்கு முன்னேற்றம் காட்டிட்டாரு. அவராலே ஒண்ணும் வஞ்சனை இல்லே.அவரை (காமராசரை) எந்தக் காரணத்தைக் கொண்டும் குற்றம் சொல்ல, இடமில்லே.
ஆனால், இந்த தேர்தலில் தோற்றுப் போனதன் காரணமாக அவருடைய வலுவும் கொஞ்சம் குறைஞ்சிப்போச்சி. மறுபடியும் இன்னமும் வலுவை சேகரிக்கவேணும். தோத்துப்போன காங்கிரஸ்காரரு எல்லாம், நம்மளை விரோதியாக நினைச்சிக்கிறான். நாமஒண்ணும் காங்கிரசுக்கு விரோதியல்ல.உண்மையிலேயே. காங்கிரசின் ஸ்தாபனத்திற்கும் நான் விரோதியில்லை. ஏன்னா? அவர்களுக்கு இந்தியா பூராவும் ஸ்தாபனம் இருக்குது. 200 பேரும் ஜெயிச்சாலும், அடுத்தத் தேர்தலிலே 250 தோ 300 பேரோ. அத்தனை பேரும் ஜெயிச்சாலும், தமிழ் நாட்டிலேதான் ஆட்சி பண்ண முடியுமே தவிர, மற்ற நாட்டிலேதான் ஆட்சி பண்ணமுடியுமா? முன்னேற்றக் கழகக்காரரு. ஆனதினாலே இந்தியா பூராவுக்கும் உள்ள ஒரு ஸ்தாபனமும், மேல் இடத்திலே அதிகாரம் எல்லாம் இருக்கிற ஸ்தாபனமும், வெற்றி பெற வேணும். காமராசரே தலைவராக இருக்கணும். இருந்தால் சில காரியம் செய்யமுடியும் இன்னமும் பொருளாதாரத்துறையிலே. அது இவுகளாலே செய்ய முடியாது. என்னா? இந்த மாகாணத்தைப் பொறுத்த வரையில் தான் இவுகளாலே செய்ய முடியும்? (தி.மு.க வினால்) ஆனதினாலே அவுக (காமராசர்) இருந்தால் தான் தேவலைன்னு தான் சொல்லணுமே தவிர அவுகளை ஒழிக்க வேணும்னு நாம சொல்லவே இல்லை. அதிலே ஒருத்தர் இருக்கிறாங்க ஒழிக்கப்பட வேண்டியவங்க. மிஞ்சி வந்தாலும் பார்த்துக்கிறோம். (சிரிப்பு கைதட்டல்) எப்ப அவுகளுக்கு வாய்ப்பு இல்லையோ, பாப்பான்கிட்டே விட்டுடறதோ,அதனாலே இருக்கிறவங்களை (தி.மு.க ஆட்சியை) ஆதரிக்கணும். அவுகளை இன்னும் வலுப்படுத்த வேணும். சரியாகவோ, தப்பாகவோ, காங்கிரஸ் காரருக்கு முன்யோசனை இல்லை.
காரணம் என்னான்னா? அவுகளாலே பதவிஇல்லாமல் இருக்கிறது நிர்வாணமாகஇருக்கிறமாதிரி நினைக் கிறாங்க. (பலத்தசிரிப்பு) (கைதட்டல்) அவ்வளவு கஷ்டப் படறாங்க. அது என்னமோ அவுங்க (காங்கிரஸ் ஆட்சியில்) 15 வருஷமிருந்தும்அந்த பொது அறிவுவரலே. போச்சி (தேர்தல்னா) ஆம்பளை மாதிரி தைரியமாயிருக்கணும். (சிரிப்பு) சரிவாநடத்துஅப்படின்னுசொல்லணும்.
ஏதோசாக்குப்போக்கைச் சொல்லிகிட்டு அவுங்கமேலே கீழ்த்தரமா அசிங்கமான குறைபாடுகளைச் சொல்லிகிட்டு மக்களை எல்லாம் படிக்காமல் அசிங்கப்படுகிற மாதிரியாய், தப்பட்டை எடுத்துகிட்டு வர்றாங்க. இப்ப காங்கிரஸ்காரரு. அது எனக்குப் பிடிக்கலே. அதைப்பற்றி நான் சொன்னா இவன் புத்திமாறிப்போச்சி என்கிறாங்க (சிரிப்பு) என்னத்துக்காக வையணும்? என்னத்துக்காக இதெல்லாம் சொல்லணும்? அஞ்சி வருஷமிருக்குது. அப்படி நீவையறதா இருந்தால் நாலாவது வருஷத்திலே ஆரம்பிச்சிக்குவே. இப்பவே நீ ஆரம்பிச்சா அது என்ன பைத்தியக்காரத்தனம். நிறைய ஜனங்கள் அவுங்களுக்கு (தி.மு.கவுக்கு) ஓட்டு பண்ணியிருக்கிறாங்க. நல்லா ஜவ்வுன்னு அவுகளை ஆதரிக்கிறாங்க.
எனக்கு தோன்றினவரைக்கும் ஆதரிச்சாங்கன்னா காங்கிரஸ் மீது வெறுப்பு கொண்டு ஆதரிச்சானே தவிர, இவுக மேலே ஓர் ஆசை வந்து (தி.மு.க வை) ஆதரிச்சாங்கன்னு சொல்ல முடியாது. எனக்கு அப்படித்தோணுது. அப்படி இருக்கிறபோது மறுபடியும் காங்கிரஸ்காரன் மேலும் வெறுப்பு ஏற்படுகிற மாதிரியாக நடந்துகிட்டா, அடுத்த எலக்ஷன்லே கூட நம்ப முடியாதே காங்கிரசை. (சிரிப்பு) இப்ப என்னா இந்த ஆட்சியைக் கமுத்துப் போடலாம்னு நினைக்கிறாங்க. கமுக்கவே முடியாது. என்ன பண்ணலாம்னா? பதவியிலிருந்து (இந்த ஆட்சியை) நீக்கலாம். எழுதியிருந்தேனே நான் மேலேஇருக்கிறஅதிகாரம் அவுகளுக்கு இந்த மந்திரிசபையை நான் கலைச்சி போட்டேன். அவ்வளவுதான் சொல்லுவாங்க. கலைச்சிப் போட்டு காங்கிரஸ்காரங்க பதவிக்கு வரச் செய்ய வாய்ப்பே இல்லை. அஞ்சி வருஷம் பொறுத்து இருந்தாதான். இப்பவேணும்னா, அதிகாரமில்லாமல் அவுகளைப் கலைச்சி போட்டான்களாம். களைச்சிப் போட்டு ராஷ்டிரபதி டெல்லியில் இருக்கிறாரே அவருடைய பார்வையிலே ஆட்சியை நடத்தலாம் இங்கே. நடந்தாலும் அது எத்தனை நாளைக்கு நடத்தலாம்? 6 மாசத்துக்கு நடத்தலாம்.ஆறுமாசம்னா பொது எலக்ஷன் திரும்பவிட்டாகணும்.
இப்ப இவுகளை கலைச்சிப் போட்டு ஆறுமாசம் பொறுத்து பொது எலக்ஷன் நடந்தால், இப்ப வந்த காங்கிரஸ்காரன்களில் பகுதி பேரு கூட வர முடியாதே (பலத்த கைதட்டல்) (சிரிப்பு) ஏன்னா? இப்ப ஓட்டு பண்ணினவனே நடப்பு தெரியுமே. இப்ப ஏன் நாம மாத்தி ஓட்டுப் பண்ணணும்னு. நாம ஓட்டுப் பண்ணி இவனை கலைச்சிபுட்டான் பாருன்னு, ஓட்டு போட்டவனுக்குத் தோணுமா இல்லையா? (சிரிப்பு) ஆனதாலே,இப்ப கலைச்சிட்டதினாலே, இவுக பயப்படவேண்டியதில்லே. இப்ப விட அதிக மெஜாரிட்டி வரும். இந்த காரியம் பொதுவாக இருக்கிற நிலைமையிலே, பொது ஒழுக்கம் கெட்டுப் போச்சி.
என்னைப் பொறுத்தவரைக்கும், எனக்கு வேதனை என்னான்னா? ஜனங்களுடைய பொது ஒழுக்கம் கெட்டுப் போச்சி. எங்கேபார்த்தாலும் கலகம்.எங்கே பார்த்தாலும் நாசவேலை. எவனாலேயும் இதை அடக்கமுடியலே. மந்திரிக்கு அடி விழுது. போலீஸ் காரனுக்கு அடி விழுது. அவனுக்கும் மண்டை உடைஞ்சிதுங்கிறான். இவனுக்கும் மண்டை உடைஞ்சிதுங்கிறான். அதிகாரிகளுக்கு எல்லாம் மரியாதை இல்லாமல் போச்சி. எந்த விதமான பாதுகாப்பும் இல்லே. நிலைமை வருத்தப்படறாப்பிலே வந்திட்டுது. அதுக்கு தான் நாம கஷ்டப் படலாம்.அதுக்காகத் தான் என் வண்டியை எல்லாம் உடைச்சிப் போட்டிருக்கிறான். விரிசலோடு, உடைசலோடு வண்டியைப் பார்க்கலாம். காரணம் ஏதுமில்லே. நம்ம கிட்டே சண்டைக்கு வர. அந்த உற்சாகம் அப்படி ரகளை பண்றானுங்க. இவன் கூட்டம் போட்டால் இவன் கலவரம் பண்றான். எனக்கு நேற்றைக்கு வந்த சேதிப்படி காங்கிரஸ்தலைவர்(சி) சுப்ரமணிய கவுண்டரு மீட்டிங் போட்டிருக்காரு.
அதைக் கலவரம் பண்ணி கலைச்சிப் போட்டான். கலைக்க வேண்டிய அவசியமில்லே. ஏதோ பேசி இருப்பாரு இருக்கட்டுமே. கலகமாயிப் போச்சி. அதுபோல அவன் இவுக கூட்டத்திலே கலகம் செய்வான். அண்ணாதுரை(பேசும்) கூட்டத்தைக் கலைச்சாலும் கலைப்பான். கலைக்கிறதுன்னு ஆரம்பிச்சதுக்கப்புறம் போதுமான பாதுகாப்பு இல்லேன்னு வந்ததுக்கு அப்புறம். எந்தக் கூட்டத்தைத் தான் எவனாலே கலைக்க முடியாது? அந்த மாதிரி ஒரு அராஜகம்ன்னு சொல்லுவாங்களே. தன்னடப்பு நாடாய்ப் போச்சி. இது நாளுக்கு நாள் நாளுக்கு நாள் வளருதே தவிர குறைஞ்ச மாதிரியா இல்லே. நம்ம முடிவுதான் என்னா? சாதாரணமா எந்தவிதமான சுயநலமும், அனுபவிக்காமே ஏதோ பொதுவுக்காகப் பாடுபட்டுகிட்டுவர்ர முடிவுஎன்னா? அப்பாவி ஜனங்களுடைய முடிவுதான் என்னா? நாட்டிலே ஜனங்கள் நடுங்கிறாங்கன்னு தெரியுது. நான் உண்மையைச் சொல்றேன். எதை எடுத்தாலும் 10 லட்சம், 20 லட்சம் வசூலாகுதே ஜனங்ககிட்டே மனசாரவா (அப்பணத்தைக்) கொடுக்கிறான்? அவன் ஆரம்பிச்சாலும் பணம் நிறையாவருது. இவன் (வசூல்னு) ஆரம்பிச்சாலும் பணம் நிறையா வருது. 50 லட்சம்கிறான் 35 லட்சம்கிறான். 1 (ஒரு) கோடீங்கிறான். யாரு கொடுக்கிறா? ஜனங்கள் கொடுக்கிறாங்க. ஏழைகளா கொடுக்கிறான். பணக்காரன் கொடுக்கிறான். பிரியத்தோடவா கொடுக்கிறான். பயந்துகிட்டு கொடுக்கிறான் (சிரிப்பு) நாட்டினுடைய நிலை என்னாயிப் போச்சி?
இப்படியே இந்த நிலைமை வளர்ந்துகிட்டே போச்சுதானா அப்புறம் எல்லாருக்கும் ஆபத்துதான். பெரிய மனுஷன் இல்லே? சின்ன மனுஷன் இல்லே? யோக்கியன் கிடையாது? அயோக்கியன் கிடையாது? எல்லாரும் ஒண்ணுதான். ஏழை, பணக்காரன் கூடாதுன்னு சொன்னால் யோக்கியன், அயோக்கியன் எல்லாம் ஒண்ணுன்னுட்டாங்க? அப்படி ஆயிப்போச்சி இரண்டு பேரும் பயப்படுகிறாங்க. ஜனங்கள் ஏதாவது பேசினால், நமக்கு ஆபத்து வருமேன்னு. நாம ஏதாவது கண்டித்தால், நம்ம ஆட்சிக்கு ஆபத்துவருமேன்னு. இரண்டு பேரும் பயப்படறதினாலே, நாட்டிலே கோளாறு அதிகமாகுது. ஏண்டா இப்படி ஆகுதுன்னா?நம்ம யோக்கியதை அவ்வளவுதான். என்னைக்கு ஜன நாயகம்ன்னு சொன்னாங்களோ நான் அன்னைக்கே சொன்னேன்.இதுகாலி பசங்கநாயகமாத்தான் ஆகப்போவுதுன்னு (கைதட்டல்) காரணம்? அப்ப எல்லாம் என்ன சொன்னான் காங்கிரஸ்காரன்? அவன் வெள்ளைக்காரனுக்கு அனுகூலமாய்ப் பேசறான். அவன் சுதந்திரத்துக்கு எதிரியாக இருக்கிறான். தேசத்துக்கு துரோகம் பண்றான். வெள்ளைக்காரன் காலை நக்கறான். அப்படீன்னு எல்லாம் சொன்னானுங்க. வெள்ளைக்காரன்கிட்டே போகவேண்டிய அவசியம் எனக்கு ஒண்ணுமில்லே. வெள்ளைக்காரனாலே நான் ஒண்ணும் பதவி பெற்றுக்கலே.
இவனுங்க யோக்கியதை என்னான்னு எனக்கு அப்பவே தெரியுமே (சிரிப்பு) இல்லாட்டா நான் ஏன் 30 வருஷமாய் காங்கிரசிற்கு விரோதியாய் இருக்கிறேன். 1925லே காங்கிரசுக்கு விரோதமாக வெளியே வந்தவன், 1955 வரைக்கும் நான் காங்கிரசக்கு விரோதிதானே எதற்காக நான் அதுக்கு விரோதம்? இல்லே, காங்கிரசிலே எனக்கு பதவி இல்லேன்னா நான் இருந்தேன் அப்படி. காங்கிரசை விட்டு நான் போன பிறகு, காங்கிரசைக் கண்டிச்சிகிட்டு இருக்கிறபோது, ராஜகோபாலாச்சாரி என் வீட்டுக்கு வந்து நீ ஒரு கையெழுத்துப் போடு நான் (காங்கிரசில்) உன்னை மெம்பராக்கித்தர்றேன், நீ ஒண்ணும் செலவு பண்ணாதே. நீ ஒருத்தனிட்டே போய்ஒரு ஓட்டு கேட்க வேணாம். கையெழுத்து மாத்திரம் போடு (மந்திரியாக) அப்படின்னுவந்து என்னைக் கேட்டாரு. எதிலேயும் எனக்கு எதிர்ப்பு இல்லாமல் இருக்கணுமேன்னு. அது மாத்திரமில்லை. கோவை அய்யா முத்து கவுண்டர் கூட வந்தாரு. அவினாசிலிங்கம் செட்டியாரு வந்தாரு. டெல்லியிலே இருக்கிற ஈசுவான் வந்தாரு. நான் கையெழுத்துப் போட்டேன்னா நானும் ஒரு மெம்பராகிவிடுவேன். அப்படி எதிர்ப்பு இல்லாமல் போயிடும்ன்னு. ஏன்? நான் போவலே. அப்புறம் தான் அடுத்துகோவை சுப்பய்யாவுக்கோ, யாருக்கோ அந்தஇடத்தை பூர்த்தி பண்ணினாங்க. மந்திரி வேலை ஆச்சி, அவுக ஆட்சி ஜெயிச்சுது அப்புறமும் நீ ஒரு மந்திரியை ஒத்துக்கன்னாங்க. ராஜாஜியே எனக்கு ஆள் அனுப்பிச்சாரு. ஒரு மந்திரி இடம் வைச்சிருக்கிறேன். நாமினேஷனிலே ஒரு இடம் இருக்குது. அப்படீன்னு. பதவியிலே சேருணும்ன்னா நான் டக்குன்னு சேர்ந்திருப்பேனே?
நான் பதவிக்கு வந்திட்டா அப்புறம் யார் முகத்திலே முழிக்கிறது? என்னா ஆகிறது என்வாழ்வு? ஆ, உனக்கு அரசியல் தெரியாதுன்னாரு. என்னமோ என் அரசியல் இப்படித்தான். மன்னிக்கணும்ன்னு சொன்னேன் நான். மறுபடியும் கூட காங்கிரசு பதவியை விட்டு போயிட்டுது. (27-10-1939இல்) எப்போ? இந்தியை (சென்னை மாகாணத்திலே) கொண்டு வந்து புகுத்தினார் ராஜாஜி. அப்ப நான் தான் அவரை எதிர்த்துச் சண்டைப் பிடிச்சேன். (1938இல்) யாரும் இந்தியை எதிர்க்கவே இல்லை. நான் ஒண்டியாளுதான் (இந்திக்கு எதிர்ப்பா) ஆரம்பிச்சேன். எங்க கட்சிதான்ஆரம்பிச்சது. 2000பேர்வரைக்கும் ஜெயிலுக்குப்போனோம். கடினமா தண்டிச்சார் ராஜாஜி. என்னை அப்ப மூணு வருஷம் தண்டிச்சார். (6-12-1938இல்) பெல்லா சிறையிலே வைச்சாரு. அந்த கதையெல்லாம் உங்களுக்குத் தெரியும்.அப்புறம் அவுங்களாலே (ஆட்சியில் இருந்து) வாழ முடியலே (பதவியை) விட்டுட்டுப் போயிட்டாங்க.(29-10-1939லே) நான் ஜெயிலிலே இருக்கிறபோதே இவுகவிட்டுட்டாங்க. இவுக விட்டுட்டு போன உடனே திராவிடர் கழகத்துக்கு நான் தலைவராக இருக்கிறபோதே, 29-12-1938லே ஜஸ்டிஸ்கட்சிக்காரர் என்னைத் தலைவனா ஆக்கிப்போட்டு,
அதிலிருந்து ஒவ்வொருத்தரா நழுவிட்டாங்க. ஏன்னா இவுங்க (காங்கிரஸ்) கலகம் பண்ண ஆரம்பிச்சிட்டாங்க. அதிலே ஜெமிந்தாருக்கு எதிராக ரகளை பண்றது. அவுக இதனாலே கஷ்டப்பட்டாங்க. நமக்குஎன்னாத்துக்கு இந்த தொல்லைன்னு கட்சியைவிட்டுட்டு போறதுக்கு, சும்மா போறதுக்கு பதிலாக என் தலையிலே ஜஸ்டிஸ் கட்சித் தலைமையை போட்டுட்டுப் போனாங்க. அப்புறம் ஜஸ்டிஸ் கட்சியினரால் வாழமுடியாது போச்சி. அவர்கள் விட்டுட்டுப்போன பிறகு நான் ஜஸ்டிஸ் கட்சிக்குத் தலைவனாக வந்தேன். அப்ப (உலகச்) சண்டை நடக்குது. வெள்ளைக்காரன் என்னைக் கூப்பிட்டு நீ மந்திரி சபை அமைக்கச் சொன்னான். ராஜாஜி
(29-10-1939இல் பதவியை) விட்டுட்டுப் போயிட்டாருன்னுதான் அதை வைச்சிக்கணும்னான்.
அய்யா,என்னாலேமுடியாது. நாங்ககஷ்டப்பட்ட கூட்டம். இப்ப நான் மந்திரியானால் அவன் காங்கிரஸ்காரன் பொசுக்குன்னு வந்திடுவான்.எனக்கு மந்திரி பதவிகளைக் கொடுண்ணு. நீ கொடுப்பே. நான் போயிடணும். விட்டுட்டுப்போன்னுடுவே. இல்லாட்டா அவன் எதிர்த்து எங்களுக்கு எதிராக (காங்கிரஸ்) அவன் ரகளை பண்ணுவான். அவனை நல்லா அடக்கவேணும். அடக்கினியானால் அடுத்தாப்பிலே நாங்கள் பதவிக்கு வந்தாலும் எங்களாலே ஒரு காரியமும் நடத்த முடியாது. நீங்களே (வெள்ளையரையே) ஆட்சி செய்யுங்க. நாங்க எங்களால் ஆனவரைக்கும் உங்களுக்கு வெளியில் இருந்து கொண்டு ஆதரவு கொடுக்கிறோம்ன்னேன். பதவியை வேண்டாம்ன்னு சொல்லி கவலை எடுத்துக்கிட்டோம். ஒத்துழைக்கிறேன்னு. (உலக) சண்டைக்கு நாங்கள் ஒத்துழைக்கிறேன்னு சொன்னதற்காக. இவுக (உலக) சண்டையிலே வெள்ளைக்காரனுக்கு விரோதமாகவே (காங்கிரசார்) அப்ப இவுக சண்டை போட்டாங்க. ஜெர்மனிகாரனை இங்கு இவுககூட்டி வர்றதுக்கு (காங்கிரஸ் காரங்க) பாடுபட்டாங்க. ஆனதினாலே நாங்க, வெள்ளைக் காரன் எப்படியாவது ஜெயிக்கவேணும் அப்படீன்னு நம்மாளான உதவியை வெள்ளைக்காரனுக்குச் செய்தோம்.
ஆகவே தோழர்களே, அந்த மாதிரி நான் ஆதரிச்சிகிட்டு இருக்கிறபோது, உண்மையாகவே சொல்றேன். ராஜாஜி என்கிட்டே வந்தாரு. ஆனதாச்சி, போனது போச்சி இப்ப நீயாவது மந்திரி பதவியை ஒத்துக்க. இந்த சமயத்திலே அவன்கிட்டே (வெள்ளைக்காரனிடத்திலே) விடாதே அப்படீன்னு என்னைக் கட்டாயப்படுத்தினாரு. நான் அவரிடம் என்னாலே முடியாதுங்கன்னேன். வேணும்ன்னா நீ எனக்கு ஒரு மந்திரி கொடு உன் மந்திரிசபையிலே, நான் ரொம்ப பொறுமையான மந்திரிசபையாக நான் ஆக்கிடறேன். மீதி எல்லா காரியத்தையும் நீயே செய்யின்னாரு. அப்பவும் அவருகிட்டே நான் ரொம்ப கேட்டுகிட்டேன். என்னாலே முடியாது மன்னிக்க வேணும். நான் மந்திரியானால் மறுபடியும் பொதுவாழ்வில் என்னாலே வாழவே முடியாது. எங்க ஆளுகளிலேயும் 100 பேர் இருக்கிறாங்க மந்திரியாக வேணும்ன்னு. அவுங்களோடு எனக்கு விரோதமெல்லாம் வரும். இம்மாதிரி ராஜாஜியிடம் சொன்னேன். மந்திரி பதவியே வேண்டாம்ன்னுட்டேன்.
எப்படியோ (உலகச்) சண்டையிலே வெள்ளைக்காரன் ஜெயிச்சான். ராஜாஜி பதவிக்கு வந்தார். நம்மை பழிவாங்க ஆரம்பிச்சார். பள்ளிக்கூடத்தை எல்லாம் மூட ஆரம்பிச்சார். (1954இல்) இரண்டு நேரம் படிக்ககூடாது. ஒரு நேரம் தான்படிக்கவேணும்னுட்டார். பத்தாததுக்கு அவனவன் ஜாதிப்படி படீன்னார். ஜாதித் தொழில் செய்யுன்னாரு. அப்புறம் அவரை எதிர்த்து நான் தான் நேருக்கு நேராக சண்டைபிடிக்க ஆரம்பிச்சிட்டேன். நம் எதிர்ப்பினாலே ராஜாஜி பதவியை விட்டுட்டு போயிட்டாரு. (12-04-1954இல்) அவருக்கு அடுத்து, காமராசர் அந்தப் பதவிக்கு முதல் மந்திரியாக (13-04-1954இல்) வந்தாரு. அப்ப பாப்பான், பார்ப்பான் அல்லாதவன்,என்கிறஉணர்ச்சி வலுத்துப் போச்சி. அவரை நாம வலுவிலேபோய் ஆதரிக்க வேண்டியதாய்ப் போச்சி. காமராசரும் எதிர்பார்த்தார். நம்ம ஆதரவு வேணும்னு. சரின்னுட்டு நாங்கள் அவருடைய ஆட்சியை ஆதரிக்க ஆரம்பிச்சோம். நான் ஆதரிக்கிறபோது அவரும் (காமராசரும்) சொன்னாரே. அண்ணாவைப் பற்றி அவருயாருன்னு பெரிசா பேசறோம். அவர் கொள்கைப்படி அவரு சொன்னபடிதான் நடத்துகிறோம். ஆட்சியைன்னு காமராஜர் சொன்னாரே. பெரியார் சொல்றபடித் தான் நாங்கள் நடக்கிறோம். அவரு போட்ட ரோட்டிலேதான் நாங்கள் வண்டி ஓட்டறோம்.
ஆனதினாலே, அவரு எங்களை ஆதரிக்கிறாருன்னார். அதிலே என்னா அதிசயமிருக்குது. அப்படீன்னு அவரே சொன்னாரே. அவராலே நாங்க என்ன காரியம் கவனிக்கணும். நம்மலட்சியம் எல்லாம் நம்ம சமுதாயம் முன்னேற்ற மடையணும். ஏன்னா, நாம ரொம்ப கீழே இருக்கிறோம். ஒண்ணிலே கூட நமக்குப் போதுமான அறிவு இல்லே. நம்மமொழி நமக்கு உபயோகப்படலே. நம்ம இலக்கியங்கள் எல்லாம் நம்மை இழிவு பண்றதாய்ப் போச்சி. மற்றும் நம்முடைய மதத்திலே நாம கீழ் மகனாக இருக்கிறோம். கடவுள் காரியத்திலே, நாம சுத்தமடையனாக இருக்கிறோம். எப்படி நாம வாழ்றது? மற்ற நாட்டுக்காரன் எல்லாம் போறான் மேலே மேலே. நம்மை நிபந்தனையில்லாத அடிமையாக ஆக்கிப் போட்டானுங்க. என்னைக்கும் நம்மைத் தலையெடுக்க முடியாத மாதிரியிலே இந்துங்கிறவன் எல்லாம் ஒண்ணுன்னுட்டான். இந்துவாகவே நாம ஒரு நாடுங்கிறான். இந்தியா 51 கோடி மக்களைக் கொண்ட ஒரு நாடு. 51 கோடி மக்கள் உள்ள நாட்டிலே, நாம 3ஙூ கோடி மக்கள் (1968இல்) அவுகளோடு சேர்ந்திருக்கணுமாம். நாம 3ஙூ கோடி அவுக சுமார் 48 கோடி ஜனங்களாயிடுகிறாங்களே. எந்தக் காரியத்தை நாம சமாளிக்க முடியும்? அவன் (வடவன்) சொன்னபடி நாம கேட்கணும். எனக்குத் தெரியும் நிபந்தனை.
இந்தியா கூட நாம ஒண்ணாய் இருக்கிற வரைக்கும், அவுகளோடு இணைஞ்சிருக்கிற வரையிலும் நாம அடிமை. ஆனதினாலே நாம மத்தவனுங்களைப் போல நினைக்காமே, எப்படி நாம இந்த இந்தியாவின் ஒரு கட்டிலேயிருந்து நாம விலகி அடிமைத்தன்மையில் இருந்து நீங்குகிறது இப்ப நம்முடைய கவலை.
அரசாங்கத்திலே நம்மை மிரட்டுவான். எவனாவது (தனிநாடாக) பிரிவினை கேட்டால் 10 வருஷம் தண்டிக்கிறாப்பிலே சட்டம் பண்ணுவோம்கிறான், அது சரி. பிரிவினையில்லாமல் இவன்கிட்டே அடிமையாய் இருப்பதைவிட ஜெயிலுக்குப் போய் அங்கேயிருந்தால் நமக்கு என்னா நஷ்டம்? (பலத்த கைதட்டல்) இதன் விளைவைத் தெரிஞ்சிதான்நாமபேசறோம் நம்மைப் போல, அரசியலில் இருக்கிறவன் எவனும் இதைப் பற்றி பேசமுடியாது. ஏன்னா? பிரிவினையைக் கேட்கிறவன். எலக்ஷனுக்கு நிற்கமுடியாதுன்னு சட்டம் பண்ணிட்டான். எலெக்ஷன் இல்லாட்டா இவுகளுக்கென்னா அரசியல் அழுகுது? காங்கிரஸ்காரன் எலக்ஷனுக்கு நிற்கமுடியாது, முன்னேற்ற கழகக்காரரு எலக்ஷனிலே நிற்க முடியாது! பிரிவினைன்னு இவுக சொல்லிப் போட்டா அப்படி அவன் வேணும்னே சட்டம் பண்ணிகிட்டான். வேறு எந்தக் கட்சிக் காரனும் பிரிவினைன்னு சொன்னா எலக்ஷனிலே நிற்கமுடியாது.
எல்லாக் கட்சிக்காரனும் தன் லட்சியம் எலக்ஷன்னுதான் நினைச்சிகிட்டு இருக்கிறான். அதனாலே இன்னொருத்தனை நாம எதிர்ப்பார்த்து சேர முடியாது. நாமதான் இந்த காரியத்தை ஆரம்பிக்கணும். ஆரம்பிச்சா கஷ்டம் வரும். 1000 பேர், 2000 பேர் நாமளும் ஜெயிலுக்குப் போகணும். அப்புறம் தான் ஜனங்கள் நம்பக்கமா வருவாங்க. அந்த மாதிரி நிலைமை வந்தால் முன்னேற்றகழகத்துக்காரங்க (ஆட்சியிலிருந்து) ராஜினாமா கொடுத்துட்டுக் கூட வருவாங்க. ஆதரவு பலமா இருக்குதுன்னா அவுக வந்திடுவாங்க. இன்னும் மற்ற ஜனங்களும் இதற்காக நம்மோடு சேருவாங்க. அடுத்தாப்பிலே எலக்ஷன் வந்தால் நாம மனுஷனாகணுமேன்னு, அதனாலே இவுகளோடு போயிட்டு அப்ப இல்லேன்னு சொல்லிட்டாபோகுது அப்படீன்னு நம்மகிட்டே வந்து சேருவாங்க.
ஆதலினாலே இன்னைக்கு நம்முடைய நிலைமை ஜெயிலோ எந்தக் காரியமோ எப்படி இருந்தாலும் எப்படியாவது அந்த இந்தியாவிலிருந்து இருக்கிறதிலேயிருந்து தப்பி வரணும். காரணம், 16 தேசமிருக்குதுன்னா 12 தேசம் அவன். 4 தேசம் (தென்னாடு) நாம. இந்த நாலுபேரிலேயும் மற்ற 3 பேரை (கேரள, கர்னாடக, ஆந்திரம்) நம்ப முடியாதே. மலையாளத்துக்காரனை நம்ப முடியாது. அவனை முன்னாலே பார்த்தா தமிழன், பின்னாலே பார்த்தால் பாப்பான். அவன் வரமாட்டான். தெலுங்கு நாட்டுக்காரனும், கன்னடிய நாட்டுகாரனும் இதற்கு (பிரிவினைக்கு) பயப்படுவான். நமக்கிருக்கிற அவ்வளவு ஆத்திரம், அவுங்களுக்குக் கிடையாது. இப்ப இந்தி ஒரு பிரச்சினையாக அவன் சொல்றானே தவிர. காங்கிரஸ்காரன் இவுங்களை மிரட்ட ஆரம்பிச்சால் நாமதான் மிஞ்சுவோம். மற்றவன் எல்லாம் நம்மோடு வருவானா என்பது நமக்கு கஷ்டம் தான். ஆகணுமே?
என்னைக்கு நமக்கு வந்து மெஜாரிட்டி ஆகப்போவுது? என்னைக்கு நம்ப காரியம் (பிரிவினைக்காக) சட்டமாக நிறைவேறப்போவுது? 532 மெம்பர்கள் இருக்கிற சபையில் நாம 40 பேர்தானே. பாக்கி 492பேர் இருக்கிறானே. அதிலே எத்தனை பேர் நம்ம கூட (ஆதரவுக்கு) வருவான்?. எல்லாம் வடநாட்டுக்காரன். ஆனதினாலே, எத்தனை நாளைக்கு நாம இந்தியாவிலே, ஒரு நாடாக யூனியனுக்குள் இருக்கிறோமோ, அத்தனை நாளைக்கும் நாம வடநாட்டானுடைய அடிமைதான். அவன் தான் இங்கு வந்து பொறுக்கித்தின்பான். வந்து கொள்ளை அடிச்சிகிட்டுப் போவான். அவனுக்கு அடிமையாய் இருந்து நாம வாழ்க்கை நடத்தியாகணும். ஆனதினாலே நாம மற்ற எல்லா லட்சியத்தையும் விட பிரிஞ்சிக்கவேணும். எங்கள் நாடு எங்களுக்குத் தனியாகணும்.
நாங்கள் சுதந்திரத்தோடு வாழ்கிறோம். எதுக்காக ஒரு நாட்டான் இன்னொரு நாட்டானுக்கு அடிமையாக இருக்கணும். ஏதற்காக இன்னொருத்தன்நாட்டோடு கூடத்தான் இருக்க வேணும்கிறது? என்ன கட்டாயம்? அப்பன் மகனோடு இருக்க மாட்டேன்கிறான், அண்ணன் தம்பியோடு இருக்கமாட்டேன்கிறான். பொண்டாட்டி புருஷனை இஷ்டமில்லேன்னா நீ போக வேண்டியதுதானே என்கிறாள்?(சிரிப்பு) நீ மட்டும் என்னா கடைசி வரைக்கும் உன்னோடு இருந்துதான் ஆக வேணும்கிறதுக்கு? (சிரிப்பு) என்னமோநாம மாட்டிகிட்டோம். இஷ்டம்போல சட்டத்தை உண்டாக்கிட்டான் பிரியக் கூடாது இந்தியா ஒண்ணாதான் இருந்தாக வேணும்னுட்டான். இப்ப சட்டத்திலே பிரியவேணும்னா தண்டனைங்கிறான். சட்டம் பெருசா? நம்ம சுதந்திரம் பெருசா? நாம பார்க்கவேணுமா இல்லையா? அப்படியாவது இந்த நாட்டை ஆளத்தகுதியிருக்கோ?
இன்றைக்கு இருக்கிற நடவடிக்கைகளை நீங்க எடுத்துகிட்டீங்கன்னா, காங்கிரஸ்காரனுக்கோ, மத்திய ஆட்சிகாரனுக்கோ, இந்தியாபூராவும் ஒண்ணுன்னு பண்ணிட்டு இருக்கிறவனுக்கோ நாட்டை ஆள யோக்கியதை இருக்குதோ? எங்கே இப்ப ரகளை இல்லை? ஒவ்வொரு ஊரிலேயும் ரகளை. தபாலாபீசைத் தகர்க்கிறான். கட்டிடத்துக்கு நெருப்பு வைக்கிறான். ஆளுங்களை உதைக்கிறான். வீதியிலே போற பஸ்சுக்கெல்லாம் நெருப்பு வைக்கிறான். நினைச்சா புகுந்து கொள்ளையடிச்சிகிட்டுப் போறான்.சேதிவந்துகிட்டே இருக்குதே. இது ஒரு பக்கம் வருது. நம்முடைய ஒழுக்கம் என்னடான்னு பார்த்தால், நேற்று காங்கிரசுங்கிறான். இன்னைக்கு வேறு ஒரு கட்சிங்கிறான். நாளைக்கு இன்னொரு கட்சிங்கிறான்? என்னடான்னா? 10 ஆயிரம் ரூபாய் கொடுத்து ஒரு ஆளை சேர்த்துகிட்டேங்கிறான். இவன் 20 ஆயிரம் ரூபாய் கொடுத்து மந்திரி திருப்பிட்டாருங்கிறான். (சிரிப்பு) இதுவெல்லாம் நமக்கு முடியுமோ? நம்ம நிலைக்கு இந்த நிலைப் பயன்படுமா? நீங்க தான் பார்க்கிறீங்களே, காத்தாலே ஒரு கட்சி சாயந்தரம் ஒரு கட்சி. விடிய காலையிலே ஒரு கட்சி. இன்னைக்கு அந்த மந்திரிசபை. நாளைக்கு இது தோத்துப் போவுது.நாளறனைக்கு இன்னொருமந்திரிசபை.காங்கிரஸ்காரன் எவ்வளவோ வீம்பு பேசிகிட்டு வந்தான். இப்ப நானும் கூட்டு சேர்ந்துக்கிறேங் கிறான். (சிரிப்பு)
ஆகவே ஒரு பெரிய நாடுன்னு பேரு வைச்சிகிட்டு, பஞ்சாப் முதல் கன்னியாகுமரி வரைக்கும், ஒவ்வொரு மாகாணத்திலேயும் ரகளை. மந்திரியைக் குறுக்காட்டிகிறது. மந்திரியை ரகளை பண்றது. மந்திரிகளுக்கு தலைவர்களுக்குக் கொடியை பிடிச்சிகிட்டு அவமானம் பண்றது. விடிஞ்சா எல்லாத்துக்கும் சமாதானத்துக்கும் வர்ரேன். சொன்னா, அவனை வரவேண்டாங்கன்னு சேதி அனுப்புகிறான் யாரு? உப பிரதமர் இப்ப வந்தால் இங்கே நிலைமை சரியாய் இல்லே வர வேண்டாம்னு எழுதிட்டாங்கன்னு. அவனும் பயந்துகிட்டு இருந்திட்டான். (சிரிப்பு) அந்தம்மா பிரதமர் (இந்திராகாந்தி) அவர் பாட்டுக்கு வந்திட்டு அவர் பாட்டுக்கு போயிட்டாரு. (சிரிப்பு) அப்புறம் எங்கே இருக்குது பந்தோபஸ்து? எங்கே இருக்குது அமைதி? இதுக்குப் பேருதான் ஜனநாயகம். இதுக்குப் பேருதான் இந்திய யூனியன்னா! ஒரு மனிதனுக்கு அறிவு இல்லே. மானமில்லேன்னு பேரு?
ஆகவே தான் நாம கண்டிப்பாய் பிரிஞ்சி போகவேண்டியதைத்தவிர வாழ்றதுக்கு வேறு மார்க்கமில்லே. (பலத்த கைதட்டல்)பிரிஞ்சிகிட்டோமானால், இப்ப இருக்கிற தொல்லை எல்லாம், நாளைக்கு நமக்கு வராது. என்னா? எல்லாம் நம்மாள்கள் தான் இருப்பாங்க. நம்ம சொன்னாப்பிலே நடந்தால் தான் முடியும் என்கிற எண்ணம் அவர்களுக்கும் வரும். இப்ப அது இல்லையே. அவன் டெல்லியில் இருக்கிறானே.இப்பத்திய காங்கிரஸ்காரனுங்க, நம்மை மிகக் கேவலமாகப் பேசுகிறாங்க. காரணம் என்னா? இங்கு இல்லாட்டாலும் நமக்கு டெல்லி தயவு இருக்குதுன்னு நினைக்கிறான்.அப்படிதான்அவுக நினைக்கிறாங்க. அப்படிதான் அவுக எதிர்ப்பார்க்கிறாங்க. இங்கே தோத்துப்போச்சீன்னா அங்கே போயி கேக்கிறான் அதனாலே வசதிப்பட்டவன் எவனும் நம்ம ஜனங்களைப் பற்றிக் கவலைப் படமாட்டான்.நமக்குஎப்ப நடந்துக்கிறதுங்கிறதைப் பற்றிக் கவலைப் படமாட்டான்.
எனவே தான் தோழர்களே! நாம இன்றைய நிலைமையைப் பார்த்துகிட்டு, சும்மா இருந்தோமானால், நம்ம நிலைமை இன்னும் கேவலமாய்ப்போயிடும். நாம சீக்கிரத்தில் துவக்கவேணும், பிரிவினைன்னு, அந்த நடவடிக்கை எடுத்துக்க வேணும் அப்புறம் நடக்கிறது நடக்கட்டும். அதுதான் எங்களுடைய கருத்தே தவிரவேறு நாங்க ஆளவேணும்னோ, இல்லை வேறு ஆட்சி வேணும்னோ அல்ல. இதிலே நாம முன்னேற்றக் கழகக்காரரை கூப்பிடலே. நான் எழுதிட்டேன். நீங்க உங்க பாட்டுக்குப் பதவியைப் பார்த்துகிட்டு இருங்க.நாங்க செய்றோம். எங்களுடைய கதை பலப்பட்டுதுன்னா அப்ப நீங்க வாங்க. (சிரிப்பு) இப்ப நீங்க பொசுக்குன்னு வந்திடாதீங்கன்னு அதுவும்கெட்டு, இதுவும் கெட்டுப் போறாப்பிலே ஆயிடும் (கைதட்டல் சிரிப்பு) ஆனதினாலே நீங்கள் வரவேண்டாம்னு நான் சொல்றேன்.
அவுகளும் (தி.மு.கவும்) எங்கள்கிட்டே பிரிவினை எண்ணமில்லேன்னு சொல்றாங்க(சிரிப்பு) சரிநாங்களும் ஒத்துக்கிறோம். அப்படியே நீங்க இருங்க. (சிரிப்பு) நாங்க எங்களால் ஆனதை பார்க்கிறோம். (சிரிப்பு) இதை நாங்கள் சீக்கிரத்தில் ஆரம்பிக்கத்தான் போகிறோம். ஆதனாலே நாம எல்லாத்தையும் சேர்த்துத்தான் சொல்லறேன். ஏதோ குடும்பம் பிள்ளை குட்டி - அது இது வெங்காயம்கிறவங்க தனியா இருக்கட்டும். தொல்லை இல்லாத இளைஞர்கள் எல்லாம் சேரணும். இளைஞர்கள் மூலம் தான் இதற்கு விதாயம் ஏற்படவேணும். ஆனதினாலே,நம்முடைய எதிர்காலத்தைப் பற்றி நல்லபடி ஒவ்வொருவரும் சிந்திக்க வேணும்.இந்தக் காரியத்திலே யாருக்கும் சுயநல எண்ணமிருக்கக் கூடாது. தமிழர்ங்கிற முறையிலே, நான் அடிக்கடி சொல்லிகிட்டு வருகிற மாதிரி, எல்லாருமா சேர்ந்து ஒற்றுமையாய் இருக்கவேணும். ஏதோ பதவியில் இருக்கிற முக்கியமான ஆளுக விலகி இருக்கட்டும். காங்கிரஸ்காரரு கூட நான் கேட்டுக்கிறேன். அங்கே இருக்கிற இளைஞர்கள் எல்லாம் தமிழன் என்கிற உணர்ச்சியோடு இருக்கவேணும். எப்பவும் நீஅந்தக்கட்சி, இந்தக்கட்சி என்கிற எண்ணத்தை விட்டிட வேணும். தமிழர்கட்சி தமிழர் அப்படீன்னு எண்ணனும். கூடுமானவரைக்கும் பிரிவினை உணர்ச்சிக்குப் பலம் கொடுக்கணும். காங்கிரஸ்காரர்களையும் கேட்டுக்கிறேன். பிடிவாதமா நமக்கு விரோதின்னு நினைச்சிகிட்டு இருக்கிறவங்க போகட்டும்.
நம்மை சாதாரணமாக, விரோதமில்லாது நினைக்கிறவங்கதான் இந்த சமயத்திலே ஆதரவு கொடுத்தாகணும். காங்கிரஸ்காரரு மாத்திரமல்ல முன்னேற்றக் கழகத்திலேயும் மந்திரிகள் சட்டசபையில் இருக்கிறவங்க போகட்டும். மற்றவங்க எல்லாம் நமக்கு ஆதரவு கொடுக்கலாம். அப்பதான் அது பலப்படும். அதுக்கப்புறம் அவுகளும் வந்திடறாங்க. நாம இந்த காரியங்களை செய்யணும். மற்றும் இன்னும் ஒவ்வொரு கழகத்திலும் பாப்பானுங்க இருக்கிறாங்க. தமிழனா இருக்கிறவங்க எல்லாம்வந்திடவேணும்.அதிலே பிழைக்கிறவனுங்களை விட்டிடுங்க. (சிரிப்பு) ஏதாவது ரகளை, காலித்தனம் பண்ணி அதனாலே பிழைக்கிறவன் இருக்கிறானே, அவன் போகட்டும். அவனை எல்லாம் விட்டுடுங்க. மற்ற ஆளுக வந்திடவேணும். இன்னும் சுதந்திராகட்சி, அந்தக்கட்சி, இந்தகட்சின்னு பல கட்சிகளைவைச்சிகிட்டு இருக்கிறவன் தான் தமிழர் - தமிழருடைய விடுதலை - தமிழருடைய அடிமையை ஒழிக்கிறது - என்ற பேராலே பலமாக ஒரு கூட்டம் சேர்ந்துதான் நாம் வெற்றி பெறவேணும். அதில்லாமல் நம்மாலே ஒரு காரியமும் சாதித்து விட முடியாதுங்க.
நான் நல்லா யோசனை பண்ணிதான் சொல்றேனே தவிர சும்மா ஏதோ ஒருவேகத்திலியோ, ஒருகாரியத்தை நான் என்னை பெரிசு பண்ணிகிட்டோ, செய்றேன்னு நினைக்காதீங்க. ரொம்ப கஷ்டமான நிலைமையிலே நாம இருக்கிறோம். உலகத் தமிழ் மாநாடு நடப்பதாக எனக்கு அழைப்பு வந்தது என்னையும் ஜாடையாக வந்து கூப்பிட்டாங்க. அங்கே போயி நான் பேசி கசப்பு பண்ணிக்க, இஷ்டமில்லை. நான் என் கொள்கை என்னமோ அது பற்றி சொல்லிப்போட்டேன் அதுக்கு விரோதமாக - சம்பிரதாயமாக அது நடக்குது. அங்கு வந்து நான் ஏன் கசப்பு பண்ணிக்க வேணும், நமக்கு வேண்டியவங்க எல்லாம் அங்கே இருக்கிறாங்க. அப்படீன்னு சொல்லிட்டு நான் போகலே. ஆனால் நிறையா பணத்தை வசூல் பண்ணினாங்க. ஒரு பண்டிகை மாதிரி கொட்டமடிச்சாங்க. (சிரிப்பு) என்னா முடிவு பண்ணினாங்கன்னு எனக்குத் தெரியலே. இன்னமேதான் (அந்த மாநாடு பற்றி) தெரிஞ்சிக்க வேணும். பல பேரெல்லாம் படிச்சாங்க.
அதெல்லாம் பேச்சுக்குத்தான் அவர்கள் படிப்பு பயன்படுதே தவிர வயிறு வளர்க்கிறதுக்கு, அந்தப் புலமையினாலே, ஏதாவது நாட்டுக்கோ - கருத்துக்கோ - நீதிக்கோ - இலக்கியத்துக்கோ - செய்யலாமாங்கிற எண்ணமில்லே. இலக்கியங்கள் எல்லாம் புராண சம்பந்தமான இலக்கியங்கள் தான். எந்தபுலவனும் மதத்தைக் கட்டிகிட்டு அழுகிறான்?நாமம் போட்டுகிட்டு, விபூதிபூசிக்கிட்டு, பட்டுக் கட்டிகிட்டுள்ளான். அவன் கருத்திலே எந்த மதமோ, எந்த உட்பிரிவோ எல்லாம்,அந்தப் பாப்பானுக்கு அனுகூலமானதேதவிர, இவுங்களுக்கு (தி.மு.க.விற்கு) அனு கூலமா ஒண்ணுமேயில்லே.
எந்த இலக்கியத்தை நாம எடுத்துகிட்டாலும், நமக்கு ஏற்ற இலக்கியம் எதிலாவது இருக்குதான்னா - ஒண்ணும் கிடையாது. அந்த உணர்ச்சியே ஏற்படலே. உண்டாக்கியிருக்கிற இலக்கியங்கள் பூரா நான் சாதாரணமாகச் சொல்லறேன்; கம்பனுக்கு ஒரு சிலை வைச்சாங்க. கண்ணகிக்கு ஒரு சிலை வைச்சாங்க. கொஞ்சமாவது மானமிருந்தால் வைப்பாங்களா? (சிரிப்பு) நான் பச்சையாகவே கேட்கிறேன். ஒரு கடுகளவாவது தமிழனுக்கு மானமிருந்தால் கம்பனுக்கு ஒரு சிலை வைக்கமுடியுமா? அவன் தான் இராமாயணத்தைப் பரப்பினவன் கம்பன். பாப்பானோடு இருந்த இராமாயணத்தை அவன் தான்பரப்பினான்.
ராமாயணத்திலே இருக்கிறஅசிங்கத்தை எல்லாம் இவன் தான்கழுவிவிட்டவன். (சிரிப்பு) அதனாலே பாப்பானோ, மற்றவனோ, கம்பனுக்கு இவ்வளவு மரியாதை பண்றான்னா. ராமாயணத்தைத் தூக்கிவிட்டுட்டானே, காறிதுப்பவேண்டிய ஒரு ராமாயணத்தை கம்பராமாயணம் தானே இப்ப கடவுள் கதையைப் படிக்கபடுது. வால்மீகி ராமாயணம் நாறுது. எங்கே அதிலே படிச்சாலும், அதிலே அயோக்கியத்தனம், அக்கிரமம், விபசாரத்தனம், பித்தலாட்டம், பிரட்டு, துரோகம், எல்லாம் இருக்குது அதிலே? அதையெல்லாம் இவன் (கம்பன்) தான் மறைச்சான். மறைச்சிப் போட்டு நேரா வால்மீகி சொல்லாத அவ்வளவு வசையை ராவணனுக்கும் மற்ற நம்ம ஆளுகளுக்கும் அவ்வளவு அதிகமாகச் சேர்த்திருக்கிறவன் இவன் தான்(கம்பன்). இவைகளை எல்லாம் கொஞ்சம் கூட இலட்சியம் பண்ணாமே அவனுக்கு (கம்பனுக்கு) ஒரு சிலைன்னுட்டான். என்னா நியாயம்?.
கண்ணகிக்குஒருசிலைன்னுவைச்சாங்க. கண்ணகிக்கு என்னா உயர்ந்த குணமிருந்தது? அவளுக்காக ஒரு சிலை வைக்கிறதுக்கு? என்னா அவள் பண்ணினாள்? புருஷன் தேவடியாள் வீட்டுக்கு (கோவலன்) போயிட்டான்னா? இவள் பதிவிரதை வேஷம்னுட்டு சோறு திங்காதே, பாயிலே படுக்காமே, தலையை முடியாமே, ரொம்ப-புருஷன் (கோவலன்) ஏக்கத்திலேயே உட்காந்திருந்தாளுன்னு ஒரு கதை போட்டா. இதுவா ஒரு பொம்பளைக்கு இலட்சணம்? (சிரிப்பு) நான் கேட்கிறேன்? புருஷன் போயிட்டான்னு இவள் (கண்ணகி) பட்டினி கிடந்தாள்.
எவனாவது அவன் பொண்டாட்டி இன்னொருத்தனோடு போயிட்டாள்ன்னு பட்டினி கிடப்பானா? (சிரிப்பு கைதட்டல்). நான் கேட்கிறேன்? அவன் போயிட்டான்னு இவளுக்கு காதல் இல்லை. நாம் இருந்தென்னா பிரயோஜனம்? இப்படி வேணுமானா வைச்சிக்கோ. அதேமாதிரி தானே, ஆம்பளைக்கும் பொண்டாட்டி இருக்கிறாள்? அவன் பொண்டாட்டி இன்னொருத்தனோடு போயிடறாள். இவன் அவளுக்குப் பணம் கொடுப்பானா? நீ எவனோடு போனியோ,அவனுக்கு இன்னும் கொஞ்சம் செலவுக்குக் கொடு என்பானா? (சிரிப்பு) இவன் அவளிடம் பணத்தைக் கொடுத்து அனுப்புவானா? (பலத்த கைதட்டல்) அது என்னா? அது ஒரு காட்டுமிராண்டி காலத்து ஒரு எண்ணமே தவிர மனித தன்மையான காரியமாகுமா? அவளைப்பற்றி இவ்வளவு பேசறதுன்னா நாம பேசுகிறவருடைய பிள்ளைகளுக்கு எல்லாம் இவள் அந்த மாதிரி மரியாதை பண்ணுவானா? அவன் மருமகன் போயிடறான் எங்கேயோ, இவன்பணம் கொடுத்து இன்னும் போயிசெலவு பண்ணிட கொடுப்பானா? (சிரிப்பு) இவை இயற்கைக்கு மாறானது. அனாவசியமா அந்தப் பெண்கள் சமுதாயத்தை நாசமாக்க வேணும், அடிமையாக்கவேணும் எண்ணத்தோடு கற்பனையாக்கப்பட்டுள்ளது. அது மாத்திரமில்லாமல் அவள் (கண்ணகி) என்னா யோக்கியமாய் நடந்துகிட்டாள். அவளுடைய வீரத்தைப்பற்றி எழுதி இருக்கிறானேதவிர, அவளுடைய புத்தி எவ்வளவு அயோக்கியத்தனமான புத்தி? என்னென்னமோ அதிசய அற்புதங்களைச் சாமி, பூதம், பேயி, பிசாசு, தெய்வம் என எல்லாத்தையும் அதிலே கொண்டாந்துவிட்டான். அது எப்படியோ நாசமா போகட்டும். அவள் புருஷனை(கோவலனா) எவனோ திருட்டுகேசு போட்டு, தண்டிச்சிப் போட்டான். (சிரிப்பு)அதுக்காக இவள் என்ன பண்ணவேணும்? ஆத்திரமிருந்தால் அவனோடு சண்டைக்குப் போ? யாரோடு? அந்த ராஜாவோட. அதை விட்டுப் போட்டு, மதுரை உன்னை என்ன பண்ணுச்சி? (பலத்த சிரிப்பு) மதுரைக்கு ஏன் நெருப்பு வைச்சே? காரணம் சொல்ல வேணுமே அய்யா - மதுரையில் இருந்தவங்க என்னா அக்ரமம் பண்ணினாங்க? அதிலேயும் எவ்வளவு முட்டாள்தனமா அந்தக்கதையைப் பொறுத்தறான்? அவள் தம் முலையைப் பிடிச்சி திருகினாளாம், அது கையோட வந்திட்டுதாம்.(சிரிப்பும் கைதட்டலும்) அவள் அதை (முலையை) வீசினாளாம். மதுரையே நெருப்பு பிடிச்சிகிட்டுதாம். (சிரிப்பு) ஒவ்வொரு பொம்பளை முலையிலேயும் நெருப்பு இருந்தால் நெருப்புக்குச்சியே வேண்டாமே (பலத்த கைதட்டல் சிரிப்பு) என்னா கதை? யாருக்குத்திருகினா முலை கைக்கு வரும்? (பலத்த சிரிப்பு) அதை வீசினால் எப்படி நெருப்பு பிடிக்கும்? (சிரிப்பு) நெருப்பு பிடிச்சால், இவள் யோக்கியஸ்தி என்ன சொல்றாள்? பாப்பானை விட்டுட்டு மற்றவனை எல்லாம் எரிச்சிடுங்கிறாள் (சிரிப்பு) என்னா அர்த்தம் இதுக்கு? அப்ப அந்த கதையினுடைய கருத்து என்னா? பாப்பானை வாழ வைக்க வேணும்? அவனுக்கு உதவி பண்ணணும். மதுரையே நெருப்பு பிடிக்கணும்னா பாப்பானை ஏன் விடறே. நம்மாளு கதியெல்லாம் என்னாகிறது? அவனெல்லாம் உனக்கு என்ன பண்ணினான்? அதை தமிழ்படுத்தினவனுக்கு புத்தியே இருக்காதே நான் தான் சொல்றேனே (பலத்த சிரிப்பு) அறிவுக்கு அது கொஞ்சம் கூட உதவி பண்ணாது.
ஆகவே இந்த மாதிரி அவுக கொஞ்சம் கூட பகுத்தறிவை பயன்படுத்தாமே, அவுக அங்கே வைச்சிகிட்ட கதைகளும், அவுங்க வைச்சிகிட்டே கோலாகலமும், அவுக பேசினதும் கொண்டதையும் பார்த்தால் எல்லாம் அந்த மூடநம்பிக்கை அந்த பழைய தமிழனுடைய உணர்ச்சிதான். ஏதோ சிலபேர் சொல்றாங்க. வெளியே வந்துதான் பேசுவாங்களே, தவிர அங்கே உள்ளே பேசமுடியலே. பெரிய பணம் செலவுபண்ணினாங்க. அந்த பணத்தைக் கொண்டாவது, ஏதாவது ஆராய்ச்சிக்குப் பயன்படுத்தினாங்களா? ஆராய்ச்சின்னா என்னா? அதிலே இருக்கிற கருப்பொருள், நுண்பொருள், வெங்காயப் பொருளைக்கண்டு பிடிக்கிறதா? அதிலே இருக்கிறதை ஆராய்ச்சிப்பண்ணி தமிழனுக்கு எது எது அனுகூலம்? தமிழனுக்கு எது எது கேடானது? அறிவுக்குப் பொறுத்தமானது எது? எது? அறிவுக்குக் கேடானது எது எது? அந்த மாதிரி நீ ஆராய்ச்சி பண்ணி அதைத் தள்ளி இதைச் சேர்க்கிறதுன்னு சொன்னா உன்னுடைய ஆராய்ச்சிக்கு ஒரு அர்த்தமாகவாவது இருக்கும். எதைக் கொண்டு ஆராய்ச்சி பண்ணப்போறே?
குறள்ஆராய்ச்சிக்குன்னு பணம் கொடுத்தாங்களாம். குறளை யோக்கியமாய் ஆராய்ச்சி பண்ணினா 1330 குறளிலே அதிலே சரிபகுதி 665 குறளை நீக்கிப்போட்டுதான் வேறே புத்தகமாய் போடணும். அதிலே அந்தக் காலத்துக்கருத்து மழிஞ்சி இருக்குது. அந்த பழைய காலத்து பார்ப்பானுடைய கருத்து, என்னென்னமோ தந்திரமா வேறெ கருத்தைச் சொல்றேனுங்கிறானே தவிர அந்தக் கருத்தை இவன் சொல்றதுக்கு இடம் எங்கே மிச்சமிருக்குது? அதிலே கடவுள் வர்ரான். அதிலே தெய்வம் வர்ரான்? அதிலே மேல்லோகம் வருது. கீழ்லோகம் வருது. எதெது நாம மூட நம்பிக்கைன்னு சொல்றோமோ அதெல்லாம் அதிலே இருக்குது.
அந்தக் காலத்திலே அவனுக்கு அவ்வளவு தான் புத்தி இருக்குதுன்னு சொல்றதோ அதுக்குவேறு ஒரு கருத்து இருக்குதுனு சொல்றதோ அது நம்மளை தற்கொலை பண்ணிக்கிறதுதான். என்னா அவசியம்? இவ்வளவு தெளிவான காலத்திலே, எவ்வளவோ, அதிசயங்கள் அற்புதங்கள் எல்லாம் நடக்கிற காலத்திலே, நமக்கு வேண்டியது 2000 வருஷத்துக்கு முன்னாலே பண்ணின (குறளிலே) இருக்குதுன்னா? எப்படி அதிலே இக்காலத்தியது இருக்கமுடியும்? இன்றைய தினம் நமக்கு வேண்டியதை அதிலே இருந்து எப்படி பார்க்க முடியும்? ஆகவே பகுத்தறிவைக் கொண்டு சிந்திக்க வேணும். மொழின்னா என்னா அது? நாம பிறக்கிற போது நம்மோடு ஒட்டிகிட்டா, வந்தது? ஏதோ நமக்குப் பொண்டாட்டி வாய்க்கிறாப்பிலே, யாரு பிறக்கிறபோதோ இவனுக்குன்னு வந்தாள் பொண்டாட்டிங்கிறா? எல்லாம் வயசாயிடுச்சி, இங்கே இருக்கிறா அங்கே இருக்கிறான்னா, கேட்கிறோம், பார்க்கிறோம், பின்னே அவளோடு மாட்டிக்கிறோம். அப்புறம் புருஷன் பொண்டாட்டியாக ஆயிடுகிறோம். (சிரிப்பு) ஏன்னா நமக்குஅது கூடவேவந்தது.
அதே மாதிரி நமக்கு மொழி வாய்ச்சிதுன்னா தமிழன் வயிற்றிலே பிறந்ததினாலே தமிழ் மொழியாச்சி. தமிழன் வீட்டிலேயே பிறந்து, தமிழன் கிட்டேயே வளர்ந்ததினாலே, தமிழ்மொழியாச்சி. தமிழன் வீட்டிலே பிறந்த பிள்ளையை தெலுங்கன் வளர்த்தினானா அது தமிழ் பேசுமா? தெலுங்கு பேசுமா? தமிழன் வீட்டிலே பிறந்து இங்கிலீஸ்காரன் வளர்த்தினானா? கன்னடியன் வளர்த்தினானா? தமிழ் நாட்டிலே பிறந்தவன் சீமைக்குப் போயிட்டான்னா? பாகிஸ்தானுக்குப் போயிட்டா அங்கே துலுக்குப் பேசறான். இங்கிலாந்துக்குப் போயிட்டா இங்கிலீசு பேசறான்? ரஷ்யாவுக்கு போனா ரஷ்யா பேசறான்? எது அவனுக்குத் தாய்மொழி? மொழிப் பயிற்சிக்கு ஒரு உணர்ச்சியை ஏற்படுத்துறோம் - சிந்திக்கணும் நாம எல்லாம்.
தாய் மொழின்னாலும் அப்படித்தான். தாய் நாடுன்னாலும் அப்படித்தான். எங்கே இருந்தாலும் மொழி ஒரு வாய்ப்பு. வந்து சேர்ரது. சுற்றுச் சார்பு; எப்படி இருக்குதோ அது போல வர்ரது. அதுக்காக வேண்டி, அதுக்குத்தான் (தமிழுக்காக) நான் உயிரை விடுவேன். அது தான் என்னுடைய மொழின்னா? என்னா கட்டாயம் இது? எனவே தான் நாங்கள் மொழியைப் பற்றி நாங்கள் ஏதாவது சொல்லணும்ன்னா நமக்குப் பயன்படுதா? நம்மை நடத்தக் கூடியதாக இருக்கிறதா? நமக்கு இருக்கும் இழிவை எல்லாம் நீக்கத் தக்கதாக இருக்குதா? என்றெல்லாம் சிந்தின்னுகேட்கிறோம். இனிமேல் தமிழில் பண்ணிக்கலாம் என்கிறான்? இனிமேல் நீ பண்றதுக்கு இதுவரை பண்ணியிருக்கிறதை எடுத்துக்கிட்டா, உனக்கு என்னா நட்டம்? என்னா அவசியம்? அந்தக் கண்ணோடு நீங்க பார்க்கிறதில்லே. இதுமொழி வெறின்னுபேசறது. நீ யாருக்கு பிறந்தேங்கிறான்? (சிரிப்பு) இதைத் தான் கேட்க முடியுது அவனுக்கு .என்னை நீயாருக்கு பிறந்தேன்னு கேட்க வேண்டாம். நீ உன் அம்மாகிட்டே போயி நான் யாருக்குப் பிறந்தேன்னு உன் அம்மாளை கேளு (சிரிப்பு வெட்கம், வெட்கம்) அப்ப தான் தெரியும் எவன் எவனுக்குப் பிறந்தான்னு, (சிரிப்பு)
அதை விட்டுவிட்டு சும்மா நீ யாருக்குப் பிறந்தே? யாருக்கு பிறந்தேன்னு கேட்டால் அது குறும்புதானே. யாருக்குப் பிறந்தான்னு அவன் முதுகிலே யார் எழுதி அனுப்புறாங்க. இவன் இன்னாருக்குத் தான் பிறந்தான்னா (சிரிப்பு) அது என்னா இப்ப பெரியப் பிரச்சினை? நேற்றைய தினம், நேற்றுன்னா நேற்று தான் (08.02.68இல்) நான் பார்த்தேன் பத்திரிகையிலே அமெரிக்காவிலே 1,23,000 குழந்தை பிறந்திருக்குது. ஒரு வருஷத்துக்கு 1 லட்சத்து 23 ஆயிரம் குழந்தையிலே 26 ஆயிரம் குழந்தை கல்யாணமில்லாமலேயே பிறந்திருக்குது (சிரிப்பு) எங்கே? அமெரிக்காவிலே? ஜப்பானிலே கணக்கு எடுத்துகிட்டா 100க்கு 30 பேர் முதல் 40 பேர் வரைக்கும் தகப்பன் பேரு போட முடிகிறதே இல்லை (சிரிப்பு). அதைக் கேட்கிறதே ஒரு மரியாதைக் குறைவா நினைக்கிறான். மரியாதைக் குறைவாகயில்லை அதை ஒரு நாகரிகக் குறைவுன்னு நினைக்கிறான் தகப்பன்பேரு கேட்பதை. அதுவெல்லாம் கர்நாடகநாடா? காட்டுமிராண்டி நாடா? இன்னும் எவ்வளவோ நடக்குது? ஆஸ்பத்திரியிலே 10 ஆயிரம் குழந்தை பிறந்தால், 2500 முதல் 3000 குழந்தைகளுக்கு தகப்பன் பேரு பதிவாகாத குழந்தைகளாகும் என ஆஸ்பத்திரி ரிப்போர்ட்டிலிருந்து வருது.
உலகத்திலே சாதாரணமாக பழக்கப்படி அங்கங்கே இருக்கிற அந்தந்த சமயத்து நாகரிகத்தின்படி காரியம் நடக்குது. எனக்குக் கல்யாணம் வேண்டாம் ஆம்பளையும் சொல்றான், அவளை கட்டிகிட்டு அழுவனுமே என்கிறான். பொம்பளையும் சொல்றாங்க. ஒருத்தனை கட்டிகிட்டா அவங்கிட்டேய இருக்கிறதுன்னா எனக்கு அசிங்கமாயிருக்குதுங்கிறாள் (சிரிப்பு) ஏன் என் கையைக் கொண்டு நான் பிழைச்சிக்கிறேன். இன்னொருத்தன் தயவு எனக்கு என்னா? இஷ்டப்பட்ட போது வா, போ அப்படீங்கிறாள் (சிரிப்பு-கைதட்டல்) நமக்குஇதுவெல்லாம் அதிசயமாயிருக்கிறதினாலே, நாம சிரிக்கிறோம்.
மலையாளத்திலேயும் இன்னைக்கு (1968இல்) பெரிய பெரிய வீடு, பிராமணர் வீடு, ராஜா சமுதாயம், இன்னும் பெரிய ஜமின்தாரன், பரம்பரையான பணக்கார குடும்பம், அங்கெல்லாம் புருஷனே இல்லையே அவுக (பொம்பளை) பிள்ளைகளுக்கு இவள் இஷ்டம் போல ஒருத்தன் வரப்போக இருப்பான். அவள் இஷ்டம் போல ஒருத்தன் வரப் போக இருப்பான். இல்லைன்னா நின்னுக்குவான். வேண்டாம்னா போயிடுவான். கேளுங்களே இங்கேயிருக்கிற பெரிய மலையாள உத்தியோகஸ்தனை? நீ எங்களைப் பார்த்து இப்படி சொல்றியே. உன் அப்பன் இப்படிம்பான். உங்க அம்மா எப்படி இருந்தாங்க. உங்கள் பாட்டி எப்படி இருந்தாங்க. அப்படி எத்தனையோ நாட்டிலே அந்த முறை இருக்குது. இப்படி ஒவ்வொரு நாட்டிலே அப்பப்ப தோணுகிற உணர்ச்சிக்கு ஏற்ற வண்ணம் அவுகவுங்களுக்கு எது எது மானம், எது எது சுதந்தரம்-ன்னு நினைக்கிறாங்களோ, அந்தப்படி நடந்துக்கிறாங்க. இங்கே அதுவஸ்துக் கணக்காய்ப் போச்சி. அவன் யாருக்கோ, பிறந்தவன். அவன் அவுசாரிக்கு பிறந்தவன். அவன் அப்படிப் பிறந்தவன்னு பேச்சு இங்கே வழக்கமாய்ப் போச்சி. அந்த மாதிரி மற்ற நாட்டிலே இப்படி பேசறதில்லே.
நமக்கு இந்த சுதந்திரம் கிடைச்சுது. ஜனங்களுக்கு ஓட்டு
கொடுக்கிறதுங்கிறதுக்கு முன்னே. மலையாளத்திலே தகப்பன் பேருக்கே காலம் இல்லியே. நாமினேஷன் கொடுத்தான்னா நம்ம பேரு போட்டு கீழே தகப்பன் பேருன்னு போடுவோம். அங்கே (மலையாளத்திலே) அவன் பேரை போட்டு, கீழே குயவாநச டிச ஆடிவாநச டிச காரணவன் ஒண்ணு தகப்பன் பேரைக் கொடு. இல்லேன்னா உன் அம்மாபேரு கொடு. அதையும் கொடுக்கலேன்னா உங்கள் குடும்பத்திலே எவன் பெரியவனோ அவன் பெயரைக் கொடு. ஒரு ஏற்பாடு பண்ணிகிட்ட பழக்கம்கிறது இல்லாமே, அதிலே என்னா அவமானம்? இன்னும் கொஞ்ச நாளாய்ப் போனால் கலியாணமே நின்னு போகும்.கலியாணம் என செய்து கொள்ள யாரும் சம்மதிக்க மாட்டாங்க.
பெண்களையெல்லாம் நாம நல்லபடி படிக்க வைச்சிட்டோமானா அதுகள் எல்லாம் தன்னுடைய ஜீவனத்துக்கு மாசம் ரூ.200, 300, 1000 என சம்பாதிக்கும்படியான வசதி ஏற்பட்டுப் போச்சின்னா இந்தப்பயல் எனக்கு எதுக்குன்னுதானே கேட்பாங்க. ஒருத்தனைக் கட்டிக்கிறதுன்னா காப்பாத்த ஒரு ஆளு வேணுமேன்னுதானே அவள் கட்டிக்கிறாள். தனியாக இருந்தால் நான் எப்படி வாழுவது. எவனாவது இழுத்துகிட்டு போயிடுவானேன்னு பயந்துகிட்டுதானே அவள் கழுத்திலே ஒரு கயிறு கட்டவேண்டியதாயிருக்குது.அவளுக்கு ஒரு புருஷன் தேவையிருக்குது. இது எல்லாம் மாறிட்டா அவுங்களே ஒருகைபார்த்துகிறாங்க. அது இன்னைக்கு வரலேன்னாளும், வர வேண்டியது தானே நாளா வட்டத்திலே,
ஆகவே தோழர்களே இந்த மாதிரி காரியமெல்லாம், ஒரு முன்னேற்றமான ஒரு காரியம் பண்றதுக்கு யாரும் தடையாய் இருக்கக் கூடாது.எனவே ஏதோ வாய்ப்பை வைச்சி சொல்லவேண்டிய பல விஷயங்களை உங்களுக்கு எடுத்துச் சொன்னேன். தயவு செய்து நீங்கள் எல்லாம், கடைசியா உங்களைக் கேட்டுகிறேன். நான் சொன்னதை எல்லாம் நம்பாதீங்க. (சிரிப்பு) நான் சொன்னேன்கிறதுக்காக ஒன்னையும் ஏற்றுக்காதீங்க. உங்களுக்கு எப்படி பல கருத்துக்கள் தோணுதோ அதுபோல எனக்கும் தோணிச்சி. நீங்கள் ஒரு பழக்கவழக்கம், நாட்டுப் பழக்கவழக்கம், மதப்பழக்கவழக்கம், சமுதாயப்பழக்கம்ன்னு வைச்சிக் கிட்டுகருத்துக்களை புக வைக்கிறீங்க. என்னைப் பொறுத்தவரைக்கும் நான் அப்படி இல்லே. நாடு சமுதாயம் ஜாதி, கடவுள்ன்னு ஒண்ணும் நினைக்காமே, அறிவுக்கு என்ன தோணுதோ அதைப் புரிஞ்சிகிட்டு நான் சொல்லறேன். ஆனதினாலே அதை நீங்கள் நான் சொல்றதைப் பற்றி வருத்தப்படாதீங்க. ஏதோ ஒரு மாறானபேச்சி ரேடியாவிலே வந்தால் அதைப் போட்டு உடைப்பீங்களா? உங்களுக்கு ஆகாத காரியம் சொன்னா? அந்தமாதிரி நினைச்சிகிட்டு என்கருத்துக்களில் ஏற்றுக்கிறதை ஏற்றுகிட்டு மற்றதைத் தள்ளி விடுங்க.
என்னைச் சில கேள்வி கேட்கிறாங்க. எனக்கு அது சரியா தோணலே. தமிழ்வாணன்னு ஒருத்தரு என்னைப் பற்றி தரக்குறைவாக எழுதினதுக்குத் தங்கள் கருத்தென்ன? நான் அதைப் பார்க்கவே இல்லை. அவரு எழுதினா என்ன நட்டம்? அவுகவுங்களுக்கு எழுதுகிற வசதி இருக்குது உரிமைப்படி. இப்ப நான் சொல்லலியா நான் திட்ட வில்லையாதமிழ்புலவன் எல்லாம் முட்டாளுன்னு(சிரிப்பு)புலவன்னாஅவனுக்குமானமிருக்காதுன்னு சொல்றேன். படிக்கிறதுக்குதான் அவுங்க புலமைப் பயன்படுதுன்னு. அவுங்க எல்லாம் என்கிட்டே அடிக்க வர்ரதுன்னுபேரா? அது போல என் கருத்து பிடிக்காத ஒருத்தன் என்னைக் குறை சொல்றான். அனுமதிக்க வேண்டியதுதான் அதை. எனக்கு நாலு பேரைச் சொல்ல எனக்கு உரிமை இருக்கிறபோது என்னைப் பத்தி இன்னொருத்தன் சொல்லக் கூடாதுன்னா என்ன அர்த்தம்? நான் என்னா நெய்யிலே பொறிச்சவன்? அவன் என்னா எண்ணையிலே பொறிச்சவன்? (சிரிப்பு) (கைதட்டல்) ஆனதினாலே, இந்த மாதிரி சொல்றதுக்கு எல்லாம் நானும் வருத்தப்படறதில்லே. என்னைப் பேசினான் - பேசினான் அவ்வளவு புகழ்ந்து பேசியிருக்கிறான். ஏதோ அவன் பத்திரிகை அதனாலே விற்குதுன்னு நினைச்சான் (சிரிப்பு). அதுக்கெல்லாம் நாம கஷ்டப்பட்டோமானால், நான் கொஞ்ச நேரத்துக்கு முன்னே சொன்னேனே. செருப்பிலே (என்னை) அடிச்சான் நான் பொறுத்துகிட்டுதான் போனேன்னு, எழுதினேன்.
கடலூருக்கு ஒரு மகாநாட்டுக்குப் போயிட்டு, திரும்பி வர்ரேன் நானு. ரிக்ஷாவிலே போனேன். இருட்டிப்போச்சி. சின்னதா மழையோ பேயிது. டிராவலர்ஸ் பங்களாவுக்குத் தான் நான் போறேன். ஒரு கட்டிடத்திலே நின்றுகொண்டிருந்தான். அவன் காலிலே மரச்செருப்பு போட்டிருந்தான். ஒரு செருப்பை தூக்கி வீசிஎறிஞ்சான். அது ரிக்ஷா மேலேயே வந்து விழுந்தது. பார்த்தேன். மரச்செருப்பு நல்லாயிருந்தது. அடே இன்னொன்னையும் போட்டிருக்கக் கூடாதா? (சிரிப்பு கைதட்டல்) நிஜமா நடந்ததுங்க. அவன் அங்கேயே இருந்திருக்கிறான். என் கூட வந்தவன் யார்ரா அயோக்கியப் பயல் அப்படீன்னு சத்தம் போட்டான். அவனை ஏன் சத்தம் போடறேன்னேன். போயிட்டு திரும்பி வந்தேன். அதையும் இன்னொரு செருப்பையும் போட்டான். (சிரிப்பு)இரண்டுசெருப்பாச்சின்னேன். அதை ஒரு மாசம் இரண்டு மாசம் நான் பேசுகிற கூட்டத்திலே எல்லாம் அதைக் காட்டினேன். வீரமணி சொன்னாரு. நானும் தான் இருந்தேன் அப்போ, அவரு கடலூர்காரர் தான். நானும் இருந்தேன் அப்போ. அதைப் போட்டவன் யாருன்னு கூட எனக்குத் தெரியும் அப்படீன்னு கூடச்சொன்னார். என்னா ஆயிப்போச்சி அதனாலே.
நான் சின்னாளப்பட்டியில் கூட்டத்தில் பேசிக் கொண்டிருக்கிறேன். நான் அப்ப காங்கிரஸ்காரன். கல்லு விர்விர்னு வருது. லைட்டு சிம்னியெல்லாம் உடைஞ்சிப் போச்சி. நான் ஆரம்பிச்ச புதிசு. ஒரு கல்லு கையில் விழுந்தது. போலீசாலே கூட்டத்தை அடக்க முடியலே. பேச்சை நிறுத்துன்னான் போலீஸ்காரன். நான் நிறுத்த மாட்டேன்னேன். அவனா கூட்டத்தைக் கலைச்சிபோட்டான். எல்லாம் வீட்டுக்கு போக வேண்டியது அப்படீன்னுட்டான். அப்புறம் எல்லாம் எழுந்திரிச்சாங்க. என்னை ஒரு வண்டியிலே உட்காரவைச்சி முன்னாலே கான்ஸ்டேபிளை உட்காரவைச்சிபின்னாலே அந்த போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் உட்கார்ந்து கிட்டு, ரயில்வே ஸ்டேஷனில் என்னை விட்டுட்டு அவன் போனான். கொஞ்ச நாள் கழித்து அதே ஊருக்கு என்னைப் பேச கூப்பிட்டான். எனக்கு பண்ணாத மரியாதை எல்லாம் பண்ணினாங்க.
எனவே தோழர்களே நீண்ட நேரம் உங்களை காக்க வைத்து விட்டேன். என்னைப் பாராட்டியவர்களுக்கு நான் நன்றி கூறி என் பேச்சை முடிச்சிக்கிறேன். வணக்கம்.
நூல் - பெரியாரின் சிந்தனைத் திரட்டு
தொகுப்பாசிரியர் - து.மா.பெரியசாமி
Comments
Post a Comment