திருச்சி பொன்மலையில் தந்தை பெரியார் அவர்களின் 78 ஆவது ஆண்டு பிறந்தநாள் விழா


(தந்தை பெரியார் உரைத் தொகுப்பு)


திருச்சி பொன்மலையில் தந்தை பெரியார் அவர்களின் 78 ஆவது ஆண்டு பிறந்தநாள் விழா (22.9.1956)

1956ல் பொன்மலையில் தந்தை பெரியார் அவர்களின் 78ஆவது ஆண்டு விழாவில் தவத்திரு குன்றக்குடி அடிகளார் அவர்களின் தலைமையில் தந்தை பெரியார் .வெராமசாமி அவர்கள் ஆற்றிய சொற்பொழிவு, (உட்கார்ந்து உரையாற்றுகிறார்).

மரியாதைக்கும் போற்றுதலுக்கும் உரிய அடிகளார் அவர்களுக்கும் இங்கு கூடியுள்ள மற்ற தாய்மார்களுக்கும் அருமைத் தோழர்களுக்கும் மனமுவந்த நன்றிஇன்றைய தினம் நமக்கு இங்கே பொற்பதக்கம் என்னுடைய பிறந்த நாளை முன்னிட்டு அளிக்கப்பட்டதுபொன்னாடை என்னும் பேரால் புத்த பெருமானுடைய உருவம் தாங்கிய இந்த ஆடை எனக்கு அளிக்கப்பட்டதுமிகவும் பெருமை அளிக்கக்கூடியதுநல்ல லாபமும் அளிக்கக்கூடியது (கைதட்டல்). அடிகளார் அவர்கள் அருள் கூர்ந்து அனுமதி அளித்தபடி சற்று உட்கார்ந்தபடி பேசுகிறேன், (தந்தை பெரியார் அவர்கள் நாற்காலியில் உட்கார்ந்துஉரையாற்றுகிறார்குன்றக்குடி அடிகளார் தலைமையில் விழா!)

பிறந்தநாள் விழாவின்பேரால் எனக்கு ஏற்பட்ட பெரிய பெருமையும் லாபமும் இந்த பதக்கமும் ஆடையும் என்று சொன்னேன்அது இரண்டாவதுமுதலாவதாகஅடிகளார் அவர்களுடைய தலைமையில்இவ்விழா கொண்டாடும் பேரு எனக்கும் - என்னுடைய கழகத்துக்கும் - எனது நண்பர்களுக்கும் கிடைத்த பெரும்பேறு என்று நான் மனப்பூர்வமாக கருதுகிறேன். (கைதட்டல்அடிகளாருக்கும் எனக்கும் ஏதாவது கருத்து வேற்றுமை இருக்க கூடுமென்று பொது மக்கள் பலர் கருதுகிறார்கள்அதிலே அடிகளாரைப் பின்பற்றுபவர்களும் அப்படியேசற்று ஏறக்குறைய என்னை பின்பற்றுபவர்களிலும் பலர் அப்படியே கருதுகிறார்கள்உண்மையிலேயே எங்கள் இருவருக்கும் கருத்து வேற்றுமை இருக்க வேண்டிய அவசியமில்லைமுதலாவது அதை நீங்கள் நினைத்துக்கொண்டால் தான்பின்னாலே சொல்லுவது விளங்கும்.

தொண்டின் உருவமான அடிகளார் அடிகளார் தனக்கென வாழாதவர்அவருக்காக சொந்தத்தில் ஆக வேண்டிய காரியம் ஒன்றுமில்லைதொண்டின் உருவமாகவிளங்குபவர்அவரிடத்திலே என் போன்ற அளவு இல்லாவிட்டாலும் ஏதோ ஒரு அளவுக்காவது அது போலவே தொண்டன் என்று வேஷம் போட்டுக் கொண்டிருக்கிற நான் (அடிகளார் சிரிப்புகடுகளவாவது மாறுதல் கொள்ள காரணமில்லைஎனக்குத் தெரியும் பொது தொண்டின் தன்மை இன்னது என்று அடிகளார் அவர்கள் குறிப்பிட்டார்கள்இந்த ஒரு மாத காலமாக நான் பட்டபாடு என்றுஉண்மை - உண்மைஎவ்வளவு தைரியம் இருந்தால் இங்கு வந்திருக்க முடியும் என்பதை நீங்கள் சிந்தித்தால் (கைதட்டல்நமக்கு கிடைத்த பேரு எவ்வளவு பெரிது என்பதை நீங்களே உணருவீர்கள்ஏன்?

ஆஸ்திகம்,நாஸ்திகம் - விளக்கம் நண்பர் நடிகவேள் எம்.ஆர்.ராதா அவர்கள் பேசுகிறபோது ஒரு ஆஸ்திகரும் நாஸ்திகரும் ஒன்று சேர்ந்தார்கள் என்று கூறினார் வாஸ்தவம்நம் நாட்டிலே மக்களுக்கு ஆஸ்திகம் என்றால் என்னநாஸ்திகம் என்றால் என்னஎன்பது புரியாதுஏதோ ஆஸ்திகம் என்றால் கடவுள் ஒருவர் இருக்கிறார் என்று நம்புகிறவர்நாஸ்திகம் என்றால் கடவுள் இல்லை என்று கருதி இருக்கிறவர் என்று பொது மக்களிடையிலே பரவி இருக்கிறது, (என்னை பொறுத்தவரையிலும்நான் கடவுள் இல்லை என்று சொல்லுகிறவன் (கைதட்டல்அது இருக்கிறது என்பதை என்னால் ஒப்புக்கொள்ள முடியவில்லை, (சிரிப்பும் - பலத்த கைத்தட்டலும்உண்மையாகவே சொல்லுகிறேன்ஆம் உண்மையாகவே சொல்லுகிறேன், (கைதட்டல்ஏன் என்று கேளுங்கள் ?

சுவாமிகள் சிரித்தார்கள்நான் ஏதோ சாமர்த்தியமாகச் சொல்லுகிறேன் என்று (கைதட்டல்என்னால் கடவுளை புரிந்துக் கொள்ள இன்றைக்கும் முடியவில்லைஅது என்னாஎப்படி பட்டதுஎன்பதைப் புரிந்துக் கொள்ள என்னால் முடியவில்லைஅதைத் தவிர (கடவுள்)இருந்து கொண்டு இருக்கிறதாகக் கருதுகிறவர்களிடத்திலே போய் நாம் ஏன் சண்டைக்குப் போகவேண்டும்நீங்கள் நன்றாக நினைக்க வேண்டும்கடவுளைப் பற்றி புரிந்து கொண்டிருப்பதாக நினைத்துகடவுளிடத்திலே பக்தி 
செலுத்துகிறவரிடத்தில் எனக்கு ஏன் சண்டைவேண்டும்லாபம் என்ன?

நாஸ்திகன் யார்?

ஏதோ நான் செய்கிற தொண்டில் கடவுளைப் பற்றிய செய்தி வருமானால் அது கடவுள்களைப் பற்றிய செய்தியேஅது கடவுளைப் பற்றிய சேதியல்லகடவுள்கள் - ஏராளமான கடவுள்களை உண்டாக்கி வைத்து விட்டார்கள்போலி கடவுள்களை மக்களிடையிலே நிறைய புகுத்திவிட்டார்கள்கடவுளாலே குற்றமில்லை என்றாலும் அந்த கடவுளாலே மக்களை தவறு செய்யாமல் நடத்தும்படிநடக்கும்படிசெய்வதற்கும் அவர்களுக்கு சக்தி இல்லாமல் போய்விட்டதுவீணாய் ஏன் மக்கள் போலிக்கடவுளிடத்திலே சீரழிகிறார்கள் என்பது தான் என்னுடைய கவலை.

மற்றபடி கிருஸ்தவர்களைப் பற்றியோ முகம்மதியர்களைப் பற்றியோஅவர்களிடத்திலேயோ போய் நான் கடவுள் போராட்டம் செய்வதே இல்லைநம்மவர்கள் ஏராளமா வைத்துக் கொண்டிருக்கிறார்கள்ஏதேதோ அதைப் பற்றி இங்கே பேசற மேடை அல்ல இதுஏனென்றால் நான் கடவுள் இல்லை என்று சொல்லுகிறவன்நாஸ்திகன் என்று சொல்லுவதை அப்படி கருதிக்கொண்டு இருக்கிறார்கள் என்றாலும் நான் என்னைப் பொறுத்த வரையிலும் நான் நாஸ்திகன் என்றே தைரியமாகச் சொல்லிக் கொள்ளுகிறேன்நீங்கள் ரொம்ப தெரிந்து கொள்ள வேண்டும்நாஸ்திகன் என்ற சொல்லுக்கு கடவுள் இல்லைங்கிற பொருள் இல்லைஅந்த பொருள்களிலே அதைப் பயன்படுத்துகிறார்கள்நாஸ்திகன் என்கிற சொல்லை நான் வடமொழி ஆதாரங்களிலே பார்த்தபடி சொல்லுகிறேன்.

 நாஸ்திகன் என்றால் புராண இதிகாசங்களைவேதங்களைசாஸ்திர தத்துவங்களை பகுத்தறிவினாலே விவகாரம் பண்ணுகிறவன் அதுதான் இராமாயணத்திலே கூட நான் நன்றாய்ப் பார்த்திருக்கிறேன்இராமன் வாக்கினாலேயே வால்மீகி அதை எழுதுகிறார்மற்ற புத்தகங்களிலேயும் நான் சிலதைப் பார்த்திருக்கிறேன்அவ்வளவுதானே தவிர அதுக்குக் கடவுளைக் கொண்டுவந்து அங்கே சம்பந்தபடுத்தவே இல்லைஅது இந்த ஆரிய மத சம்மந்தமான புராண - இதிகாசம் முதலியவைகள் நம்முடைய மக்கள் அறிஞர்களுடைய ஆராய்ச்சிக்குப் பெரிதும் கலக்கத்தை உண்டாக்குகிறதுபலருக்கு மருட்சியைக் கூட உண்டாக்குகிறதுஅதனிடத்திலே இருக்கிற போராட்டம் இன்று நேற்று ஏற்பட்டதல்லஅதற்காக வேண்டியே ஆரியர்கள் அந்த வடமொழியிலே யார் ஒருவர் தங்களுடைய ஆதாரங்களிலே கைவைக்கிறார்களோ அவர்கள் நாஸ்திகர்கள் என்று சொல்லி விட்டார்கள்அவ்வளவுதானே தவிரராவணனும் நாஸ்திகன்இரணியனும் நாஸ்திகன்அந்த புராணங்களிலே வருகிற வார்த்தைகளைப் பார்த்தால் இராவணன் நாஸ்திகன் அல்ல அவன் சிவபிரானை எத்தனையோ வருஷகாலம் தபஸ்செய்து வரம் பெற்றவன்.

அவனை நாஸ்திகன் என்று சொல்ல வேண்டியதில்லைஇரணியனையும் நாஸ்திகன் என்று சொல்ல வேண்டியதில்லைஅவன் எத்தனையோ காலம் தவம் பண்ணி வரம் பெற்றவன்அந்த புராணப்படிஏன்அவர்களை நாஸ்திகர்கள் என்று சொல்லிவிட்டார்கள் என்றால்அவர்கள் இந்த ஆரியமத சம்பந்தமான காரியங்களை ஏற்றுக் கொள்ளவில்லைஆனதனாலே நாஸ்திகன் என்கிற பொருளினாலே கடவுள் இல்லைகடவுளை மறுக்கிறார்கள்கடவுளை எதிர்பிரச்சாரம் செய்கிறார்கள் என்கிற பொருளே இல்லைஅதனாலே அது சாதாரணம் அல்லஆகையினாலே அது ஒரு காரணமல்லநண்பர் ராதா அவர்கள் சொன்னதுபோல.

அடிகளாரும் நானும் சமூக நோய்க்கு மருந்து மற்றபடி அடிகளாரிடத்திலே கருத்து வேற்றுமைக்கு என்ன இருக்கிறதுஅவர் மனித சமுதாயத்துக்குத் தொண்டாற்றுகிறவர்நானும் அந்த பேரைத்தான் சொல்லிக் கொள்ளுகிறேன்தொண்டாற்றுகிறேன் என்றுமனித சமுதாயத்திலே இருக்கிற பல குறைபாடுகளை நீக்க வேண்டுமென்பது அடிகளாருடைய அறிவிப்புநானும் அதைத்தான் சொல்லிக் கொண்டு வருகிறேன்இருக்கலாம் ஒரு வியாதிக்குப் பல வைத்தியம் உண்டுஆங்கில வைத்தியத்திலேயே ஹோமியோபதி - அலபதி என்கிறார்கள்மற்ற நாட்டு வைத்தியத்திலேயே சித்த வைத்தியம் ஆயுர்வேதம் - என்று சொல்லுகிறார்கள்இஸ்லாத்திலேயும் இரண்டிருக்குயூனானி இன்னும் என்னென்னமோ என்று இப்படி பல இருக்கின்றனஇருக்கலாம் நீங்கள் ஏதாவது பணத்துக்காகசுயநலத்துக்காக ஆசைப்பட்டு செய்வதாய் இருந்தால் அது தப்புஇந்த வழிதான் சரியென்று சொல்லவேணும்இல்லாவிட்டால் இது தப்புஅந்த வழிதான் என்றுஏதோ போய்க் கொண்டிருக்கிறவழியிலே கருத்து இன்னது என்று தெரிந்து விட்டால் பிறகு கருத்து வேற்றுமை ஏற்படுவதற்கு இடமில்லைஆனதினாலே நான் கொஞ்ச காலமாகவே அடிகளாரிடத்தில் கருத்து வேற்றுமை அற்றவனாகவே இருக்கிறேன்.

 நான் மாத்திரம் அல்லஎன்னுடைய நண்பர்களிடத்திலேயும் பெரும்பாலும் - நண்பர் தி.பொ.வேதாசலனார் அவர்கள்பேசினார்கள்; (இங்குஅதை நான் அப்படியே ஒப்பு கொள்ளுகிறேன்ஆனால் அது எந்த முறையிலே பேசினார்அடிகளார் அதை எந்த முறையிலே ஏற்றுக் கொள்ளவேண்டும் என்று நான் கருதுகிறேன் என்றால்வேண்டிக்கொள்ளுகிறேன் என்றால்குறைபாடுகளை அடிகளார் இடத்திலே இறைஞ்சினோம்எடுத்துச் சொன்னோம்எங்களுக்கு இன்னின்ன குறைகள் இருக்குது இருக்கின்றன என்றுஅது இருக்கிறது என்று கருதினால் பரிகாரத்திற்கு அருள் செய்யவேண்டும் - இல்லையானாலும் சரி அது ஒன்றும் தவறில்லை, (அடிகளார் சிரிப்புவேறொன்றுமில்லைஅடிகளார் அவர்கள் மதத்தின் பேரில் குற்றமில்லை என்கிறார்கள்ரொம்ப சரிமதத்தின் பேரில் குற்றமில்லைமதத்தை சார்ந்தவர்கள் பேரில் குற்றமில்லைரொம்ப சரி.

காலத்துக்கு ஏற்ப மாறவேண்டும்

அப்படி சார்ந்தவர்களை எதுதான் திருத்துகிறது? (கைதட்டல்). சார்ந்தவர்கள் எப்பதான் திருந்தறது? (பலத்த கைதட்டல்அடிகளார் போல வந்தால் தான் அது திருத்த முடியும் (கைதட்டல்எனக்குத் தெரியும் அவர்களைமதத்தையும் மற்ற காரியங்களையும் மாற்றி அமைக்கவேண்டும்அதைத் திருத்த வேண்டும் என்கிற எண்ணத்திலேதான்.தவிரவும் இயற்கையை அனுசரித்து சொல்லு கிறேன்சிலது இக்காலத்துக்கு ஏற்ற மாதிரி மாறுதல் அடைய வேண்டும்ரொம்ப நல்லவர்தான் ஏசுநாதர் இல்லேன்னு சொல்லலேஅந்த கன்னத்துல அறைஞ்சா அடுத்து இந்தகன்னத்தை காட்டுன்னாருமுடியுமா? (சிரிப்பு)மேல் வேட்டியைக் கேட்டால் இடுப்பு வேட்டியைக் கொடுன்னாரு!

முடியுமாஎல்லாரும் நிர்வாணமாதான் இருக்க வேண்டும்! (சிரிப்புஅவர் எதிலே என்னா கருத்திலே எவ்வளவு நன்மையான உணர்ச்சியிலே எவ்வளவு சொன்னார்அதுதான் மதம்ஆனால் அது சிலது காலப்போக்குக்குக் கொஞ்சம் இடையூறாய் இருக்க நேருதுஅதைத் திருத்தலாம்முடியாது என்றல்லகுறைபாடுகளை எடுத்து முறையிட்டது தான்அதை அடிகளார் நல்ல வண்ணம் உணருவார்கள்.

மற்றபடி அடிகளார் போன்றவர்கள் நம்போன்ற கூட்டங்களுக்கு வந்து ஆசி கூறுவது உள்ளபடியே நாம் பெறற்கரிய பேறுஉள்ளபடியே நான் இந்த பிறந்தநாள்வருஷத்திலே எனக்கு இரண்டு மூணு தடவையாவது வரக்கூடாதா என்று ஆசை (சிரிப்புநான் என்ன பண்ணட்டும்அவ்வளவு எனக்கு ஒரு பெருமைஇரண்டு மூணு தடவை வந்தா எவ்வளவு முன்னுக்கு வருவோம்பவுனுக்காகவே இல்லைமூணுதடவை இருந்தால் மூவேழு இருபத்தொரு பவுன் வரும்,அது பெருசு அல்ல.

வாழ்த்துதலும் வசையும் ஒண்ணுதான்         

அடிகளார் போன்றவர்களுடைய ஆசிநான் பல இடங்களிலே ஆசியைப் பற்றி பேசி இருக்கிறேன்நான் ஆசியை நம்புகிறவன் அல்லநீங்கள் நன்றாக நினைத்துக் கொள்ள வேண்டும்திடீரென்று கருத்துக்கு வந்துவிடாதீர்கள்.நான் நம்புகிறவன் அல்ல,ஏன் நம்பறவன்அல்லன்னா ? எனக்கு ஆசியிலே வசைவுதான் நிறையா வருதுஇதை நம்பினால் நான் அப்புறம் ஒரு வேலைக்கும் போக முடியாதுஅந்த வசைவைப் பார்த்தால்ஆகையினாலே ஆசியும் வசைவும் ஒண்ணுதான்ஆனால் ஆசிக்கு மரியாதை இல்லையாஆசிக்கு சத்து இல்லையா என்று கேட்பீர்கள்உண்டுஅடிகளாரைப் போன்றவர்களின் ஆசிக்கு கட்டாயம் மரியாதை உண்டு. (கைதட்டல்எல்லாருடைய ஆசிக்கும் மரியாதை இருக்கும் என்று சொல்லுவதற்கில்லைஅடிகளார் போன்றவர்களுடைய ஆசிக்கு கண்டிப்பாக பலன் உண்டுஏன்னாநான் இருக்கிறேன்.

என்னிடத்திலே இருக்கிற ஒரு சிறுவனைப் பார்த்துநான் இவன் நல்லபையன் நீ நல்லா விருத்திக்கு வரணும்நீ நல்லா படிப்பே நீ நல்லா பாஸ் பண்ணணும் என்றெல்லாம் நான் சொல்லிவிட்டேனானால் அவன் என்கிட்டேயே இருக்கிற பையன்நான் சொன்ன வாக்கு நிறைவேறத்தகுந்த வண்ணம் என்னாலான உதவியை அவனுக்கு நான் செய்துகிட்டு வரணும்இல்லாட்டா அவுக அய்யா சொன்னபடி ஒண்ணும் பயனில்லாமே போச்சீம்பாங்கஎன்னிடத்திலே இருக்கிறதனாலே என்னால முடியும்நான் சொன்னபடி அவனுக்கு வேண்டிய நலனை செய்யஅது மாதிரி ஒரு பெரிய அதிகாரிக்கு அடுத்தாப்பிலே இருக்கிற ஒருத்தனை அந்த பெரிய அதிகாரி பார்த்து ஆசி சொன்னாரேயானால் கட்டாயம் அவர் அதுக்கு தகுந்த ஆசிக்கு தகுந்த காரியம் செய்ய சௌகரியமுள்ளவர் செய்யாட்டாலும் அந்த பலனை அடைய உரிமையுடையவர்கள்.

அவர்கள் வாயிலே வந்து விட்டதனாலேயே அவனுக்கு ஏதாவது பலனுண்டுகொஞ்ச நாளைக்கு முன்னே கோயம்புத்தூரிலே ஒரு பிள்ளையான்டானுக்குத் திருமணம் அதுக்காக எனக்கு ஒரு தனியா சிற்றுண்டிவிருந்து நடத்தினார்நடத்தின உடனே பெரியாருடைய ஆசிக்காகத்தான் நான் இந்தக் காரியம் செய்தேன் என்று அவர் சொன்னார்அந்த பிள்ளையாண்டான் அவர் கோவாப்-பரேடிவ் இலாகாவிலே ஒரு கிளார்க்பொறி இலாகாவிலேஅதுக்குத் தலைவர் இப்ப காலஞ்சென்ற ரெத்தினசபாபதி முதலியார்நான் ஆசிக்காகத்தான் என்று சொன்ன உடனே நான் சொன்னேன் என்னுடைய ஆசின்னு நீ சொல்றது சும்மா சம்பிரதாயத்துக்காகத்தான்இரத்தினசபாபதி முதலியார் அவர்களுடைய ஆசி உனக்கு வந்தால் அப்ப ஏதாவது காரியம் நடக்கும்(சிரிப்புகண்டிப்பாக அதிலே நீ பலன் அனுபவிக்கலாம்அப்படின்னு சொன்னேன்அதையும்தான் எதிர்ப்பார்த்தேன்னாரு அவர்இரத்தின சபாபதி முதலியார் - எழுந்திருச்சி சொன்னார்அவன் என்னிட்டே இருக்கிறவரை என் ஆசியைச் சொன்னாலும் நானும் செய்யமுடியும்எனக்குக் கீழே பல பேரு இருக்கிறாங்கஅவுங்க வரிசையும் பார்த்துகிட்டு நான் இவருக்கு ஏதாவது செய்யக்கூடும் அப்படீன்னு தம் பேரிலே பொறுப்பு ஏற்பட்டுப் போச்சின்னு சமாதானம் சொல்லவந்தாரு.

எதுக்குநான்சொல்லுகிறேன்இந்த ஆசி பொறுப்புள்ளவர்கள் ஆசிக்கு உதவி செய்யக்கூடிய சக்தி உள்ளவர்கள் சொல்கிற ஆசிகட்டாயம் அது பலன் பெற்றுத்தான் தீரும்அடிகளாருடைய ஆசி எனக்குக் கண்டிப்பாக பலன் ஏற்படும்ஏன்னாஅடிகளாரினாலே நம்முடைய இயக்கத்தைப்பற்றிகொள்கைகளைப்பற்றிஏதோ என்னுடைய தொண்டைப்பற்றிசிறப்பித்துச் சொன்னதன் மூலம் அடிகளாரைப் பின்பற்றுகிற எவ்வளவோ பேர்இன்னும் மற்ற மக்கள் நியாயத்தை எதிர்பார்த்துக் கொண்டிருக்கிற எத்தனையோ பேர் உடனே திரும்புவார்கள்மனம் திரும்புவார்கள்அடிகளாரே இப்படிச் சொல்லியிருக்கிறார் ஆனதிலே அதில் தவறு இருக்காதுஅவருடைய தொண்டுக்கு நம்மாலான உதவி செய்ய வேண்டும்நம்மாலான அளவுக்கு அதை மதிக்க வேண்டும் என்கிற நிலைமை எல்லாம் வரும்அது அந்த ஆசி எனக்கு உண்மையாகவே நல்ல பெருத்த ஆசிதான் அதை நான் ஏற்றுக் கொள்ளுகிறேன்மற்றபடி நம்மவர்களுக்கும் கொஞ்சம் ஏதாவது குறிப்புச் சொல்லணும்ஏன்னாஇன்றைய தினம் சுவாமியைப் பார்த்த உடனே இவன் அடியோடு பக்தனாகிவிட்டான் என்று கருதிடுவார்கள் ரொம்பபேர்அப்படி நீங்கள் ஒருத்தரும் கருதக்கூடாதுஉதாரணமாக உங்களுக்குச் சொல்லுகிறேன்.

 நான் 10 - 20 வருஷகாலமாகவே உங்களுக்குத் தெரியும் காங்கிரசைப் பொறுத்த வரையிலும் நான் மாறுபாடான கருத்தைக் கொண்டவன்,பல துறைகளிலே கண்டித்து வருகிறவன்பல துறைகளிலே நமக்கு ஆக வேண்டிய காரியங்கள் பல இருக்கின்றனஇது காங்கிரசினுடைய அடிப்படையே உத்தியோகம்தான்உத்தியோகமென்கிறதையெல்லாம் ஒரு பார்ப்பனருடைய நலத்துக்காகத்தான்வடநாட்டாருடைய ஆதிகக்கத்துக்காகத் தான் இருக்கிறது என்பதை மக்களிடையே விடாமல் எடுத்து சொல்லி வருகிறேன்உங்களுக்கு யாவருக்கும் தெரியும்அந்த காங்கிரசுக்கு நம் நாட்டிலே தலைவராய் இருந்துக்கொண்டு அந்த அரசாட்சியை நடத்துகிறார் காமராசர்நான் காமராசரை ஆதரிக்கலியாஅவரைப் பற்றி நான் வாழ்த்தவில்லையாஇல்லேநான் வெற்றி வேண்டும் என்று கவலைப்படவில்லையாஎதனாலேகாங்கிரஸ் ஒரு பக்கமிருந்தாலும் அவர் நமக்கு வேண்டியவர்நம்ம கருத்துக்களை அவர் கூடுமானவரைக்கும் செய்யக்கூடியவர்சரிஅதே மாதிரி சுவாமிகளுடைய வேறு மற்ற பல கருத்துக்கள் எப்படி இருந்தாலும்நமக்கு அதைப் புரிந்து கொள்ள முடியாமல் போய்விட்டாலும்ஏதோ இப்ப நமக்காக என்ன கொள்கைகளோ என்னா நமக்கு தேவையோ அவைகளுக்கு அடிகளார் முன் நிற்கிறார்கள்.

நம்ம நாட்டிலே பல அடிகளார் உண்டுஏன் மற்றவர்கள் முன் வரவில்லைஅதை நீங்கள் பார்த்தால் சிந்தித்தால் உங்களுக்குத் தெரியும் . அது பெரிய பதவிஅந்தப் பதவிக்கு உள்ள பெருமை எல்லாருக்கும் நமக்கு எல்லாம் தெரியும்அதை அடிகளார் பாதுகாத்து கொண்டு நம்முடைய காரியங்களுக்கெல்லாம் ஆசி கூறவும்இன்றைய தினம் அருள் கூர்ந்து அருளினார்நீங்கள் எடுத்துக் கொள்ளுகிற இந்த இரண்டொரு காரியத்திற்கு நான் எந்த நிலைக்கும் கூட இருக்கிறேன் என்றுஇதற்கு மேலே எனக்கு என்ன வெற்றி வேண்டும்நம்மவர்கள் சிந்திக்க வேண்டும்அப்படிப்பட்ட அடிகளாருடைய ஆசியும் அதற்கு வேண்டிய ஆதரவும் நமக்கு இன்றைய தினம் கிடைத்திருக்கிறதுமுதலாவதாக ஜாதியைப் பற்றி எடுத்துச் சொன்னார்கள்நம்முடைய இந்த 78 வருஷத்தில் நம் தொண்டு பெரும்பாலும் ஜாதியைப் பற்றி இருக்கும் என்று சொன்னேன்ஏன் அப்படிச் சொன்னேன்நீங்கள் சிந்திக்க வேண்டும்.

நான் நினைக்கிறேன்தவறும் இருக்கலாம்ஒரு சமயம் இந்த ஆண்டும் - காமராசரே பதவிக்கு வருவார்காங்கிரஸ்காரர்கள் வெற்றி பெறுவார்கள்அதில் ஒன்றும் சந்தேகம் இல்லைபதவிக்கு காமராசரே வரக்கூடும் (கைதட்டல்). அவர் பதவிக்கு வந்தால்அந்த சமயத்திலே நமக்குக் கொஞ்சம் ஆறுதல் இருக்கும்அதிகமாக நமக்கு கேடு செய்கிற அந்த ஸ்தாபனத்துடைய பழக்கம் போல இவர் காலத்திலே தமிழர்களுக்குப் பெருங்கேடு ஏற்படும் என்று நான் நினைக்கவில்லைஅப்படி இல்லை என்று இருக்கிற போது நமக்கு அதை சமாளிக்கிற தொண்டு இல்லாமல் நம்ம வேலையை நாம் தாராளமாகப் பார்க்கலாம்ஏதோ நமக்கு தோன்றிய காரியங்களைச் செய்கிறோம்.

அதற்கு அரசாங்கத்தின் மூலம் தொல்லை வராதுநாம்நேராக அரசாங்கம் தொல்லை கொடுக்கும்படியான அளவிலே அப்படிப்பட்ட காரியத்துக்குப் போவதாயிருந்தால்வேறு யாராவது வந்திருக்கிற காலத்திலே நாம் போகலாம்நம்ம காரியத்தைச் செய்ய அவர்கள் இடம் கொடுக்கமாட்டார்கள்.

ஆனதினாலே அவர்களோடு வாதாடலாமென்று ஒருக்கால் காமராசரே வருவாரேயானால் அவர்கள் காரியத்துக்கு நாம் தொந்தரவுக்கு போகாமே இருப்போமேயானால்நம்ம காரியங்களைச் செய்வதற்கு நமக்கு போதிய வசதி இருக்கும்அப்படிப்பட்ட வசதியைப் பெரும்பாலும் இந்த ஜாதியை ஒழிப்பதற்குப் பயன்படுத்திக் கொள்ளலாம்மற்றும் இன்னொன்றை சொல்லியிருக்கிறேன்.

அதாவது நம்முடைய மக்களுக்கு அரசியல்கல்வி முதலிய ஸ்தாபனங்களிலே விகிதாச்சாரமான இடம் கிடைப்பதற்கு வேலை செய்யலாம்கிளர்ச்சியையும் செய்யலாம்.
(கைதட்டல்அந்தக் கிளர்ச்சியும் செய்யப்படும்.

அப்பொழுது நான் நினைக்கிறேன்அதிகமான தொல்லை வராதுவந்தால் பார்த்துக் கொள்ளுவோம்நமக்கு செய்கிறதுக்கு ரொம்ப வசதியிருக்குதுஜாதியை ஒழிப்பதற்காக நாம எடுத்து கொள்ளுகிற முயற்சிகளிலே அடிகளார் போன்றவர்களுடைய ஆதரவு இருந்தால் எவ்வளவோ காரியம் நடக்கும்எதிர்ப்பும் குறையும்எளிதிலே முடியும்இப்படி எல்லா வசதிகளெல்லாம் உண்டுஅந்தக் காரியத்திற்கு அவர்கள் முன் நிற்கிறார்கள்அடிகளாரைப் போல பலர் இருக்கிறார்கள் என்று சொன்னேன்அவர்களெல்லாம் இதில் காதிலே கூட போட்டுக்க மாட்டார்கள்என்னத்துக்கு வீண் தொந்தரவுஏதோ நம் வேலையைப் பார்க்கலாம் என்றுஅடிகளார் துணிந்து இருக்கிறார்கள்ஏதோ தன்னாலான அளவுக்கு ஒரு திருத்தம் செய்யலாம் என்கிற உணர்ச்சி அவர்களிடத்திலும் இருக்கிறதென்பதை நான் உணருகிறேன்இல்லாவிட்டால் அந்த மரியாதையோடு அந்தப் பதவியிடயே இன்னும் விளம்பரமாகவே இருக்கும்படியாக நடந்து கொள்ள எளிதிலே முடியும்நடந்து கொள்ளுவதும் சௌகரியம் தான்.

ஆனால் அந்தத் தகுதியை எதிர்பாராமல் அதுக்குண்டான மற்ற காரியங்களை எதிர்பாராமல் ஏதோ இந்தப் பதவியைக் கொண்டு என்ன செய்யமுடியும்பலன் என்னாஅதை அவர்கள் முக்கியமாகக் கருதி இருப்பதினால்தான் நம்முடைய இந்த முக்கியமான சங்கதிக்குத் தம்மாலானதை செய்யத்தயாராய் இருக்கிறேன் என்று அவர்கள் அருள் கூர்ந்தார்கள்அது நமக்கு மிகவும் வெற்றிதவிர நம்மவர்களுக்கும் நம்முடைய பெயரை பின்பற்றுபவர்களுக்கும் நாம் எந்தநிலைமைக்கு வந்திருக்கிறோம் என்பதை நீங்கள் உணரவேண்டும்.

புரட்சியும் கிளர்ச்சியும் சுலபமான காரியமல்ல

அடிகளார் போன்றவர்களுடைய ஆசி எல்லாம் பெரும்படியாகவும் மற்றும்மற்ற அனேகர்களுடைய ஆசியும் - நல்லெண்ணம் நம்மீது வரும்படியாகவும்ஆன நிலைமைக்கு நாம வந்திருக்கிறோம்நாம் வருவதென்றால் லேசல்லஉங்களுக்குத்தெரியும்நாம் பெரிய கிளர்ச்சி செய்கிறோம்புரட்சியும் கிளர்ச்சியும் அவ்வளவு சுலபமான காரியமல்லஆனால் நம் நாட்டிலே ரொம்ப சுலபம் என்று சொல்லும்படியான அளவுக்கு இன்றைய நிலைமை வந்திருக்கிறது என்று சொன்னால் அதற்கு அடிகளாரைப் போன்றவர்களுடைய ஆமோதிப்பும் மற்றும் பலருடைய மனம் திருந்துவதும்ஆகியவை பெரிய காரியங்கள்இதைக் கொண்டே நீங்கள் பெருமை அடையவேண்டும்என்னுடைய கழகத் தோழர்களுக்கு நான் சொல்லுகிறேன்நாம் செய்திருக்கிறது மிக கொஞ்சம் தான்செய்யவேண்டிய காரியம் ரொம்ப இருக்கிறதுநான் பெருமையாகச் சொல்லலேதற் பெருமையாகச் சொல்லலேநாம் கருதுகிற காரியத்தைச் செய்ய நம்ம நாட்டிலே வெகு கொஞ்சம் பேர் தான் இருக்கிறார்கள்.

தவம் என்றால் என்னநாம் பிரவேசித்திருக்கிற காரியம் நாம் மேற்கொண்ட காரியங்களை செய்வதற்கு ஆதரிப்பதற்கு நம்ம நாட்டிலே மிக கொஞ்சம் பேர் தான் இருக்கிறார்கள்இன்னும் கொஞ்ச நாள் போனால் அதிகமாகும்அதிலே எனக்குச் சந்தேகம் இல்லைஆனால் இந்த கொஞ்சம்பேர்இருக்கிற நிலையிலே அடிகளாரைப் போன்றவர்களுடைய ஆசி ஆதரவு எல்லாம் நாம் அடைகிறோம் என்றால்நாம் எவ்வளவோ முன்னுக்கு வந்திருக்கிறோம் என்று தான் நீங்கள் யாவரும் கருத வேண்டும்இதை வேறு யாராவது அந்த வைதீக முறையிலே பேசுவதாயிருந்தால் கட்டாயம் நம்மை பெரிய தவசிரேஷ்டன் என்று சொல்லுவார்கள்எனக்கு தவத்திலே நம்பிக்கை இல்லைதவம்கிற வார்த்தைக்கு இதுவரைக்கும் இன்னும் தமிழிலே என்னா இருக்குதுன்னு எனக்கு யாரும் சொல்லலேஏதாவது எப்போதாவது வெளியாகும்.

அந்த தவம் என்று காட்டப்படுகிற இடங்களிலெல்லாம் பகுத்தறிவுக்கு ஒப்ப அதை யாரும் புனைக்கலேஅந்த தவத்தை ஏதோ தவம் செய்தான் அவனுக்கு இயற்கைக்கு மாறான அனேக காரியங்கள் ஏற்பட்டது என்கிற மாதிரியிலேஅந்தப் புராணத்திலே அந்தத் தவத்தைக் காட்டப்பட்டிருக்கிறதே தவிரதனித் தமிழிலே தவம் என்றால் என்னா அதுக்கு வர்ர அந்தப்பலன் வரம் - கிரம் என்று சொல்லுகிறார்களே அதுக்கு எல்லாம் என்ன பொருள் என்பதெல்லாம் எனக்கு தெரியலே விளங்கிக் கொள்ள முடியலே.  நான் நினைக்கிறேன்ஒரு பெரிய வரப்பிரசாதம் தவசிரேஷ்டன் என்று சொல்வதனால் இயற்கைக்கு மேலான பலம் உடையவன் என்று சொல்லலாம்சாதாரணமாய் மற்றக் கழகங்களையும் மற்ற ஸ்தாபனங்களையும் எடுத்துக் கொண்டு பார்க்கிற போது நமக்குள் பேசிக் கொள்ளுகிறோம்அதைத்தான் தற்பெருமை என்று கருதாதீர்கள்.

 எனக்கு தோன்றியதை சொல்லுகிறேன்மற்ற ஸ்தாபனங்களை விட நாம் கொஞ்சம் அதிகமான பலமுடையவர்களாக இருக்கிறோம்ஏன்துணிந்து நம்முடைய கருத்துக்களை எடுத்து சொல்லுகிறோம்துணிந்து ஏதோ செய்ய வேண்டியதைச் செய்கிறோம்சமாளிக்கிறோம்இதுதான் நாம் சொல்றதுஇது எதனாலேஅவர்கள் அந்த வைதீக முறைப்படி சொல்லுவது அவர்கள் செய்த தவத்தினாலே என்று அதுக்கு ஏதோ கடவுள் இறங்கி கொடுத்த வரத்தினாலே என்று நாம் தவத்தையும் இன்னதென்றே புரிந்துக் கொள்ள முடியலேவரம் என்றால் என்ன என்றே தெரியாதுஎப்படி கடவுள் கொடுக்கிறார் என்பதையும் நான் இன்றும் புரிந்துக் கொள்ளக்கூடிய சக்தியை அடையவில்லைஆனாலும் நான் என்ன சொல்லுகிறேன்மக்களுடைய ஆதரவு அவ்வளவு பெற்று விட்டோம் அதுதான்.

தவம் என்று சொல்லுவதும் வரப்பிரசாதம் என்று சொல்லுவதும் நாம் மக்களுடைய ஆதரவு பெற்றுவிட்டதுஅதிக பலத்தைக் கொடுக்கக் கூடியதுயாரும் அவ்வளவு சுலபமாக எதிர்க்கலாம் என்று கருத முடியாத அளவுக்குஇது நம்முடைய கொள்கையினாலே என்று இல்லாவிட்டாலும் ஒன்று சொல்லுகிறேன்நம்முடைய ஒழுக்கத்தினாலே என்று சொல்லுவேன்நம்மிடத்திலே மற்றவர்கள் சந்தேகப்படுவதற்கு இடமில்லாமல் நமக்கு துர் எண்ணம் கற்பிக்க வசதி இல்லாமல்தப்போ - தவறோ ஏதோ இருந்தாலும் நாம் மனதார நல்ல எண்ணத்தோடு நம்மாலானதைச் செய்துக் கொண்டு வருகிறோம் என்கிற ஒரு கருத்தைப் பொது மக்களிடையிலே பரவியிருப்பதினாலே சிலர் பயித்தியக்காரத்தனம் என்று நம்மீது குறை சொன்னாலும்ஏதோ அப்படி நினைக்கிறான் என்று தள்ளிவிடுகிறார்கள்.

அது நமக்கு பெருத்த இடையூருக்கு ஆளாவதில்லைஅந்த நிலைதான் நமக்கு கொஞ்சம் பலன் இருக்குது என்று அந்த பலனைதான் வேறு வகையிலே தவம் என்று சொல்லிக் கொள்ளுவதுஇதெல்லாம் இல்லாவிட்டால் இரணியன் செய்தஇராவணன் செய்த பல ஆயிரக்கணக்கான ஆண்டுகள் தவசுகள் எல்லாம்நம்ம அறிவின் மூலம் ஒப்புக் கொள்ள முடியுமாகதையிலே இதை எல்லாம் பார்த்தால் அவ்வளவு பலசாலியாக இருந்திருக்கிறான்அதுக்குக் காரணம் மக்கள் ஆதரவுஇவைகள் தான்அது போன்ற அளவிலே நாம் முன்னேற முடியும்நமக்கு இம்மாதிரியான பெருத்த ஆசிகளெல்லாம் கிடைத்திருக்கிறதுஇந்த நல்ல நேரத்திலே நான் தெரியப்படுத்திக் கொள்வது நம்முடைய மக்களிடத்திலே ஒழுக்கம் இருக்க வேண்டும்உங்களுக்குப் பக்தி இருந்தாலும் சரிஇல்லா -விட்டாலும் சரிஅது உங்களுடைய இஷ்டம்நான் சொல்லுகிறேன் என்னுடைய அருமை நண்பர்களுக்குச் சொல்லுகிறேன்தோழர்களுக்குச் சொல்லுகிறேன்,

உங்கள் ஒவ்வொருவருக்கும் ஒழுக்கம் இருக்க வேண்டும்பக்தி இருப்பதைப் பற்றி அது உங்களுடைய இஷ்டம்பக்தி அவனவன் சொந்த காரியம்நான் பக்தி இல்லாதிருந்தால் உங்களுக்கு ஒரு கெடுதியும் ஏற்படாதுஎனக்குதான் கெடுதி ஏற்படும்நான் பெரிய பக்திவானாக இருந்தால் எனக்கு மோட்சம் கிடைக்கலாம்உங்களுக்கு ஒண்ணும் நடக்காதுஆதலினாலே பக்தி அவனவனுடைய சொந்தக்காரியம்

ஒழுக்கத்தின் மேன்மை

ஒழுக்கம் அப்படி அல்லமற்றவர்களைப் பாதிக்கக் கூடியதுநாம் ஒழுக்கமாக நடந்து கொள்ளுவதின் மூலம் மற்றவர்களுக்கு நன்மையுண்டுநாம் ஒழுக்க ஈனர்களாக நடந்து கொள்ளுவதன்மூலம் மற்றவர்களுக்கு அது தொந்தரவு தொல்லை தரும்ஆனதினாலே பக்தியைக்காட்டிலும் ஒழுக்கத்தைப் பிரதானமாக நினைத்து ஒவ்வொரு மனிதனும் மற்றவனிடத்திலே அன்பும் மற்றவர்களிடத்திலே அருளும் காட்டுகிறவர்களாக இருக்க வேண்டியதுஇது நம்முடைய தொண்டினுடைய கருத்தே அதுதான்நாம் செய்யப் போகிற தொண்டினாலே ஏற்படவேண்டிய பலன்எல்லாரும் ஒருவருக்கொருவர் அன்புஒருவருக்கொருவரிடத்திலே அருள் இருக்கவேண்டும்அப்படி ஏற்படுகிற போது ஒருவருக்கொருவர் உயர்வு - தாழ்வு என்று நினைப்பார்களா?

ஒருவரை ஒருவர் வஞ்சித்து மோசடி செய்ய நினைப்பார்களாஅது இல்லைஆதலினாலே நாம் அந்த அடிப்படைக்காகவே போராடுகிறோம்.அது நம்மிடத்திலே இல்லாவிட்டால் நம்முடைய போராட்டத்துக்கு என்ன மரியாதைநீங்கள் நன்றாய் உணருங்கள்நாம் செம்பிடு வித்தைக் காரர்கள் அல்லநாம ஏமாற்றுகிறவர்கள் அல்லஏதோ நம்ம மனசிலே தோன்றின உண்மையை வைத்துக் கொண்டு சரியாகவோ,தப்பாகவோ போராடுகிறோம்அப்படிப் போராடுகிறவர்கள் தங்களைதாங்களேயாவதுசரியாகவே நாம போராடுகிறோம் என்கிற எண்ணம் தங்களுக்காவது வரவில்லையானால் அப்புறம் அந்த போராட்டத்துக்கு என்ன பலம் இருக்கும்ஆதலினாலே தங்கள் - தங்களுக்குபலம்வருவதற்குஒவ்வொருத்தர் நாம ஒழுக்கமுடையவராக இருக்க வேண்டும்மனிதனுக்குண்டான மற்ற குணம் நம்மிடத்திலே இருக்கும்கோபமிருக்கும்ஆத்திரமிருக்கும்பலாத்காரமிருக்கும்ஏதாவது நம்மை அறியாமலே வரலாம்அல்லது அதுதான் இருக்க வேண்டுமென்று கூட சில சமயத்திலே தோன்றலாம்ஆனாலும் ஒழுக்கத்துக்கு மாற்றாக சமாதானம் சொல்ல முடியாது.


ஒழுக்கத்துக்கு அதிக தூரம் நீங்கள் தேட வேண்டியதில்லைஒழுக்கமென்றால் என்ன என்று வாதாடுவார்கள்மலைப் பிரதேசத்துக்கு போய் கண்டுபிடிக்க வேண்டியதில்லைநாம் மற்றவர் நம்மிடத்திலே எப்படி நடந்து கொள்ள வேண்டும்மற்றவன் நம்மிடத்திலே எப்படி நடந்துக் கொண்டால் நாம் மகிழ்ச்சி அடையவோதிருப்தி அடையவோ ஆகக்கூடும் என்பதைத் திருப்பிப்பார்க்க வேண்டும்அப்படி நாம் மற்றவர்களிடத்தில் நடந்துக் கொள்ள வேண்டும்அவ்வளவுதான்மற்றவன் திருப்தி அடையும்படியாக நாம் நடக்க வேண்டும்அதுக்கு ஒண்ணும் திட்டம் போட்டுக்க வேண்டாம்ஒவ்வொருத்தருக்கும் ஒவ்வொருஊருக்கும்ஒரு திட்டமாக இருக்கும்அதைப் பற்றியில்லேமனித சமுதாயத்திலேநம்மிடத்திலே காண வேண்டியது முக்கியமானது அதுதான்ஆணாகட்டும் - பெண்ணாகட்டும் கைக்கொள்ள வேண்டியதுஇம் மாதிரியான சந்தர்ப்பங்களிலே நீங்கள் எனக்குப் பாராட்டுதல் என்னவென்றால் 77 வயசு கடத்திட்டேன், 78 வயதிலே புகுகிறேன்.

78ஆவது வயசிலே நல்ல வெற்றிகரமாக இருக்க வேண்டும் என்று நீங்கள் 
விரும்புகிறீர்கள் என்பது தான் வளர்ச்சிக்கு அறிகுறி.


நூல் - பெரியாரின் சிந்தனைத் திரட்டு
தொகுப்பாசிரியர் - து.மா.பெரியசாமி

Comments

Popular posts from this blog

தமிழ் காட்டுமிராண்டி மொழி ஏன்? எப்படி? -தந்தை பெரியார்

ஜாதி ஒழிப்பு மாநாட்டில் பெரியார் உரை!

தந்தை பெரியார் விதைத்த விதை