பி.ஜே.பி.யின் பிரச்சார யுக்திகள்



ஆர்.எஸ்.எஸ். முதற்கொண்டு பி.ஜே.பி. வரையிலான அமைப்புகள் அனைத்தும் ஒரே நோக்குடையவை என்பதை பலமுறை பல ஆதாரங்களோடு உறுதி செய்துள்ளோம்.
ஆகையால், அவற்றின் ஒரே நோக்கான இந்து ராஷ்ட்டிரா - அல்லது ஆரியப் பார்ப்பன ஆதிக்கத்தை நிலை நாட்டல் என்ற இலக்கினை அடைய, அவர்கள் பல பிரச்சார முறைகளைத் தந்திரமாகக் கையாண்டு வருகிறார்கள். அவற்றைச் சரியாகப் புரிந்து கொண்டால்தான் அவர்களின் கவர்ச்சி வலையில், மதபோதையில் மாட்டாமல் மற்றவர்கள் தப்பிக்க இயலும் என்பதால், அவற்றைப் பற்றி தெரிந்துகொள்ள வேண்டியது கட்டாயமாகிறது.
அவர்கள் எடுத்த எடுப்பிலே இந்துத்துவாக் கொள்கையை போதிக்க ஆரம்பிப்பதில்லை. முதலில் உடற்பயிற்சியளிக்கிறோம் என்று உறுப்பினர்களைத் திரட்டுவர். பின் தொண்டு செய்கிறோம் என்று மக்களை அணுகுவர் என்று முன்னமே கூறிவிட்டோம். இவர்களது இந்த முயற்சிகள் மக்களைக் கவர ஒரு கவர்ச்சி ஏற்பாடே தவிர அவர்களின் நோக்கு அவையன்று. பொதுநோக்கோடு மக்களை ஈர்த்து, மெல்ல மெல்ல இந்துத்துவா விஷத்தை செலுத்துவது தெரியாமலே செலுத்திவிடுவர்.
இந்த அமைப்புகள் அனைத்தும் ஒன்றுக்கொன்று உதவிக் கொள்ளக்கூடியனவாகவும், காலச்சூழலுக்கு ஏற்ப மாறிக் கொள்ளக் கூடியனவாகவும் செயல்படுகின்றன. குறிப்பாக அரசியல் சூழலுக்கு ஏற்பத் தங்களை மாற்றிக் கொள்ளக்கூடியவையாக இவைகள் இருக்கின்றன.
வி.எச்.பி. ஆர்.எஸ்.எஸ். சிவசேனா போன்ற அமைப்புகள் எப்பொழுதும் இந்துத்துவாக் கொள்கைகளைப் பேசி இந்துக்களை உசுப்பி ஒன்று சேர்த்துக் கொண்டிருக்கும். ஆனால், பி.ஜே.பி. ஆட்சியில் மட்டுமே கவனத்தைச் செலுத்தும்.
தேர்தல் என்று வந்துவிட்டால், வி.எச்.பி.யின் முக்கிய முழக்கமான, இராமர் கோயில் கட்டுவோம், இராம இராஜ்யத்தை அமைப்போம் என்ற முழக்கங்களை பி.ஜே.பி. முதன்மையாக முழங்கும். இதன் மூலம் இந்துக்களின் ஓட்டுக்களைக் கணிசமாகப் பெற்றுக் கொள்ளும். தேர்தல் முடிந்ததும் வி.எச்.பி. ஆர்.எஸ்.எஸ். உடன் எங்களுக்குச் சம்பந்தம் இல்லையென்று கூறிக் கொள்ளும். ஆனால் அந்தரங்கமாக ஆர்.எஸ்.எஸ். என்ன கூறுகிறதோ அதையே வி.எச்.பியும் செய்யும், பி.ஜே.பி.யும் செயற்படுத்தும்.
கட்டப்போவதாகக் கூறிக்கொள்ளும் இராமர் ஆலயத்தைக் கட்டி முடித்துவிட்டதாக படம் போட்டு சுவரொட்டிகளில் விளம்பரம் செய்வர். இதுதான் இராமர் ஆலயம் என்று சுவரொட்டியில் பெரிய படம் போடுவர்.
அவர்கள் எதை விரும்புகிறார்களோ அதைச் செய்து முடித்துவிட்டதாகவே ஒரு எண்ணத்தை உருவாக்குவதில் வல்லவர்கள். இது உளவியல் ரீதியான ஓர் அணுகுமுறை.
மரம் தூக்குகின்றவன் கும்பலாகத் தூக்கும்போது, ஒருவன் சொல்லுவான் இதோ தூக்கியாச்சி என்பான்! அந்த உற்சாகத்திலே தூக்கமுடியாத மரமும் தூக்கப்பட்டு விடும். அதே அணுகுமுறையில்தான் ஆரியப் பார்ப்பன ஆதிக்கக் கூட்டத்தினர், தமது விருப்பங்கள் எல்லாம் நடந்துவிட்டதாகவே பிரச்சாரம் செய்வர்.
இந்துமதந்தான் ஜீவகாருண்ய மதம்.
இந்துமதம் எல்லோரையும் நேசிக்கின்ற மதம்.
இந்துமதம் புழுப்பூச்சிகளையும் நேசிக்கிறது
என்று சொல்லிக் கொண்டு,
இஸ்லாம் மதம் வன்முறையானது, இஸ்லாமியர்கள் வன்முறை யாளர்கள், இந்துக்களை மதம் மாறச் செய்து இஸ்லாமியர்களாக ஆக்கிவிடுவார்கள். முடிவில் இந்தியா மதவெறி கொண்ட இஸ்லாமிய நாடாக ஆகிவிடும்.
முஸ்லீம்கள் இயற்கையாகவே காமவெறிப் பிடித்தவர்கள். இந்துப் பெண்களைக் கற்பழித்து இந்துப் பெண்ணின் கருப்பையில் முஸ்லீம் குழந்தைகளை உற்பத்தி செய்வார்கள். அவர்களிடம் பல பெண்களை மணந்துகொள்ளும் பழக்கம் இருப்பதால் ஏராளமான குழந்தைகளைப் பெற்று முஸ்லீம் எண்ணிக்கையைப் பெருக்கிவிடுவார்கள். இந்துக்களைவிட இவர்களின் எண்ணிக்கைப் பெருகிவிடும்... என்று வி.எச்.பி., ஆர்.எஸ்.எஸ். பி.ஜே.பி வட்டாரங்கள் தங்கள் பிரச்சாரங்களைத் தொடர்கின்றன.
உண்மையில் இவர்கள் அஹிம்சாவாதிகளா? இவர்கள் கடவுள்கள் அஹிம்சா வழியில் சென்றவையா? இவர்கள் கொள்கை பல்லுக்குப்பல், தலைக்கு தலை என்பதல்லவா? அதுவும் வீண் வம்புக்குச் செல்வதுதானே இந்துவெறியர்களின் வழக்கம்.
மசூதிக்குள்தான் இராமர் பிறந்தார் என்பது எவ்வளவு பெரிய மோசடிப் பிரச்சாரம். இப்படியிருக்க, வன்முறை கும்பலான இவர்கள் முஸ்லீம்களை வன்முறையாளர்கள் என்று கூறி வெறுப்பேற்றுகின்றனர்.
முஸ்லீம்கள் எண்ணிக்கையைப் பெருக்கிவிடுவார்கள் என்பது கற்பனையான ஒரு கதைக் கீடேயன்றி அதில் உண்மையில்லை.
முஸ்லீம்கள் பல பெண்களை மணக்க உரிமையளித்திருந்தாலும், எல்லா முஸ்லீம்களும் அப்படி மணப்பதில்லை. பெரும்பாலும் ஒரு மனைவியோடுதான் வாழ்கிறார்கள்.
மதம் உரிமை வழங்கிவிடுவதால் எவனும் மனைவிகளைத் தேடிக் கொள்வதில்லை. அவனவன் பொருளாதார நெருக்கடி குடும்பத்தைக் கட்டுக்குள் வைத்து விடுகிறது.
இந்திய அரசின் மக்கள் தொகைக் கணக்கெடுப்புப் (சென்ஸஸ்) படி இந்துக்களே முஸ்லீம்களைவிட பலதார மணம் புரிகின்றனர்.
இதில் ஒரு வேடிக்கை என்னவென்றால் பலதார மணம் செய்து கொள்ளும் நோக்கத்தோடே சில இந்துக்கள், இஸ்லாம் மதத்திற்கு மாறியுள்ளனர்.
புகழ்பெற்ற திரைப்பட இயக்குநர் மகேஷ்பட் தன் முதல் மனைவியை விவாகரத்து செய்துவிட்டு, மறுமணம் கொள்வதற்காகவே இஸ்லாம் மதத்தில் சேர்ந்தார்.
1960ஆம் ஆண்டு முதல் இன்றுவரை இந்து முஸ்லீம் சதவீதம் மாறவே இல்லை. அதாவது, 1960இல் இந்தியாவின் மொத்த மக்கள் தொகையில் இந்துக்கள் 82 விழுக்காடு முஸ்லீம்கள் 11.5 சதவிகிதம் (விழுக்காடு), தற்போதும் சற்றேறக்குறைய அதே நிலையிலேயேவுள்ளது. ஆக, முஸ்லீம்கள் பெருகி இந்தியா முழுவதும் நிரம்பிவிடுவார்கள்; இந்தியா முஸ்லீம் நாடாகிவிடும் என்பது தவறான பிரச்சாரம், முஸ்லீம்களை வெறுக்கச் செய்வதற்கான யுக்தி.
அதேபோல் இந்திய அரசுப்பணிகளில் முஸ்லீம்கள் குறைவான அளவே பணிபுரிகின்றனர்; குறைவான அளவே அவர்களுக்கு வேலை கிடைக்கிறது.
பொறி இயல் வல்லுநர்களாக 8 சதவிகிதம், மருத்துவர்களாக 2.5 சதவிகிதம் இந்திய ஆட்சித் துறையிலே (அய்..எஸ்.) 2 சதவிகிதம், இந்திய காவல்துறையில் 3.5 சதவிகிதம், உயர் அதிகாரிகள் 3 சதவிகிதம், வங்கித் துறையில் 2.5 சதவிகிதம், தனியார் துறையில் 5 சதவிகிதம்.
மக்கள் தொகையில் 11.5 சதவிகிதம் உள்ள முஸ்லீம்கள் மிக மிகக் குறைவான அளவே வேலை பெறுகிறார்கள் என்பதை இது காட்டுகிறது. ஆனால் மக்கள் தொகையில் 2 சதவிகிதம் உள்ள ஆரியப் பார்ப்பனர்கள் பெரும்பான்மையான சதவிகித இடங்களை அநியாயமாக அனுபவித்து வருகிறார்கள். மற்றவர்களுக்குக் கிடைக்கக்கூடிய வேலை வாய்ப்புகளை அனுபவித்துக் கொண்டிருக்கின்ற ஆரிய கூட்டம், அப்பாவி முஸ்லீம்கள் மீது பழியைப் போட்டு, வெறியேற்றுவது எவ்வளவு மோசடி; எவ்வளவு அயோக்கியத்தனம் பாருங்கள்!
அதுமட்டுமல்ல, இந்திய நாடாளுமன்ற உறுப்பினர்களில் முஸ்லீம்களின் விழுக்காடு (மக்களவையில்) மிகக் குறைவு. மொத்த மக்களவை உறுப்பினர் எண்ணிக்கை 535. முஸ்லீம் மக்கள் தொகை 11.5 சதவிகிதம். இந்த விகிதாரச்சாரப்படி பார்ப்பின் சற்றேறக்குறைய 60 உறுப்பினர்கள் அவர்கள் இருக்க வேண்டும். ஆனால் 1952 முதல் 22 முதல் 92 உறுப்பினர்கள் வரையே வந்துள்ளனர். 1980இல் 39 பேரும், 1985இல் 46 பேரும் முஸ்லீம் உறுப்பினர்கள் வந்துள்ளனர் தற்போது.
எனவே, முஸ்லீம்கள் பல்கிப் பெருகிவிடுவார்கள் என்பதும், இந்துக்களை அடக்கி ஆண்டு விடுவார்கள் என்பதும் அப்பட்டமான பொய்.
ஆனால், உண்மையில் சிறுபான்மையினராக இருக்கின்ற ஆரியப் பார்ப்பனர் கூட்டந்தான் மற்றவர்களுடைய பங்கை, உரிமைகளை விழுங்கி, ஆதிக்கம் செலுத்தி வருகிறது.
உண்மை இப்படியிருக்க, முஸ்லீம்கள் மீது வெறுப்பு உண்டாகின்ற வகையில் பொய்யான, கற்பனையான செய்திகளைக் கூறுவது அவர்களது பிரச்சார யுக்திகளுள் ஒன்றாகும்.
இவர்களின் இயக்கத்தை மக்கள் இயக்கமாகவும், இவர்களது போராட்டங்களை மக்கள் போராட்டங்களாகவும் காட்ட இவர்கள் சில யுக்திகளைக் கையாளுகிறார்கள்.
இந்துக்கள் வீடுதோறும் ஓம் சின்னம் பொறித்த ஸ்டிக்கர் ஒட்டத் தருகிறார்கள். வீடுதோறும் ஏற்ற காவிக் கொடி கொடுக்கிறார்கள். வீதிதோறும் ஒட்ட இராமர் படம், இராமர் கோயில் படம் அச்சிட்ட (போஸ்டர்) சுவரொட்டி கொடுக்கிறார்கள். ஆனால் எதிலும் இவர்கள் தயாரித்த அடையாளத்தைக் குறிப்பதில்லை.
அனைத்தும் இவர்கள் செலவில் தயாரிக்கப்பட்டவை என்றாலும், இவர்கள் அமைப்பின் பெயரை அதில் பொறிக்காததால், அச்சிடாததால், மக்களே இவற்றை ஆர்வத்தோடு தயாரித்துக் கொண்டது போன்ற ஒரு எண்ணத்தைத் தோற்றத்தை உருவாக்குகிறார்கள். அதன் மூலம் தங்களுக்கு மக்களிடையே பெரும் ஆதரவு இருப்பதைப்போலக் காட்டுவதோடு, மக்களே இவற்றைத் தயாரிக்கும் ஆர்வம் கொண்டுள்ளார்கள். எனவே, இந்துத்வா, இந்துராஷ்டிரம், இராமஜென்ம பூமி என்பதெல்லாம் மக்கள் இயக்கம், மக்கள் போராட்டம் என்பது போன்ற ஒரு தோற்றத்தைக் காட்டுகிறார்கள். அத்தகு தோற்றத்தைக் கொண்டு, மேலும் தங்களை வளர்த்துக் கொள்ள முயற்சி செய்கிறார்கள்.
மேலும், இந்தப் போராட்டங்களில் மக்களை ஈடுபடுத்த அவர்கள் ஒரு புதுமையான யுக்தியைக் கையாண்டார்கள்.
அயோத்தியில் இராமர் ஆலயம் அமைக்க ஒவ்வொரு இந்துவும் ஒரு செங்கல், ஒரு ரூபாய் பணம் தரவேண்டும் அல்லது ஒவ்வொரு கிராமமும் ஒரு பாட்டில் கங்கைப் புனித நீர் வாங்க வேண்டும் என்று வற்புறுத்தினர்.
இதன் முக்கிய நோக்கு பணம் சேர்க்க வேண்டும் என்பதைவிட, மக்களின் பங்கு, தொடர்பு இப்போராட்டத்தில் இச்சேவையில் இருக்க வேண்டும்; இதன்மூலம் இந்தப் போராட்டம் பற்றிய விளம்பரம், பிரச்சாரம் நடைபெற வேண்டும் என்பதே அவர்களின் நோக்கு. அதாவது பணத்திற்கு பணம்; பரபரப்பான விளம்பரம்; மக்களின் ஆதரவு இருப்பதாகக் காட்டும் முயற்சி ஆகிய அனைத்தும் இதில் அடங்கியுள்ளன.
இவர்களின் பிரச்சார யுக்தியில் ஒரு முதன்மையான யுக்தி, ஒற்றுமையற்ற, வெவ்வேறு கொள்கையுடைய, வேறுபட்ட தெய்வங்களை வணங்கக்கூடிய மக்களை - ஒரே அடையாளத்தின்கீழ் கொண்டு வருதல் என்பது ஆகும்.
இதன் மூலம் இந்துக்கள் ஒவ்வொரு பகுதியிலும், தங்களுக்கென்று அமைக்கப்பட்ட வழிபாட்டு முறை, வழிபடு தெய்வம், தனிப்பட்ட அடையாளங்களை இழக்க அழிக்க வேண்டிய கட்டாயம் ஏற்படுகிறது.
மாறாக, ஆரிய கலாச்சார அடையாளங்களும், தெய்வமும் மற்றவர்கள்மீது திணிக்கப்பட்டு, ஒரே கலாச்சாரம், ஒரே தெய்வம் அதாவது ஆரிய கலாச்சாரம், ஆரிய தெய்வம் (இராமர்) என்பது நிலைநிறுத்த முயற்சிக்கப்படுகிறது.
ஜாதி பிரச்சினையென்று வரும்போது, தீண்டாமை கண்டித்துப் பேசப்படுகிறது. ஆனால் அது வெறும் நடிப்பு, காரணம், வர்ணாஸ்ரமம் வற்புறுத்தப்படுகிறது.
இந்துக்கள் என்று இவர்களால் வளைத்துப் போடப்பட்டுள்ள மக்களில் பெரும்பான்மையினர் தலித் (ஆதித் திராவிட) மக்கள் ஆவர். அவர்களை, அவர்களின் ஆதரவை இழந்துவிடக் கூடாது என்பதற்காகவே அவர்கள்மீது கரிசனம் காட்டுகிறார்கள். மற்றபடி அவர்கள் ஆதிதிராவிடர்களின் முதன்மை எதிரிகள் ஆவர்.
1995இல் ஆர்.எஸ்.எஸ். பரிவாரங்கள் ஒரு இரகசிய சுற்றறிக்கை அனுப்பின. அதை எப்படியோ முயன்று பெற்று விடுதலை நாளேடு 26.3.1995இல் வெளியிட்டு அவர்களின் உண்மையான உள்ளத்தைத் தோலுரித்தது.
அதிலிருந்து ஒரு சில முக்கியக் குறிப்புகளை இங்குச் சுட்டிக்காட்டுதல், ஆர்.எஸ்.எஸ்., பி.ஜே.பி. பரிவாரங்கள் எந்த அளவு அரிஜன மக்களின் எதிரிகள் என்பதை தெளிவாக்க உதவும் என்பதால் இங்கு குறிப்பிடுகிறேன்.
இரகசிய சுற்றறிக்கை 411/ஆர்.. 3003 11/ஆர்.எஸ்.எஸ். 003
மருத்துவர்களிடையே இந்துத்வா கொள்கையை எடுத்துச் சொல்ல வேண்டும். காலாவதியான மருந்துகளையும், போலி மருந்துகளையும் தாழ்த்தப்பட்டோருக்கும், முகமதியர்களுக்கும் கொடுக்கச் சொல்லி மருத்துவர்களைத் தூண்ட வேண்டும். இரத்த தானம் அளிக்கும் சாக்கில் தாழ்த்தப்பட்ட மற்றும் சூத்திரர்களுக்கும் பிறந்த பச்சிளங் குழந்தைகளுக்கு ஊசி மூலம் விஷத்தை ஏற்றி ஊனமாக்க வேண்டும்.
பிற்படுத்தப்பட்டோர் மற்றும் தாழ்த்தப்பட்டோர் வாழும் பகுதிகளில் கள், சாராயம், பிராந்தி, மற்றும் போதைப் பொருட்களையும் சூதாட்டம் மற்றும் லாட்டரி டிக்கட் விற்பனையைப் பெருக்க அவற்றை விற்போரைத் தூண்ட வேண்டும்.
தாழ்த்தப்பட்ட ஜாதிப் பெண்களையும் முகமதியப் பெண்களையும் வேசித் தொழிலில் ஈடுபட ஊக்குவிக்க வேண்டும்.
தாழ்த்தப்பட்டோரின் குறிப்பாக அம்பேத்கரின் இயக்கத்தவரின் பிள்ளைகளுக்கு நமது தொண்டர்கள் மூலமாகவும், ஆசிரியர்கள் மூலமாகவும் விஷங்கலந்த தின்பண்டங்களைக் கொடுத்து அக்குழந்தைகளின் மன வளர்ச்சியையும், உடல் வளர்ச்சியையும் முடக்க வேண்டும்.
கலவரங்களின்போது முகமதியப் பெண்களையும் தாழ்த்தப்பட்ட ஜாதிப் பெண்களையும் சூரத் நகரில் நடந்தது போல கூட்டாகக் கற்பழிக்க வேண்டும். அப்படிப்பட்ட நேரங்களில் நண்பரின் மனைவி, பழக்கப்பட்டவரின் சகோதரி என்றெல்லாம் ஈவிரக்கம் பார்க்கக்கூடாது.
தாழ்த்தப்பட்ட மற்றும் பிற்படுத்தப்பட்ட மக்களிடம் மூடநம்பிக்கைகளைப் பரப்ப வேண்டும். அதற்கு சாதுக்களையும் சாமியார்களையும் பயன்படுத்த வேண்டும்.
பொதுவுடைமை இயக்கங்களையும், அதைச் சார்ந்த தாழ்த்தப்பட்ட மற்றும் பிற்படுத்தப்பட்ட ஜாதியினருக்கிடையே வெறுப்பையும் குரோதத்தையும் உருவாக்கி பூசல்களையும் மோதல்களையும் தூண்டிவிட வேண்டும்.
தாழ்த்தப்பட்டோருக்கும் அம்பேத்கர் இயக்கத்தினருக்கும் எதிராக பலாத்கார (காந்தர்வ) மணமுறையைக் கடைப்பிடிக்க வேண்டும். அந்த வகுப்பு பெண்களிடம் நம்மவர்களின் (பார்ப்பனர்களின்) ஆண் உறுப்பைக் காட்ட வேண்டும். அப்பெண்களை முத்தமிட்டு, ஆபாசமான படங்களைக் காட்ட வேண்டும். அவர்களை மயக்கமுறச் செய்ய சிறு போதை மருந்துகளைப் பயன்படுத்த வேண்டும்.
பழங்குடியினருக்கும், தாழ்த்தப்பட்டவர்களுக்கும் சத்துணவு இல்லாமல் செய்யவேண்டும். முன்சொல்லியவாறு அவர்கள் அருந்தும் கள், சாராயத்தில் விஷப் பொருட்களைக் கலக்க வேண்டும்.
இவர்களைவிட ஒரு சதிகாரக் கும்பலை உலகில் காட்ட முடியுமா? எவ்ளவு கொடூரமான சிந்தனை. எவ்வளவு பெரிய பயங்கர சதித் திட்டம். ஒரு தனி நபரையல்ல ஒரு சமுதாயத்தையே முடக்க முயற்சிக்கிறார்கள். இவர்கள் ஆதிதிராவிடர்களின் சார்பாய் பேசுவது முதலைக் கண்ணீராகவும், ஓநாயின் அழுகையுந்தானே!
இப்படிப்பட்ட மோசடிக் கும்பலின் வலையில் சில தாழ்த்தப்பட்டவர்களும் சிக்குகிறார்கள் என்றால் அவர்களின் அறியாமையை என்னவென்பது? இவ்வுண்மைகளைப் புரிந்து கொண்டாவது தாழ்த்தப்பட்டவர்கள் விழிப்பாக இருக்கவேண்டும்.
இயல்பாகவே ஆதிதிராவிடர்கள் இஸ்லாமியர்களோடு இயைந்து வாழக்கூடியவர்கள். இஸ்லாமியர்களும் அவர்களோடு வேறுபாடின்றிப் பழகக் கூடியவர்கள். எனவே, இருவரும் ஒற்றுமையாய் இருந்து ஆரியப் பார்ப்பன பாஸிசக் கூட்டத்தின் மதவெறிச் செயல்பாடுகளை, திட்டங்களை முறியடிக்க வேண்டும்.
வீரச் சகோதரர்களே விழித்தெழுங்கள்!
சகோதரர்களே! மடக்கிய முஷ்டியோடு தயாராய் இருங்கள்!
- என்று ஆண்களுக்கு வெறியூட்டும் ஆர்.எஸ்.எஸ். பரிவாரங்கள்,
பெண்களையும் வெறியேற்றத் தவறவில்லை. பெண் வீட்டிற்குள் இருந்து, பணிவிடை செய்யவேண்டும் என்பது இந்துமதக் கொள்கை என்பவர்கள், தங்களுக்கு அவசியம் வரும்போது பெண்களைப் போருக்கு அழைக்கிறார்கள்.
ஆரியப் பார்ப்பனர்களின் தர்மம் இதுதான். தனக்கென்றால் எல்லாவற்றையும் வளைப்பார்கள்; முறிப்பார்கள்.
பிராமணன் கடல் தாண்டிச் செல்லக்கூடாது என்று சாஸ்திரம் சொல்லுவார்கள். ஆனால் சம்பாதிக்க முற்படும் போது சாஸ்திரத்தை குப்பையில் போட்டுவிட்டு வெளிநாடு செல்வர். ஆனால், மற்றவர்களுக்கு சாஸ்திரம் உயிர் மூச்சு, அதை மீறக்கூடாது என்பர்.
ஆன்மிகப் பணியே பிராமணன் செய்யவேண்டும் என்று சாஸ்திரத்தில் சொல்லுவார்கள். ஆனால் இராணுவத்திலும், ஆட்சியிலும் உயர் பதவி கிடைக்கின்றதென்றால் ஓடோடிச் சென்று உட்கார்ந்து கொள்வான். சாஸ்திரம் சாக்கடைக்குப் போய்விடும்.
அதேபோல் இவர்களுடைய இந்துராஷ்டிர இலக்குக்காக, சாஸ்திரத்திற்கு விரோதமாக பெண்களும் வீதிக்கு வந்து போராடவேண்டும் என்று உசுப்புகிறார்கள்.
தன்னைத் தற்காத்துக் கொள்ளக்கூடிய பெண் சமூகத்தில் உயர்ந்த அந்தஸ்தைப் பெறுகிறார்கள் என்று முழங்கிவிட்டு, எட்டு கைகளிலும் ஆயுதங்கள் ஏந்திய துர்க்கையைக் காட்டுவார்கள்.
பெண்களுக்கு சுயபுத்தி இருக்கக் கூடாது. உணவு உயிர் வாழ மட்டுமே உண்ணவேண்டும். கணவனைச் சார்ந்தே அவள் வாழவேண்டும். அதுவும் அய்ந்து வயதிலே அவள் ஒருவனிடம் ஒப்படைக்கப்பட வேண்டும் என்று சாஸ்திரம் எழுதிய சதிகாரக் கூட்டம், தங்களுடைய போராட்டத்திற்கு ஆள் தேவையென்றதும், தோள் தட்டி வாள் ஏந்திவா என்று பெண்களை அழைக்கிறார்கள்.
ஆக, இவர்களுக்கென்று ஒரு கொள்கை இல்லை. இவர்கள் எண்ணத்தை அடைய எதையும் செய்வர் என்பதையே இது காட்டுகிறது.
பிரச்சாரத்திற்குக் கூட இவர்கள் பெண்களையே அதிகம் பயன்படுத்துகிறார்கள்.
நாங்கள் இந்தியப் பெண்கள், நாங்கள் மலர்கள் அல்ல; நெருப்புப் பொறிகள்? என்று பெண்களை விட்டே பேசச் செய்தனர்.
இராமரை உயர்த்தும் நீங்கள் சீதையை ஏன் குறிப்பிடுவதில்லை என்ற நியாயமான கேள்வியை எழுப்பும் போது,
இது இராமன் பிறந்த இடம் பற்றியப் பிரச்சினை. சீதை இங்கு பிறக்கவில்லை! என்று பதில் சொல்ல கற்றுத் தந்திருக்கிறார்கள்.
நாங்கள் இரத்தம் சிந்துவதற்காக இங்கு வந்திருக்கிறோம். அயோத்தியில் ஆலயம் கட்டுவது என்பதன் பொருள் முஸ்லீம்களைத் தூக்கில் போட வேண்டும் என்பதே, முலாயம் சிங்கையும், வி.பி.சிங்கையும் தூக்கில் போட வேண்டும் என்று அயோத்தி போராட்டத்தின் போது அலிகாரைச் சேர்ந்த ஒரு பெண் (சந்திராவதி) கூறும் அளவிற்கு பெண்கள் வெறியேற்றப்படுகின்றனர்.
இப்படியெல்லாம் பெண்ணுக்கு வெறியேற்றி இந்துத்வா பற்றி பேசச் செய்தபோது,
இந்துத்வாவால் பெண்கள் நிலை உயருமா? என்ற கேள்வி பெண்களிடம் வைக்கப்பட்டபோது, பெண்கள் மவுனமாகிறார்கள்.
ஆக, இவர்களின் பிரச்சாரம் உணர்வு தூண்டக் கூடியதே தவிர, அறிவைத் தூண்டக் கூடியது அல்ல.
அறிவுள்ள பெண்களாய், பெண் விடுதலை வேண்டும் பெண்களாய் இருந்தால் எப்படி இந்துத்வாவை ஆதரிப்பார்கள்? இந்துத்வா பெண் உரிமையின் முதல் எதிரியல்லவா?
எது யாருக்கு தீங்கினைக் கொடுக்குமோ அதை வளர்க்க அவர்களையே பயன்படுத்தும் யுக்தி இவர்களின் தனித்தன்மையாகும்.
இந்த உண்மை புரியாமல்தான் எந்த இந்துத்வா கொள்கை பெண்களின் உரிமையைப் பறிக்கிறதோ அதை வளர்க்கப் பெண்களையே வீறு கொள்ளச் செய்கின்றனர்.
எந்த  இந்துராஷ்டிரா தங்களை அடிமையாக்குமோ, அதை அமைக்கத் தாழ்த்தப்பட்டவனும் பிற்படுத்தப்பட்டவனும் பயன்படுத்தப்படுகிறான்.
காரணம், ஆரியப் பார்ப்பனர்களின் பிரச்சார யுக்தி அத்தகையது. அதை முறியடிக்க பெண்ணினத் தலைவர்களும், பிற்படுத்தப்பட்டோர் தாழ்த்தப்பட்டோர் தலைவர்களும், விழிப்போடிருந்து, தங்கள் சமுதாயம் பலியாகாமல், விழிப்பூட்டி விடுவிக்க வேண்டும். ஆர்.எஸ்.எஸ். கூட்டத்தாரின் ஆதிக்க வெறியை அழித்தொழிக்க வேண்டும்!
இரத்தம் சிந்தாத இந்துக்கள் உண்மையான இந்துக்கள் அல்ல; அவர்கள் பங்கிகள் (தெருக்கூட்டுபவர்கள்) என்று முழங்கி உணர்ச்சி ஊட்டுகின்றனர்.
இந்துமதம் என்று சொல்லப்படுகின்ற மதத்தில் சேர்த்துக் கொள்ளப்படுகின்றவனின் பெரும்பகுதி மக்கள் தெருக்கூட்டுகின்றவர்கள், சாக்கடை அள்ளுகின்றவர்கள், மலம் அள்ளுகின்றவர்கள் என்பது இவர்களுக்கு மறந்து போய்விட்டது போலும்! அதுமட்டுமல்ல இந்த முழக்கத்தில் அடங்கியுள்ள வன்முறையும், மதவெறியும் எத்தகு உச்சமானது என்பதை உணர வேண்டும்.
அறிவியல் வளர்ந்தால் மூடத்தனங்கள் ஒழியும், ஜாதி மத உணர்வுகள் தகரும் என்பதே விதி. ஆனால், பார்ப்பனர்களைப் பொறுத்தவரை அறிவியல் வளர்ச்சியை இவற்றை வளர்க்கப் பயன்படுத்திக் கொள்கின்றனர்.
குறிப்பாக, இந்துமத வெறியைப் பரப்ப, உசுப்ப, உணர்வூட்டி வெறியேற்ற ஒளிப்பேழைகளையும் ஒலிப்பேழைகளையும் (வீடியோ ஆடியோ) அதிக அளவில் பயன்படுத்துகின்றனர்.
ஒளிப்படங்களாக இரதயாத்திரை, இராமர் படங்கள் அதிக அளவில் காட்டப்பட்டன.
ஒலிப் பேழையில் (ஆடியோ கேசட்) ரிதம்பராவின் பேச்சுகள் அதிக அளவில் இடம் பெற்றன. இவரது பேச்சுக்கள் மூலை முடுக்கெங்கும் முழங்கின.
ஆர்.எஸ்.எஸ்., வி.எச்.பி., பி.ஜே.பி. பெருமளவில் வளர, இந்துக்களின் ஆதரவை பெருமளவில் திரட்டித் தர ரிதம்பராவின் பேச்சுக்கள் பெரிதும் உதவின. அவரது பேச்சின் உச்சரிப்பு முறையும், ஏற்ற இறக்கங்களும் கவர்ச்சியாகவும், உணர்ச்சியூட்டக்கூடியதாயும் அமைந்தன. அவர் பேச்சாலே நடிக்கும் ஆற்றல் பெற்றவர். பேசும் போதே நா தழுதழுக்கப் பேசுவார், அழுவார், வேதனையை குரலில் குழைத்துத் தருவது போலவே, அதிகாரத்தோரணையும் அவரது பேச்சில் ஆங்காங்கே வெளிப்படும்!
பொய்க்கு ஆதாரமாக பொய்யையே காட்டி பிரச்சாரம் செய்வதில் பி.ஜே.பி. மற்றும் அதன் ஆதார இயக்கங்கள் கைதேர்ந்தவை. எடுத்துக்காட்டாக, 1990 எப்ரல் 4ஆம் தேதி நடைபெற்ற பேரணியில் அத்வானி பேசுகையில் அயோத்தியில் படுகொலைகள் நடந்ததாகக் கூறி, அதற்கு ஆதாரமாக வி.எச்.பி.யின் வீடியோ படங்களைக் சுட்டிக் காட்டினார்.
படுகொலை செய்யப்பட்டதாக வி.எச்.பி. தெரிவித்த கர சேவையாளர்கள் (இந்துக்கள்) பலர் உயிருடன் இருந்தார்கள்அவர்களில் பலர் அயோத்திக்குப் போனதேயில்லையென்று தி சன்டே அப்சர்வர், ஃப்ரண்ட்லைன் ஆகிய பத்திரிகைகள் பல முறை நிரூபித்தன. இவையெல்லாம் நிரூபிக்கப்பட்ட பின்னரும் அத்வானி இப்பொய்யைச் சொல்லி பிரச்சாரம் செய்தார்.
அயோத்தியில் இந்துக்கள் முஸ்லீம்களால் படுகொலை செய்யப்பட்டார்கள் என்று பொய்யைக் கிளப்பினால், முஸ்லீம்கள் மீது இந்துக்கள் தாக்குதல் நடத்துவார்கள். அதன் மூலம் மதக்கலவரம் வரும்; பி.ஜே.பி.யை வளர்க்கலாம் என்பதே அவர்களின் இப்பொய்ப் பிரச்சாரத்தின் நோக்கம்.
பத்திரிகையில் வருவதெல்லாம் உண்மையென்று நம்புகின்ற மக்கள் தானே இவர்கள் என்ற நம்பிக்கையில், வீடியோவில் காட்டுவதெல்லாம் உண்மை என்று எண்ணுவார்கள் என்ற அடிப்படையில் அவர்கள் பொய்யான வீடியோ பிரச்சாரத்தை மேற்கொள்ளுகின்றனர்.
1949இல் பாபர் மசூதிக்குள் திருட்டுத்தனமாக இவர்களால் வைக்கப்பட்ட இராமர் சிலையை, உண்மையில் இராமர் அவதாரம் மீண்டும் எடுத்துவிட்டார் என்று வி.எச்.பி. வீடியோ பிரச்சாரம் செய்தது.
சகோதரா! இறைவன் (இராமன்) தோன்றி விட்டான் என்னும் தலைப்பில் அவர்கள் பொய்ப் பிரச்சாரம் மேற்கொண்டனர். பிள்ளையார் பால் குடிக்கிறார் என்றவுடன் ஆளுக்கொரு கரண்டியும் பாலுமாக நின்ற மக்கள்தானே இவர்கள். அதனால் இராமன் தோன்றிவிட்டதாக இவர்கள் கூறிய பொய்யும் மக்களிடம் எடுபடவே செய்தது!
இந்தியா (பாரதம்) என்றால் இராமர், புனித இடம் என்றால் அயோத்தி, இந்தியாவெங்கணும் காவிக்கொடி என்கின்ற வகையில் வீடியோ காட்சிகளை அமைத்து பிரச்சாரம் மேற்கொள்கின்றனர்.
இந்தியாவை முஸ்லீம்கள் ஆக்கிரமிப்பு செய்துவிட்டதாகவும், அதை மீட்க ஆயுதம் ஏந்த வேண்டும் என்பது போலவும் இந்துக்களை வெளியேற்றும் காட்சிகளை வீடியோ காட்சிகளாகக் காட்டுகின்றனர்.
மதத்தின் பெயரால், கடவுளின் மீதுள்ள பக்தியின் தீவிரத்தால் மக்கள் உள்ளத்தில் எழும் தீவிர உணர்ச்சிகளை, ஆதரவை, எழுச்சியை, அப்படியே அரசியல் அதிகாரம் பெற பி.ஜே.பி.க்கு வாக்குகளாக மாற்றுகின்றனர்.
வரலாற்றைத் திரித்தும், வன்முறையைத் தூண்டியும், முஸ்லீம்கள்மீது அபாண்ட பழிகளைச் சுமத்தியும் இந்துக்களின் உணர்வுகளை உசுப்பி அவர்களை ஓரணியில் திரளச் செய்த பி.ஜே.பி. வகையறாக்களின் செயற்கை முயற்சிகளை அறவே மறைத்து, இராமஜென்ம பூமியை மீட்டெடுக்க இந்துக்கள் தன்னியல்பாகவே கொதித்தெழுந்துவிட்டார்கள் என்பது போன்ற ஒரு தோற்றத்தை உருவாக்குகின்றனர். அவ்வகையில் அவர்களது பிரச்சாரங்களை அமைக்கின்றனர். அதாவது இவர்கள் பல ஆண்டுகளாய்த் தீட்டிய சதித் திட்டங்களின், செயல்பாடுகளின் விளைவே இராமஜென்ம பூமி என்ற பேரழிவுப் பிரச்சினை என்பதை அறவே மறைத்து, இது இந்துக்கள் இயல்பாய் பெற்ற இறை உணர்வின் விளைவு என்று பிரச்சாரத்தின் மூலம் காட்டுகின்றனர்.
எப்படி அறிவியல் கண்டுபிடிப்புகளை தங்கள் பிரச்சாரத்திற்குப் பயன்படுத்திக் கொண்டார்களோ, அதேபோல் பிரபல, மக்கள் பெருமளவு விரும்பி இரசித்த திரைப்படப் பாடல் மெட்டுகளில் தங்கள் பிரச்சாரப் பாடல்களை அமைத்தனர். தில் தீவானா என்ற மைனே ப்யார் கியா படத்தில் வரும் திரைப்பாடலின் மெட்டைப் பயன்படுத்தி பிரச்சாரப் பாடல் அமைத்து அதை மூலைமுடுக்கெல்லாம் ஒலி பரப்பினர். திரையில் அப்பாடல் எந்த அர்த்தத்தில் எழுதப்பட்டது என்பது பற்றியெல்லாம் கவலைப்படாமல், பக்தியை மலிவுச் சரக்காக்கினர். அவர்களுக்கு பக்தி முக்கியமல்ல, ஆன்மிகம் முக்கியமல்ல, அவர்களுக்கு பிரச்சாரம் நடந்து இயக்கம் வளர்ந்தால் போதும் என்பதே நோக்கு. அவர்கள் ஆன்மிக நெறிகளைப் பரப்பி, மக்களை நெறிப்படுத்த என்றைக்கும் முயன்றதில்லை. கடவுளைப் பயன்படுத்தி ஆட்சியையும் ஆதிக்கத்தையும் நிலைநாட்டவே முயன்று வருகின்றனர்.
ஒரு முறை இவர்கள் மிகவும் அற்பத்தனமான முறையில், ஒலிப்பேழைகளைப் பயன்படுத்தி கலகத்தைத் தூண்டினர்.
ஒருமுறை உத்திரப் பிரதேசத்தின் மேற்குப் பகுதியில் சிலர் கார்களில் வந்து, காரில் உள்ள ஒலி பெருக்கியின் மூலம், ஒலி நாடாவில் பதிவு செய்யப்பட்டிருந்த கலகக் கூக்குரல்களை ஒலிபரப்பினார்கள். சிறிது நேரத்தில் அவர்கள் காருடன் அந்த இடத்தைவிட்டு சென்று விட்டனர். ஆனால், அந்த இரைச்சலின் விளைவாய், உண்மையான கலகம் மூண்டுவிட்டது என்று எண்ணியதன் விளைவாய் அந்த இடத்தில் கலகம் மூண்டது.
இப்படியெல்லாம் கலவரங்களை உருவாக்கி, மதங்களிடையே மோதலை ஏற்படுத்தி, அதன்மூலம் அதிகாரத்தையும் ஆட்சியையும் பெற்று, ஆதிக்கத்தை நிலைநாட்டிவிடலாம் என்று நினைக்கின்ற இவர்களைவிட மனித இனத்தின் எதிரிகள் இருக்க முடியுமா?
ஒவ்வொரு ஒலிப்பேழையும் ஒரு பொதுக்கூட்டம் தருகின்ற விளைவை ஏற்படுத்துகின்றன. அதிலும் ரிதம்பராவின் ஒலிப்பேழைகள் கலவரங்களைத் தூண்டவும், மக்களின் ஆதரவை விரைவில் திரட்டவும் பயன்படுகின்றன. ஒலிப்பேழையில் பேசியதன் மூலமே தலைவரான ஒருவர் உண்டென்றால் அது ரிதம்பரா என்ற பெண்ணே ஆவார்.
இவரது பேச்சுக்கள் முன்கூட்டியே எழுதித் தயாரிக்கப்பட்டு, பலமுறை பேசி ஒத்திகை பார்க்கப்பட்ட பின், ஒலிப்பதிவு செய்யப்படும் பேச்சாகும்.
இவரது ஒலி நாடாக்கள் முழங்கும் இடங்களில், சகோதரர்களைப்போல் வாழ்ந்து வந்த இந்து முஸ்லீம்கள், மோதிக்கொண்ட நிகழ்வுகளே அதிகம் என்றால், இவரது பேச்சு எத்தகையது என்பதை எண்ணிப் பாருங்கள்.
இவரது பேச்சுக்கள் வெறும் மேடைப் பேச்சுக்களைப் போல் அமையாது, மேற்கோள் பாடல் வரிகள், கதைகள், திடீரென நடுநடுவே பஜனைப் பாடல் என்று கேட்போரை ஈர்ப்பதோடு, நில்லாமல், ஈடுபாடு கொள்ளவும், உணர்வூட்டி, வெறியேற்றவும் செய்கிறது.
ரிதம்பராவின் ஒலிப்பேழைப் பேச்சைக் கேட்ட பாபர் மசூதியின் பேஷ் - இமாம், அப்பேச்சு இந்துக்களுக்கும் முஸ்லீம்களுக்கும் இடையே வெறுப்புச் சுவரை எழுப்பி விட்டது. நாங்கள் இன்னமும் சந்தித்துக் கொள்கிறோம். ஆனால், எங்கள் இதயங்களின் பரிசுத்தத் தன்மை மறைந்து விட்டது என்று உள்ளம் நெகிழ கூறினார்.
இந்திய நாட்டின் இயக்கமே மத ஒற்றுமையில் அடங்கியுள்ளது என்கின்ற நிலையில், இந்த வன்முறைக் கும்பல்களின் செயல்பாடுகளும், வளர்ச்சியும், எந்த அளவிற்கு பேராபத்தை உண்டு பண்ணும் என்பதை மனித நேயப் பற்றாளர்கள் உணர்ந்து பார்க்க வேண்டும்.
முஸ்லீம்கள் குறைவாக இருக்கும் இடங்களில் இந்து கோயில்களின் மணியோசையைக் கேட்டுக் கொண்டு பேசாமல் இருக்கிறார்கள். ஆனால், அவர்கள் அதிகமாக இருக்கும் இடங்களில் உடனே கலகத்தைத் தூண்டுகிறார்கள். முஸ்லீம்கள் பழியிலிருந்து தப்ப வேண்டும் என்றால், அவர்கள் இராமரைத் தன் கடவுளாக ஏற்க வேண்டும் என்று பேசுகிறார். அப்படி இராமரை எற்றுக் கொண்ட முஸ்லீம் ஒருவரைப் பாருங்கள் என்று ஒரு முஸ்லீமின் படமும் வீடியோவில் காட்டப்படுகிறது.
1949இல் பாபர் மசூதிக்குள் இராமர் சிலையைத் திருட்டுத்தனமாக வைத்துவிட்டு, அது தானே தோன்றியது என்று ஆதரித்துப் பேச ஒரு முஸ்லீம் ஹவில்தார் பயன்படுத்தப்படுகிறார். இது இவர்களின் நூதன பிரச்சார முறையாகும்.
யார் யார் எதிர்க்க வேண்டியவர்களோ அவர்களை விட்டே ஆதரிக்கச் சொன்னால் வாதம் வலுப்படும் என்ற உண்மையைத் தெரிந்து செய்கின்றனர். கருங்காலிகள் எல்லா இனத்திலும், எல்லா மதத்திலும் உண்டல்லவா? இல்லையென்றாலும் இவர்களே சில கருங்காலிகளை உருவாக்குவார்கள். இது ஆரியப் பார்ப்பனர்களின் பரம்பரை தந்திரம்!
பழியை பிறர்மீது தள்ளிவிடுவதில், அவ்விதம் பிரச்சாரம் செய்வதில் இவர்கள் என்றைக்குமே கை தேர்ந்தவர்கள். தாங்கள் செய்கின்ற மதவெறி ஆட்டங்களை முஸ்லீம்கள் மீது திருப்பிவிடும் பிரச்சாரத்தை இவர்கள் தவறாது செய்கின்றனர். ரிதம்பராவே அவ்வேலையைச் செய்கிறார்.
இந்திய நாட்டின் கவனம் முழுவதும் முஸ்லீம்கள் மீதே இருப்பதால், நாட்டின் சீர்கேட்டிலிருந்து நாம் மீள ஒரே வழி, சுலபமான வழி முஸ்லீம்களைத் தாக்குவதுதான் என்று அயோக்கியத்தனமான கருத்தை ஆவேசமாகப் பேசி முஸ்லீம்களைத் தாக்கத் தூண்டி விடுகிறார்.
இந்தியாவின் எத்தனையோ வளர்ச்சித் திட்டங்களைப் பற்றி, நாம் சிந்திக்க வேண்டிய வேளையில், வீணான மதப் பிரச்சினைகளை உசுப்பிவிட்டு, அரசின் கவனம், பொருள், காலம் எல்லாவற்றையும் வீணடித்து, இந்தியாவின் வளர்ச்சியை, உயர்ச்சியை, அமைதியைக் கெடுத்துக் கொண்டிருக்கின்ற இந்த பார்ப்பனர் கூட்டம், இந்துக்களோடு இயைந்து இவ்வளவு காலமாக வாழ்ந்துவரும் முஸ்லீம்கள் மீது வீண் பழியைப் போட்டு, தாக்க வேண்டும் என்பது எவ்வளவு பெரிய அயோக்கியத்தனம்!
தங்கள் தலைவர்களை உயர்த்தியும், மதிக்கத்தக்க வகையிலும் காட்டும் இவர்கள், தங்களுக்கு முரண்பட்ட தலைவர்களைக் கேவலமாகக் காட்டுகின்ற பிரச்சார யுக்தியும் இவர்களுடையதே!
மக்கள் மத்தியில் வீடியோ மூலம் அத்வானியைக் காட்டும்போது, அவரை ஆளுமை மிகுந்த கவர்ச்சித் தலைவராகக் காட்டுகின்றனர். அதே நேரத்தில் முலாயம் சிங் யாதவை எழுதப் படிக்கத் தடுமாறும் பாமரனாகச் சித்தரிக்கின்றனர். அவரை மேலும் கீழுமாக கோணல் மாணலாகக் காட்டி, அவர் மனிதத் தன்மையும் தெளிவான சிந்தனையும் இல்லாதவராகக் காட்டுகின்றனர்.
கலவரம் என்று வரும்போது, முஸ்லீம்களே இந்துக்களை தாக்குவது போல் அடாவடித்தனமாக காட்டுகின்றனர். முஸ்லீம்கள் வன்முறையாளர்கள், வலிய வம்புக்குச் செல்லக் கூடியவர்கள் என்ற எண்ணத்தை உருவாக்குகின்றனர்.
இந்துச் சாமியார்கள் தாக்கப்படுவதாகவும், இந்துப் பெண்கள் மானப்பங்கப்படுத்தப்படுவதாகவும் படமெடுத்து பரப்புகின்றனர். இவர்களின் வன்முறை வெறியாட்டங்கள் அறவே மறைக்கப்பட்டு, தற்காப்பு நடவடிக்கையில் ஈடுபடுவதாகக் காட்டுகின்றனர். அதன்மூலம் தாங்கள்தான் இந்துக்களின் உண்மையான பாதுகாவலர்கள் என்பதாகக் காட்ட முயற்சிக்கின்றனர். அவ்வகையில் இந்துக்களின் வாக்குகளை பி.ஜே.பி.க்குக் கிடைக்கும்படிச் செய்கின்றனர்.
இவர்கள் பிரச்சாரத்தின்போது இராமரைக் காட்டும்போது, போர் ஆயுதங்களைத் தாங்கி நிற்கும் கோலத்தோடும், கவலை தோய்ந்த முகத்தோடும் காட்டுகின்றனர்.
அதாவது போர் முறையின் மூலமே முஸ்லீம்களை அப்புறப்படுத்த முடியும், அது நடக்கின்ற வேளைதான் இராமனுக்கு மகிழ்வு ஏற்படும். இராமன் அதுவரை கவலையோடுதான் இருப்பார் என்பதாக இக்காட்சிகளை அமைக்கின்றனர்.

அதுமட்டுமின்றி இந்தியா என்றால் இராமனே கடவுள், அயோத்தியே புனித இடம் என்ற ஒரே அடையாளத்தை உண்டாக்க இவர்கள் முயற்சிக்கின்றனர். இதன் மூலம் மற்ற மதத்தவர்களை இந்துக்களாக ஆகவேண்டும் என்று நிர்ப்பந்திப்பதோடு, இந்துக்களிடையே ஒவ்வொரு பகுதியிலும் காணப்படும் பாரம்பரிய இறைவழிபாட்டு முறைகளை, இறை வடிவங்களை அழிக்க முயற்சிக்கின்றனர். அதன் மூலம் ஆரிய கலாச்சாரமே இந்தியக் கலாச்சாரம்; ஆரிய கடவுளே இந்தியக் கடவுள் என்று ஆக்க முயற்சிக்கின்றனர்.

நூல்பி.ஜே.பி ஒரு பேரபாயம்
                                           ஆசிரியர் - மஞ்சை வசந்தன்

Comments

Popular posts from this blog

தமிழ் காட்டுமிராண்டி மொழி ஏன்? எப்படி? -தந்தை பெரியார்

ஜாதி ஒழிப்பு மாநாட்டில் பெரியார் உரை!

தந்தை பெரியார் விதைத்த விதை